Saturday 14 July 2007

கோடைகால சுற்றுலா செல்பவர்களுக்கு

ஏற்கனவே வட அமெரிக்க நாடுகளான கனடா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக அளவில் உணவு மூலம் பரம்ப்பலடைந்து நோயை ஏற்படுத்தும் Escherichia coli O:157: H7 பற்றி எழுதியிருந்தேன்.

இது பொதுவாக சரியாக சமைக்கபடாத இறைச்சி, பால், நீச்சல் தடாகம், உணவை சுத்தமாக கையாளாமை போன்றன முக்கிய காரணங்களாகும்.

அண்மையில் கனடாவில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்ட கீரைமூலம் இந்த நோயாக்கி பரவியமை அறியப்பட்டுள்ளது.

கோடைகால விடுமுறை, மற்றும் வார இறுதியில் சுற்றுலா செல்பவர்கள் இந்த விடயத்தில் மிகவும் கவனாமாகா இருக்க வேண்டும்.

அண்மையில் கனடா தினத்துக்கு கனடாவின் ஸ்காபுரோ பகுதியில் நடைபெற்ற ஈழத்து மாணவர்களது ஒன்றுகூடலில் கலந்து கொண்டவர்களில் சிலர் Escherichia coli O:157: H7 பாதிப்புக்கு உட்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை சிபிசி இணையம் மூலம் அறிய முடிந்தது. பாதிக்கப்பட்டவ்ர்களில் ஒருவர் கடுமையான சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த நோய்க்கு காரணமான உணவு எது என இதுவரை கண்டறியப்படவில்லை.

கோடையில் சுற்றுலா செல்பவர்கள் உணவு விடயத்தில் மிக கவனமாக இருத்தல் அத்தியாவசியமானது.

0 comments: