Wednesday 23 September 2009

நாம் எதை உண்கிறோம்? எவ்வளவு உண்கிறோம்? பகுதி 1?

உணவு, உடை, உறையுள் இம்மூன்றும் மனிதனின் அடிப்படைத்தேவைகள். இவற்றில் உணவு ஏனைய இரண்டையும் விட அதி அத்தியாவசியமானது. நாம் எப்படிப்பட்ட உணவை உண்கிறோம், எவ்வளவு உண்கிறோம் என்பதில் எமது உடல் நலன் தங்கியுள்ளது.

உணவு, அவற்றின் ஊட்டச்சத்துக்கள், எந்த வகையான உணவுகள் உடலுக்கு அதிகம் நன்மை தருவன, எப்படிப்பட்ட உண்வை நாம் தவிர்க்க வேண்டும்? என்பனவற்றி தெளிவான அறிவு எம்மிடையே இருக்கிறதா? இந்த கேள்விகளுக்கு ஆம் இல்லை என நான் ஒரு பதிலை சொல்வதிலும், வாசிக்கும் ஒவ்வோருவரும் உங்களை நீங்களே கேட்டுகொள்ளுங்கள்.

ஊரில் உள்ள ஒரு சிலரின் கணிப்பில் உடல் மெலிவாக இருக்க கூடாது, உடல் மெலிவாக/ அல்லது ஒருவரின் வயதுக்கும், உயரத்தும் ஏற்ற நிறையில் இருப்பவர்களை பார்த்து சிலர் கேட்கும் கேள்வி என்ன ஒழுங்காய் சாப்பிடுறேல்லியோ என்பதாக தான் இருக்கும். என்னையே பலர் பல முறை கேட்டுள்ளார்கள். சிறுவயது முதலே நான் மரக்கறி உணவுகளும், பாலும் மட்டுமே உட்கொண்டு வந்துளேன். ஒரு கட்டத்தில் முட்டை சாப்பிட பழகினேன். அதற்கு அப்பால் போனதில்லை. நான் மெலிவாக இருப்பதாக சுட்டிய பலர், உப்பிடியே மெலிஞ்சு போய் இருக்கிறதுக்கு, ஏன் இறைச்சி மீன் என்பவற்றை சாப்பிட்டு உடலை தேற்ற சொல்லியும் ஆலோசனை சொல்லுவார்கள். அப்படி கேட்பவர்கள் அளவுக்கு அதிகமாக உண்டு, உடல் கொழுத்து, உடல் கொலஸ்திரோல் அளவு கூடி அதற்கு மருந்து உட்கொள்வர் அல்லது சலரோகம்/ நீரிழிவு நோய்க்கு மருந்து உட்கொள்வர். இந்நோய்கள் எல்லாம் கணக்கு வழக்கின்றி உண்டதன் விளைவு என்பதை ஏனோ சிந்திப்பதில்லை என்று சொல்வதிலும், அவர்களுக்கு எந்த உணவுகள் உடலுக்கு நல்லவை, எவை பாதகமானவை எனும் போதிய அறிவின்மை தான் காரணம் என நினைக்கிறேன்.

அதற்காக இறைச்சி, மீன் என்பவை உடல் நலனுக்கு உகந்ததல்ல என்று சொல்லவில்லை. ஆனால் இறைச்சி, மீன் முட்டை என்பவற்றை எவ்வளவு உண்கிறோம் என்பதில் தான் பிரச்சனையே உள்ளது.

இணையத்தில்/வலைப்பதிவில் எழுதும் பலரும் ஆங்காங்கு எழுதியதில் இருந்தும், நேரடியாக நண்பர்கள், உறவினர்களுடன் உரையாடும் போதும் கேட்டவற்றில் இருந்து

இறைச்சி, மீன் கறி இருந்தால் சந்தோசமாக சாப்பிடுவோம், அதிகம் சாப்பிடுவோம்.
இறைச்சி/ மீன் கறி இருந்தால் வேற கறி ஒண்டும் தேவையில்லை.
மரகறிச் சாப்படு கண்ணிலையும் காட்ட கூடா
மரக்கறி சமையல் எண்டா 2-3 கறி வைக்க வேணும். அதாற்கு நிறைய நேரம் எடுக்கும். ஆனால் இறைச்சி/ மீன் எண்டா ஒரு கறியோட வேலை முடிஞ்சுது.
மரக்கறி சாப்பிட்டா வயிறு முட்டா கிடக்கும்.
...

