Sunday 10 June 2007

நேற்று நான் பார்த்த தமிழ்ப்படம்

இதுவரை தமிழ் படம் எதிலும் நடித்திராத கதாநாயகன், கதாநாயகி, கதாநாயகனின் நண்பன், பாட்டி, வில்லன்கள் என அனைவருமே புதுமுகங்கள். நியுயோர்க் நகரத்தில் தான் படப்பிடிப்பு நடந்ததாக சொல்கிறார்கள். படம் விறுவிறுப்பாக , பிரமாண்டமாக, கிரபிக்ஸ் எல்லாம் சேர்த்து எடுத்திருந்தார்கள்.

கதாநாயகன் ஊருக்கு நல்லது செய்யும் ஒருவர். ஒரு காதலி, காதலில் ஒரு ஊடல்,
கதாநாயகன் தான் தன் தந்தையை கொன்றான் என தப்பாக நினைத்து கதாநாயகனை கொல்ல முயலும், காதலை பிரிக்க முயலும் நண்பன். படத்தின் இறுதியில் உண்மை அறிந்து கதாநாயகன் இக்கட்டில் இருக்கும் போது அவனை காத்து, அவனுக்காக உயிரை கொடுக்கிறான்.
அதைவிட கதாநாயகனுடன் தொழில் போட்டி காரணமாக கதாநாயகனை கொல்ல நினைக்கும் ஒரு வில்லன்-1. கதாநாயகனை தற்செயலாக பிடித்திருந்த துஸ்ட சக்தியை விரட்டியடிக்க அது வில்லன் - 1 உடன் இணைகிறது. இதனால் வில்லன் -1 அமனுஸ்ய சக்தியை பெறுகிறான், கதாநாயகனை கொல்ல புறப்படுகிறான். இதற்கிடையே கதாநாயகனின் தாத்தா(?) வை கொன்ற ஒரு வில்லன்-2 பொலிசுக்கும் டிமிக்கி கொடுத்து தப்பி திரிகிறான். ஒரு கட்டத்தில் பொலிசுக்கு தப்பி ஓடும் போது திண்மங்களை தனிதனி மூலக்கூறாக்கும் இயந்திரத்தில் தவறி விழுந்து தூள் தூளாகி, இறுதியில் நிரந்தரமற்ற, வேண்டிய நேரம் மனித உருவும் ஏனைய நேரம் மணல் புயலாகவும் மாறும் திறமையை பெற்று விடுகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் அவனுடன் கதாநாயகன் சண்டையிட்டு நீரில் கரைய செய்து விடுகிறான். ஆனால் அதில் இருந்து மீண்டு வரும் அவனும் வில்லன் -1 உம் சேர்ந்து கதாநாயகனின் காதலியை கடத்தி பெரிய உயரமான இடத்தில் கட்டி தொங்கவிட்டுவிடுகிறனர்.
இருவருடனும் கதாநாயகனும், நண்பனும் சண்டையிட்டு, நண்பன் கதாநாயகனுக்காக உயிரை கொடுக்க, வில்லன் - 1 அழிக்கப்பட, மற்றைய வில்லன் திருந்தி நல்வழிக்கு வருகிறான். காதலர்கள் இணைகிறார்கள்.

படம் எப்படி?

இந்த படம் எது என்று அறிய ஆவலா?

Spiderman 3 <-(படத்தின் பெயரை ஹைலைட் செய்து பார்க்கவும் :) )

அது தான் படத்தின் பெயர்.

5 comments:

said...

sir, i have created a new blog. im new to this kind of thing. i dont know how to add my blog in the tamilmanam.com website. when i given the url-ragutamilthumbi.blogspot.com it says not written in unicode or unicode has roman letters, i wrote the poems(!) in ezil unicode website and copied and pasted in my blog. what to do? please help

said...

படம் பெயர் ஏன்ன.........?

said...

//sir, i have created a new blog. im new to this kind of thing. i dont know how to add my blog in the tamilmanam.com website. when i given the url-ragutamilthumbi.blogspot.com it says not written in unicode or unicode has roman letters, i wrote the poems(!) in ezil unicode website and copied and pasted in my blog. what to do? please help //

இரகுநாதன் நீங்கள் இதைபற்றி தமிழ்மணம் நிர்வாகத்திடம் மின்னஞ்சல் மூலம் வினாவி பாருங்கள்.
அல்லது ஈ கலப்பை, தமிழ்விசை 99 பொன்ற தமிழ் விசைப்பலகைகளை பயன்படுத்திபாருங்கள்.


மோகன் காந்தி நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிவிலேயே பதில் உள்ளதே

said...

Hi Vijay thanks for the Spiderman review in tamil vesion

said...

:)) Good Ones.