Showing posts with label உணவு. Show all posts
Showing posts with label உணவு. Show all posts

Friday, 8 July 2011

தேசிகாய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்

1. இறாத்தல் (lb) மெக்சிக்கன் தேசிக்காய்/ எலுமிச்சம் காய்
(ஊரில் உள்ள தேசிக்காய்களிலும் சிறிது, கனடாவில் Key lime என்ற பெயரில் ஒரு இறத்தல் பைகளில் கிடைக்கும், இது கிடைக்காவிட்டால் பெரிய தேசிகாயை பாவிக்கலாம்)



Key lime image from : http://pintsizebaker.com/key-lime-pie

2 . மேசை உப்பு - 1 1 /2 கப்

3 . மஞ்சள் போடி - 3 மேசை கரண்டி

4 . 600 மில்லி லிட்டர்/ 1 லிட்டர் கொள்ளளவு உள்ள வாய் அகன்ற, இறுக்கமான மூடி உடைய கண்ணாடி போத்தல் (pasta souse போத்தல் பொருத்தமாக இருக்கும்)

5 . பேக்கிங் தட்டு (Baking tray) , மெழுகு கடதாசி (Parchment paper)

6 . 20 சாதாரண/பெரிய தேசிகாய் ( இது 3 கிழமைகளின் பின் தான் தேவைப்படும் )


செய்முறை

1. மெக்சிக்கன் தேசிகாய்களை குளிர் நீரில் 2 முறை கழுவி உலர விடவும் ( ஒரு துளி நீரும் தேசிக்காய்களின் மேல் இருக்க கூடாது.

2. உப்பையும் மஞ்சள் பொடியையும் ஒரு பத்திரத்தில் இட்டு நன்கு கலக்கவும்.

3. தேசிகாய்களை நான்காக பிளக்கவும், பிளக்கும் போது கவனம் தேவை, நன்கு துண்டுகளும் தனியே வரக்கூடாது , அடிப்பகுதியில் நான்கு துண்டுகளும் இணைந்து இருக்க வேண்டும்.

4. உப்பு-மஞ்சள் கலவையை நான்காக பிளந்து வைத்த தேசிக்கய்களுக்குள் நிரப்பவும்/ அடையவும். உப்பு-மஞ்சள் கலவை தேசிக்காய்களின் அடிப்பகுதி வரை செல்ல வேண்டும்.

5. உப்பு-மஞ்சள் கலவை நிரப்பிய தேசிகாய்களை போத்தலினுள், (உப்பு-மஞ்சள் கலவை வெளியே கொட்டுப்படதபடி) கவனமாக நிரப்பவும்.

6. நிரப்பிய போத்தலை இறுக்கமாக மூடி 3 கிழமைகள் வைக்கவும். மூன்று கிழமைகளில் தேசிக்காய் நிறம் மாறி, வெளியே தேசிகாய் சாறு, கசிந்து வந்திருக்கும்.

7. 3 கிழமைகளின் பின் தேசிக்கய்களை போத்தலில் இருந்து கைபடாமல், கரண்டி முலம் ஒவ்வொன்றாக எடுத்து மெழுகு கடதாசி விரித்த பேக்கிங் தட்டில் பரப்பவும். போத்தலில் இருக்கும் சாறை இறுக்கமாக மூடி வைக்கவும்.

8. oven ஐ 76 பகை செல்சியசில் (170 F ) இற்கு சூடாக்கவும்.

9. தட்டில் பரப்பிய தேசிகாய்களை சூடாக்கிய oven 5 மணி நேரம் உலர வைக்கவும், பின் வெளியே எடுத்து பின் தேசிகாயின் நான்கு பிளந்த பகுதிகளையும் பிரித்து மேலும் ஒரு 6 - 8 மணி நேரம் உலரவைக்கவும்.


10 . 20 பெரிய தேசிகாய்களை கடையில் சென்று வாங்கவும்.