.....

இப்படி பல கருத்துக்கள்.

உடல் நல ரீதியாக பார்த்தால் தனியே இறைச்சியும் சோறும் உண்பது உடல் நலனுக்கு உகந்ததல்ல.

ஊரில் இருக்கும் போது எனக்கு மிக நெருக்கமான உறவினர்கள், கொஞ்சம் வசதியானவர்களும் கூட. வாரத்தில் 5 நாட்கள் அவர்கள் வீட்டில் மீன் இறைச்சி போன்ற உடனவுகள் இருக்கும். கொழி இறைச்சி கறி, மீன் கறி,மீன் பொரியல் இறால் பொரியல் என எல்லாம் ஒரே நாளில் இருக்கும் இப்படியே சாப்பிட்டு அந்த வீட்டின் ஆண்களில் பலருக்கும் 42 + inches இல் தான் காற்சட்டை இருக்கும், சேட், அல்லது ரீ சேட் வந்த வேணும் என்றால் XXL அளவில் இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் உடல் பருமனை தாங்க மாட்டாமலும் அதி உயர் குருதி அழுத்தம் காரணமாக அவர்களாகவே உணவு பழக்கத்தில் மாற்றம் கொண்டு வந்தார்கள்.




படம் பெறப்பட்டது : http://www.tampabay.com/features/food/


இதை ஏன் சொல்கிறேன் என்றால் எந்த கவனமும் இல்லாமல், எங்களிடம் போதுமான வசதியிருக்கிறது ஆகவே மேலே சொன்னது போல் உண்பது தான் மதிப்பு என நினைத்து அளவுக்கு அதிகமாக உண்டு, பணக்கார வருத்தங்கள் என்று சொல்கிற உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு/சலரோகம் போன்றவற்ரை வாங்கி, அதன் காரணமாக பல உணவுகள் உண்ன முடியாது போய் வாயை கட்டி வைத்திருப்பதிலும் நாளாந்தம் என்ன உண்கிறோம், எவ்வளவு உண்கிறோம் என்பதை கவனித்து செயற்படுவது வாழ் நாள் பூராகவும் அனைத்து உணவுகளையும் எந்தவித பிரச்சனையும் இன்றி உண்ண வழிசமைக்கும்.


எவ்வாறு உணவு பழக்கத்தை மறு சீரமைக்க வேண்டும் என்பதை பார்க்க முதல்

எமது உடல் நிறை சரியான அளவில் இருக்கிறதா? அல்லது குறைவாக இருக்கிறதா? அல்லது சற்று அதிகமாக இருக்கிறதா? மிக அதிகமாக இருக்கிறதா? இதை எவ்வாறு கணக்கிடுவது?

எமது உடல் நிறை சரியாக இருக்கிறதா இல்லையா என்பதை கணிக்க உடல் திணிவு சுட்டி பயன்படுகிறது (Body Mass Index -BMI)

உடல் திணிவு சுட்டியை எவ்வாறு கணிப்பது?

மிக சுலபம்.

உடல் திணிவு சுட்டி = உடல் நிறை (கிலோ கிராமில்)/ {உடல் உயரம் * உடல் உயரம் (மீற்றரில்)}

அதாவது உங்கள் உடல் நிறையை (கிலோ கிராமில்) உங்கள் உயரத்தின் (மீற்றரில்) வர்க்கத்தினால் பிரிக்கும் போது வரும் இலக்கம் தான் உடல் திணிவுச்சுட்டி.


உங்களுக்கு கணிக்க சிரமமாக உள்ளதா இந்த இணையத்தில் உங்கள் உயரத்தையும், நிறையையும் கொடுத்து உங்கள் உடல் திணிவு சுட்டியை பெற்றுக்கொள்ளுங்கள்.

இந்த உடல் திணிவு சுட்டியின் அளவை கொண்டு உடல் நிறை பிரிவுகளை வகுத்துள்ளனர்.

மிக குறைவான உடல் நிறை = <16.5

குறைவான உடல் நிறை = 16.5 - 18.5

சாதாரணம் = 18.5- 25

கூடிய உடல் நிறை = 25- 30

அதி கூடிய உடல் நிறை வகுப்பு I(Obese Class I) = 30-35

அதி கூடிய உடல் நிறை வகுப்பு II (Obese Class II)= 35 - 40

அதி கூடிய உடல் நிறை வகுப்பு III (Obese Class III)= > 40

உங்கள் உடல் திணிவு சுட்டி 25 க்கு அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது என்றால் நீங்கள் வேண்டா விருந்தாளிகளான உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை இலகுவில் பெற்று கொள்ளும் திசை நோக்கி போய்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உணவு பழக்கத்தை மறுசீரமைப்பது சற்று சிரமானது போல் தோன்றினாலும் உடல் நலனை, உணவை அளவுக்கதிகமாக உண்டு அதன் காரணமாக வரும் நோய்களின் பின் சில உணவுகளை முழுமையாக உண்ணாது நிறுத்துவதிலும் அளவோடு உண்ண முயல்வது மேல்.

பொதுவாக உணவு பழக்கத்தை மறுசீரமைக்க ஒரு அடிப்படை உதாரணமாக உணவு கூம்பகம்/ Food Pyramid ஐ உதாரணமாக காட்டுவர். உணவு பிரமிட் எந்த உணவுகள் அதிகம் உண்ண வேண்டும் எவற்றை குறைவாக உள்ளெடுக்க வேண்டும் என்பதை பருமட்டாக விளக்கும் ஒரு அமைப்பாகும். இந்த உணவு பிரமிடில் உள்ளடக்கப்படும் உணவுகளில், மற்றும் அவற்றை எந்த அளவுக்கு உண்ண வேண்டும் அட்டவணைபடுத்துவதில் நாடுகளுக்கு நாடு வேறுபாடுகள் உண்டு.

உதாரணமாக ஒரு உணவு கூம்பகம்/ Food Pyramid:






படம் பெறபட்ட இணையம் : http://www.ndlabs.com/weight_management

இதிலே சொல்லப்பட்ட பரிமாறல்(Serving) எனும் அளவு எவ்வளவு என்பதையும், குறிப்பிட்ட உணவுகளில் நாளாந்தம் எவ்வளவு உண்ண வேண்டும் என்பதையும் மேலும் தெளிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம்



Tuesday 15 September 2009

நான் எழுதி கிழிச்ச கதை......






வலைப்பதிவு எழுத வந்த கதை தொடர் விளையாட்டு எங்க தொடங்கி எங்க நிக்குதெண்டு தெரியேல்லை. சினேகிதி என்னையும் அந்த விளையாட்டுக்கு கூப்பிட்டுருக்கிறன் எண்டு மின்னஞ்சல் போட்டு, அரட்டையிலும் வந்து அறிவிச்சிருந்தா. போன ஞாயிற்று கிழமைக்கு பிறகு தான் எழுதேலும் எண்டு சொன்னான் ஆனாலும் சொன்ன மாதிரி எழுத ஏலாம போச்சு. சினேகிதி என்ன சொன்ன மாதிரி எழுதேல்லை எண்டும் வந்து கேட்டு போட்டா.

உண்மைய சொல்ல போனா இந்த தொடர் விளையாட்டுகள் தொடங்கினபோது என்னையும் ஆரும் கூப்பிட மாட்டினமோ எண்டெல்லாம் நினைசிருக்கிறன். ஆனா போக போக அதிலை பெரிசா ஆர்வம் இல்லம போனதோடா, ஆரும் உந்த தொடர் விளையாட்டுகளுக்கு ஒரு கிறீட்ட இடம் நிரப்புற மாதிரி ஒரு ரெம்பிளடை உருவாக்கின நல்லம் போலை இருக்கும். பேசாம அந்த இடைவெளியளை எங்கடை விசயங்களை போட்டு நிரப்பி போட்டு போகலாம். நல்ல சுகமான வேலை.

நான் வலைப்பதிய வரமுதல் ஒரு சில பதிவர்கள் சொன்னது போல ஆரம்பத்திலை இணையத்திலை தமிழ் எழுதி பழகின இடம் யாழ் இணையம். ஊரிலை இருந்த போது கருத்துகளம், வலைபதிவு எண்டது பற்றியெல்லாம் ஒண்டும் தெரியா. வேலை செய்ய போன இடத்திலை மின்ஞ்சல்கள், மேல படிக்கிறதுக்கு இடம் தேடுறதுக்கும் போற நேரம் யாழ் இணையம் எதேச்சைய பார்வையிலை வந்துது. அதிலை சின்னப்பு ஹரி எண்டு சில பேர் நல்ல முசுப்பாத்தியா கருத்துக்கள் எழுதியிருக்கிறதை வசிச்சு சிரிச்சு போட்டு போறது, ஆனா அதிலை போய் நானும் இணையலாம், கருத்தெழுதலாம் எண்டெல்லாம் தெரியா. அதோட அதுக்கு மினக்கெடவும் நேரம் இருக்கேல்லை. புலம் பெயர்ந்து வந்தாபிறகு சொந்தமா கணனியும் வாங்கி, ஓசிலை இணைய இணைப்பும் கிடைச்சா பிறகு இரவுகளிலை தனிய இருந்து பொழுது போக்காட்டேலாம, யாழ் இணைய பக்கம் போக தொடங்கி பதிஞ்சு முதாலாவது கருத்து எழுதுறேக்கிடையிலை போதும் போதும் எண்டாகி போச்சு. அப்ப யாழ் இணையம் ஒருங்குறி பாமினியிலை இயங்கினது, எழுதுறேக்கு பாமினி மின் விசைபலகை தெரிஞ்சிருக்க வேணும். ஊரிலை இருக்கேக்கை வேலைக்காக பாமினி பாவிச்சு தட்ட்ச்சியிருந்தாலும் ஒவ்வொரு எழுத்தா தெடித்தேடி தான் எழுதின்னான். யாழிலை எழுத தொடங்கேக்கை எழுத கரைச்சல் பட்டாலும் யாழிலை கருத்தெழுதுற இடத்துக்கு மேலை பாமினி விசைப்பலகையின்ர படம் இருந்ததாலை பாத்து பாத்து எழுதி ஒரளவுக்கு பாமினி விசைப்பலகை பழக்கத்துக்கு வந்திருந்திச்சு. ஒரு கட்டத்திலை சுரதா கீ மான் மென் பொருள் பற்றியும் யாழ் இணையத்திலை அறிமுகம் கிடைச்சுது, அதிலை ஆங்கிலத்திலை Amma எண்டு எழுத தமிழிலை ஒருங்குறிலை அம்மா எண்டு மொழிமாற்றி வரக்கூடிய தட்டச்சு வசதி இருந்த்திச்சு. எனக்கு பாமினிலை எழுத்தை தேடி தேடி தட்டுறதிலும், Romanished to Unicode தமிழ் கீமான் விசைப்பலகை இலகுவா இருந்திச்சு அதையே பாவிச்சு எழுதவும் தொடங்கீட்டன்.

சினேகிதி சொன்ன ஒழுங்க தலை கீழ மாத்தி போட்டன் போல சரி எப்பிடி எழுதினா என்ன வலைபதிய வந்த கதை எழுதினா சரி தானே.

யாழிலை எழுதி கொண்டிருக்கேக்கை வலைப்பூ/ வலைப்பதிவு பற்றின அறிமுகம் கிடைச்சிச்சு. யாழ் இணையத்தில் இணைஞ்சிருந்த கன பேர் அப்ப வலைப்பதிய தொடங்கி இருந்திச்சினம், அதிலை ஞாபகம் வாற ஆக்கள், தமிழினி, கவிதன், சயந்தன், குருவிகள், சண்முகி, சினேகிதி.... இப்பிடி கன பேர். சரி எல்லாரும் எழுதினம் நானும் எழுதினா என்ன எண்டு ஒரு அவாவிலை 2005 பங்குனி மாதம் யாழ் இணையம் வழங்கின .yarl.net இலையும், புளொகரிலையும் ஒவ்வொரு வலைப்பதிவு தொடங்கினன். ஒண்டிலை பொழுதுபோக்கு விசயங்களும், மற்றதிலை துறை சார் பதிவுகளும் எழுதுறதெண்டு சொல்லி கொஞ்ச நாள பதிவுகள், புகைப்படங்கள் எண்டு பதிஞ்சு கோண்டு இருந்தனான். யாழ் இணையத்திலை தான் தமிழ்மணம் வலைப்பதிவு திரட்டி பற்றின அறிமுகமும் கிடைச்சிச்சு. பிறகு யாழ் இணைய வலைப்பூ வழங்கி செயல் இழந்தப்பிறகு, எல்லாத்தையும் புளொக்கர் பதிவிலை எழுதி கொண்டு இருந்தன். அதிலையும் எல்லாருக்கும் கனக்க பின்னூடம் வர எனக்கு மட்டும் ஆரும் பின்னூடம் போடினம் இல்லை எண்டு கவலையா இருக்கும். அதிலையும் பெரும் பதிவர்கள் எண்டு சொல்லுற சில பேரிட்டை பின்னூட்டம் வாங்க வேணும் எண்டும் ஆசையா இருக்கும் ஆனா நான் யாருக்கும் போய் பின்னூட்டம் போடாட்ட எனக்கும் ஆரும் பின்னூட்டம் போட மாடினம் எண்டதும், நான் பின்னூட்டம் போட்டாலும் சிலர் திரும்பியும் பாக்க மாடினம் எண்டதும் விளங்கிச்சு. இப்பிடியிருக்கேக்கை நாடு மாற வேண்டி வந்திச்சு. சரி புது நாட்டுக்கு வந்து புது வலைப்பதிவு தொடங்குவம் எண்டு புளொக்கரிலை புதிசா பதிஞ்சு புது ஆள் மாதிரி 2007 மாசி மாதம் எழுத தொடங்கினன் :) என்ரை பழைய பதிவுகளை வாசிச்ச சில பேர் என்னை அடையாளம் கண்டு பிடிச்சிட்டினம்.

புது வலைப்ப்திவு எழுத தொடங்கி 3 மாதம் ஆகுறேக்குள்ள தமிழ்மணத்திலை இருந்து நட்சத்திர வாரத்தில் எழுத அழைப்பு வந்திச்சு அதாலை எனக்கு கொஞ்சம் அதிகமா வாசகர்கள் கிடைச்சார்கள் எண்டு நினைக்கிறன். ஆனா கிடைச்ச வாசகர்களை தக்க வைக்க தொடர்ந்து எழுதுறேக்கு முடியேல்லை. எனக்கேயுரித்தான சோம்பல் புத்தி, அடுத்தது என்னுடைய வேலை விடயங்களின் சுமை, எல்லாரையும் போல ஊரின் கதைகள் எண்டு எழுத பெரிசா மனம் வரேல்லை. இருந்தாலும் வலைபதியிறன் எண்டு காட்ட இடைக்கிடை புகைப்படங்களை போட்டு கொண்டிருந்தன்.

இன்னொரு முக்கியமான விசயம் என்னெண்டா வலைபதியும் மற்றவர்களின் பதிவுகளை வாசிச்சு போட்டு என்ரை எழுத்தை வாசிக்க எனக்கு பெரிசா பிடிக்கிறேல்லை. என்னாலை அவைய போல வாசிக்க தூண்டும் விதமா எழுத ஏலாது எண்ட நினைப்பும் அடிக்கடி வரும் அதாலையும் வலைப்பதிவில் அதிகம் எழுதுறேல்லை.

சரி இந்தளவும் போதும் எண்டு நினைக்கிறன் நான் எழுதி கிழிச்சதை பற்றி சொல்ல.

இன்னும் ஆர் ஆர் எழுதாம இருக்கினம் எண்டு தெரியேல்லை.
அதாலை இன்னும்
பதிவெழுத வந்த கதையை எழுதாத ஆரும் இந்த பதிவை உங்களுக்கான அழைப்பா எடுத்து தொடரலாம்.



படம் கூகுல் தேடலில் பெறப்பட்டது.

Sunday 16 August 2009

River walk






River walk, San Antonio, TX.

Mission San Jose










San Antinio, TX

Saturday 15 August 2009

வனாந்தர குழந்தைகள் ? / அநாதரவான குழந்தைகள்? ? Feral children

இன்றைக்கு The Learning Channel இல் Wild Child: The Story of Feral Children எண்ட நிகழ்ச்சியை பாத்தன். அதிலை 2 நாய்களாலை வளர்க்கப்பட்ட குழந்தைகளை பற்றியும், பேற்றோரால் தனிமைபடுத்தப்பட்ட நிலையில் வளர்ந்த குழந்தை ஒன்று பற்றியும் விவரித்து இருந்தார்கள். Wild children/ feral children க்கு என்ன தமிழ் மொழி பெயர்ப்பை கொடுப்பது? காட்டு குழந்தைகள் என்பதா? வனாந்தர குழந்தைகள் என்பதா? நான் வனாந்தர குழந்தைகள் என்று சொல்லலாம் என நினைக்கிறென்.

முதலில் Wild childeren/ feral children எண்டதுக்கு விளக்கம் என்ன என்று பார்த்தால் "மிகக்குறைந்த மனித தொடர்புடன், அல்லது முற்றாக மனித தொடர்பே இல்லாமல் வளர்ந்த சிறுவர்கள் என பொருள் கொள்ளலாம். அவர்கள் விலங்குகளால் வளர்கப்பட்டோ அல்லது தாமாக காட்டில்/ தாம் வாழ்ந்த சூழலில் ஏதோ ஒரு விததில் தப்பி வாழந்தோ அல்லது பெற்றோரால்/ உறவினர்களால் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஏனைய மனிதர்களுடன் தொடர்பாடல் அற்று வளர்க்கப்பட்டவர்களாக இருக்கலாம்".










நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த போது சிறுவயதில் வாசித்த ஒரு கதை ஞாபகம் வந்தது. கதையின் தலைப்போ எழுதியவரின் பெயரோ ஞாபகத்தில் இல்லை. அந்த கதை 1983 ஜூலை கலவரத்தில் வன்னி பகுதிக்கு இடம்பெயர்ந்த இரட்டை ஆண் குழந்தைகளை பற்றியது. இடப்பெயர்வில் ஒரு பையன் காட்டில் தவறி விடுகிறான், அவன் ஒரு மான் கூட்டத்துடன் வளர்கிறான். மற்றைய குழந்தை பெற்றோருடன்?? ?? வளர்ந்து பெரியவனாகிறன். ஒரு கட்டத்தில் பெற்றோருடன் வளர்ந்த பையன் மான்களுடன் உலாவும் மனிதனை கண்டு பிடித்து பார்த்த போது அந்த மனிதனின் கழுத்தில் இருக்கும் புலி நக சங்கிலியை கொண்டு அவன் தனது சகோதரன் என அடையாளம் காண்பதாக்க கதை செல்லும். உங்களில் யாருக்கேனும் இந்த கதை வாசித்த ஞாபகம் உண்டா.

நிகழ்ச்சியை பார்ந்து முடித்த பின் கூகுளில் தேடிய போது FeralChildren எனும் இணையப்பக்கம் இப்படியான குழந்தைகள் பற்றிய பல தகவல்களை ஒருங்கிணைத்து தருகிறது. இதுவரை 100 க்கு மேலான ஆவணப்படுத்தப்பட்ட தகவல்கள் இருப்பதாக மேற்படி இணைய தளங்கமும், விக்கிபீடியாவும் சொல்கிறன. விக்கிபீடியா பேலும் (legends) புராண கதைகளில் வரும் வனாந்தர குழந்தைகள்/ விலங்குகளால் வளர்க்கப்பட்ட மனிதர்கள் மிக திறமைசாலிகளாக சித்தரிக்கப்படுவதை சுட்டிகாட்டுகிறது. அதில் ஓநாய்களால் வளர்க்கப்பட்டதாக கூறப்படும் ரோமானிய குழந்தைகள் பற்றி கூறும் விக்கிபீடியா எனோ இலங்கை சிங்களவர்களின் முதாதை என சொல்லும் வியஜனின் தந்தை சிங்கபாகு சிங்கத்துக்கும் மனிதருக்கும் பிறந்ததாக சொல்லும் கதையை தவறவிட்டு விட்டது.

விலங்குகளால் வளர்க்கப்பட்ட புராண மாந்தர்கள் சிறப்பானவர்களாக சித்தரிக்கப்பட்டாலும், நிஜ வாழ்வில் அப்படி இருப்பதில்லை. சிறுவயதில், குறிப்பாக மொழி அறிமுகம், மனித பழக்க வழக்கங்களை அறியும் வயதிற்கு முன் விலங்குகளால் வளர்க்கப்படும் போது அவர்கள் எந்த விலங்குகளுடன் வளர்கிறார்களோ அந்த விலங்குகளின் பழக்க வழக்கங்களை கைக்கொள்வதுடன், விலங்குகளின் ஒலியையே ஏற்படுத்த பழகிக்கொள்கிறார்கள்.

மிக அண்மைய சம்பவமாக ரஸ்யாவில் Natasha Mikhailova எனும் குழந்தை தந்தையாலும், தத்தா பாட்டியாலும் வீட்டு செல்ல பிராணி போல் நாய்களுடனும், பூனைகளுடனும் 3 ஆண்டுகள் வளர்க்கப்பட்டதால், பேசுவதை விடுத்து நாய் போல் குரைப்பதையும் அவை போன்றே உண்பது, நீர் குடிப்பதையும் செய்வது கண்டறியப்பட்டது. குழந்தை மீட்க்கப்பட்ட போது அதற்கு வயது 5 ஆகும்.

இதே போல பெற்றோரால் தனிமைபடுத்தப்பட்ட ஐக்கிய அமெரிக்க நாட்டு அண்மைய சம்பவங்கள் Rios Children, Caged children of Ohio.

2005 ஆம் ஆண்டு கென்யாவில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தையை வளர்ப்பு நாய் ஒன்று கண்டெடுத்து வந்தது பற்றிய செய்தி இது.


1998 ஆம் ஆண்டில் ரஸ்யாவில் 4 வயதில் பெற்றோரால் கைவிடப்பட்டு, தெரு நாய்களுடன் வாழப்பழகிய சிறுவன் பற்றிய செய்தியும் முக்கியமானது. பிச்சை எடுத்த உணவை நாய்களுக்கு கொடுத்து நாய்களின் நம்பிக்கையை பெற்றவனானதோடு, மொஸ்கோ குளிர்காலத்து -30 டிகிரி செல்சியய் குளிரில் இருந்தும் நாய்களால் பாதுக்கக்கப்பட்ட செய்தி ஆச்சரியமானது. பொலிசார் சிறுவனை மீட்க முயன்ற போது நாய்கள் அவனை பொலிசாரிடம் இருந்து காப்பாற்றியதாம். பின்னர் பொலிசார் நாய்களுக்கு வேறொரு இடத்தில் உணவு வைத்து நாய்களை சிறுவனிடம் இருந்து பிரித்த பிற்பாடே அவனை மீட்டனராம். இப்போது அவன் பள்ளிகூடம் போகிறானம்.

1991 ஆண்டில் மீட்கப்பட்ட 8 வயதுடைய Oxana Malaya எனும் பெண்குழந்தை பெற்றோரால் கைவிடப்பட்டு, நாய்களுடன் மீட்கப்படும் வரை வளர்ந்த குழந்தையாகும். 23 வயதான நிலையில் இன்றும் ஒக் சான மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் காப்பகத்திலேயே வாழ்கிறாள்.






Annapurna Sahu எனும் பெண் இந்தியாவில் 25 ஆண்டுகள் பெற்றோரால் தனிமை படுத்த பட்ட செய்தி மட்டுமல்லாது ஓநாய்களால் வளர்க்கப்பட்ட பல இந்திய சிறுவர்கள் பற்றிய கதையையும் இந்த பட்டியலில் காணலாம். இவற்றில் சில போலியான கட்டுக்கதைகள் என பின்னர் நிருபிக்கப்பட்டுள்ன. குறிப்பாக அமலா, கமலா பற்றிய கதை.

கமலஹசனின் ஆளவந்தான் படத்தில் வரும் இரட்டையர்களில் ஒருவரும் இவ்வாறு தனிமைபடுத்தப்பட்ட கதாபாத்திரம் பற்றி பேசுகிறது.

ஆபிரிக்காவில் குரங்குகளார் வளர்க்கப்பட்ட பல குழந்தைகள் பற்றிய செய்திகள் உள்ளன. அவற்றில் ஒன்று John Ssebunya அவனை பற்றி பிபிசி ஒரு விவரண படத்தையும் எடுத்துள்ளது.

இலங்கையில் திஸ்ஸ எனும் சிறுவன் குரங்குகளால் வளர்க்கப்பட்ட செய்தியும் உள்ளது.




மேலும் இப்படியான குழந்தைகள் பற்றி அறிய


படங்கள்: கூகுள் தேடலில் பெறப்பட்டவை

Wednesday 12 August 2009

Folklorama 2009

கனடா நாட்டின் மனிட்டோபா மாநில தலை நகரான வின்னிபெக் நகரில் 1970 ஆம் ஆண்டில் ஆரம்பித்து, இந்த வருடத்துடன் 40 ஆவது வருடத்தை பூர்த்டிசெய்யும் ஒரு பல் கலாச்சார அரங்காடல் நிகழ்வு தான் Folklorama. 1970 ஆம் ஆண்டில் 21 வகையான கலாச்சார குழுமங்களின் அரங்காடல் நிகழ்வுகளை கொண்டு ஒரு வாரம் மட்டுமே நடைபெற்ற இந்த நிகழ்வு, இப்போது 40 இற்கு மேற்பட்ட கலாச்சார/ இன குழும மக்களது அரங்காடல் நிகழ்வுகளை கொண்டு இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் நிகழ்வாக மாறியுள்ளது.

இந்த பல் கலாச்சார அரங்காடல் கொண்டாட்டத்தை ஒழுங்கு செய்யும் அமைப்பு தனது குறிக்கோள் பற்றி இவ்வாறு கூறுகிறது.

Mission

Celebrating diversity and promoting cultural understanding.

Vision

Folklorama promotes the ethno-cultural diversity of Manitoba through entertainment, public celebrations of culture and education. Folklorama provides the opportunity for ethno-cultural communities to promote and celebrate their intangible culture. We will understand and respond to the expectations of our members, stakeholders and the public and will be leaders in the festival community, the special events industry and the tourism industry of Manitoba. We will respect and recognize the contributions of our staff and volunteers and will create an environment that inspires fun, innovation and a sense of belonging.

Values

Our basic foundation values, the values upon which all we do is based:

  • Respect for people
  • Integrity
  • Appreciation for diversity
  • Respect for culture

இங்கு கிட்டதட்ட 300 வரையான தமிழ் மக்களே இருந்தாலும், பத்திரிகையாளர்களாலும், பார்வையாளர்களாலும் சிறந்ததொரு அரங்காடல் நிகழ்வாக தமிழ் அரங்கம் விததுரைக்கப்பட்டு வந்துள்ளதை அறிய முடிந்தது. கடந்த 11 வருடங்களாக எந்த இடையூறும் இல்லாது நடைபெற்று வந்த தமிழ் அரங்கம் இந்த வருடம் நாட்டில் ஏற்பட்ட அவல நிகழ்வுகளால் இடை நிறுத்தப்பட்ட்டுவீட்டது. அடுத்த வருடம் மீண்டும் மனிரொபா தமிழ் கலாச்சார கழகம் தமிழ் அரங்கத்தை இக்கொண்டாட்டத்தில் இணைத்துக் கொள்ளும் என நம்புகிறேன். கடந்த வருடம் தமிழ் அரங்கத்தை பற்றி இட்ட பதிவு இது.


இக்கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டுள்ள கலாச்சார அரங்கங்கள் பட்டியலிட்டால் இந்த பதிவு மிக நீளமாகும்.

உதாரணமாக சில

1. Africa Pavilion

2. Belgian Pavilion

3. Caribbean Pavilion

மிகுதியை இங்கே காணலாம்



Thursday 23 July 2009

எக்சோரவும், கனகாம்பரமும், மயிர்கொன்றையும்

சினேகிதி ஆம்பரலங்காய் அணிஞ்சில் பழம் மற்றும் குதியன் பதிவில் குறிப்பிட்ட எக்சோரா பூச் செடி, மற்றும் கனகாம்பரம், மயிர்கொன்றை பூச் செடி ஆகியவற்றை San Antonio இல் உள்ள River walk, Almo இன் பின் உள்ள பூங்கா பகுதியில் காணமுடிந்தது. சினேகிதியின் பதிவை வாசித்து எக் சோரா என்றால் என்ன என கேட்டவர்கள்/ யோசித்தவர்களுக்காக





எக்சோரா/ X-Rose/ X-Rosa???
Alamo, San Antonio, TX.



எக்சோரா
River walk area, San Ant0nio, TX.





கனகாம்பரம்
Alamo, San Antonio, TX.


மயிர்க்கொன்றை
River walk area, San antonio, TX.

Sunday 19 July 2009

நாகதாளி

















Prickly pears (Opuntia)
17/07/09
San Antonio, TX, USA.

Saturday 4 July 2009

இறம்புட்டான்

Tuesday 16 June 2009

அரும்பு

Thursday 11 June 2009

மீள்வருகை

Wednesday 10 June 2009

அந்திவானம்







































English Bay/ Sunset beach
, Vancouver, BC, Canada.