10 . தேசிக்காய் காய்ந்த பின் நான்கு துண்டுகளையும் தனியே பிரிக்கவும், (கையால் நான்கு துண்டுகளையும் உடைக்க துண்டுகள் உடையும் சத்தம் கேட்க வேண்டும் இல்லை என்றால் மேலும் 1 - 2 மணிநேரம் உலர வைக்கவும்).



11 . உடைத்த துண்டுகளை முன்னர் தேசிகாய் ஊற வைத்த (சாறு இருக்கும்) போத்தலினுள் போட்டு நிரப்பவும்


12 . 20 தேசிகாய்களையும் சாறு பிழிந்து காய்ந்த தேசிக்காய் போட்ட போத்தலினுள் விட்டு போத்தலை இறுக்கமாக மூடி மேலும் ஒரு கிழமை வைக்கவும்.




13 . இப்போ ஊறு காய் தயார்.



இந்த ஊறு காயை அறை வெப்பநிலையில் ஒரு வருடம் வரை வைத்துருக்கலாம். குளிருட்ட தேவையில்லை.



குறிப்பு:
1. ஊறுகாய் உலர/ கைய விடும் போது தொடர்ச்சியாக 10 மணி நேரம் வைக்க வேண்டியதில்லை. ஒருநாள் 5 மணி நேரம்,மறுநாள் 5 - 7 மணிநேரம் வைக்கலாம். ஆட்கள் யாரும் இல்லாத நேரம் oven ஐ பாவிக்க கூடாது என்பார்கள். oven ஐ நிப்பாட்டிய பின் மறுநாள் சூடாக்கும் வரை தேசிக்காய்களை oven உள்ளேயே வைத்திருக்கலாம்.

2 . ஊரில் சூரிய ஒளியில் உலர வைப்பார்கள், நான் இருப்பது தொடர் மாடி குடியிருப்பு, பல்கனி இல்லை. அதனால் தான் oven இல் உலர வைத்தேன். சூரிய ஒளியில் உலர வைக்க வசதியிருப்பவர்கள் சூரிய ஒளியில் உலர வைக்கலாம். ஆனால் சூரிய ஒளியில் உலர குறைந்தது 5 - 6 நாட்கள் எடுக்கும் என நினைக்கிறேன்.

Wednesday, 23 September 2009

நாம் எதை உண்கிறோம்? எவ்வளவு உண்கிறோம்? பகுதி 1?

உணவு, உடை, உறையுள் இம்மூன்றும் மனிதனின் அடிப்படைத்தேவைகள். இவற்றில் உணவு ஏனைய இரண்டையும் விட அதி அத்தியாவசியமானது. நாம் எப்படிப்பட்ட உணவை உண்கிறோம், எவ்வளவு உண்கிறோம் என்பதில் எமது உடல் நலன் தங்கியுள்ளது.

உணவு, அவற்றின் ஊட்டச்சத்துக்கள், எந்த வகையான உணவுகள் உடலுக்கு அதிகம் நன்மை தருவன, எப்படிப்பட்ட உண்வை நாம் தவிர்க்க வேண்டும்? என்பனவற்றி தெளிவான அறிவு எம்மிடையே இருக்கிறதா? இந்த கேள்விகளுக்கு ஆம் இல்லை என நான் ஒரு பதிலை சொல்வதிலும், வாசிக்கும் ஒவ்வோருவரும் உங்களை நீங்களே கேட்டுகொள்ளுங்கள்.

ஊரில் உள்ள ஒரு சிலரின் கணிப்பில் உடல் மெலிவாக இருக்க கூடாது, உடல் மெலிவாக/ அல்லது ஒருவரின் வயதுக்கும், உயரத்தும் ஏற்ற நிறையில் இருப்பவர்களை பார்த்து சிலர் கேட்கும் கேள்வி என்ன ஒழுங்காய் சாப்பிடுறேல்லியோ என்பதாக தான் இருக்கும். என்னையே பலர் பல முறை கேட்டுள்ளார்கள். சிறுவயது முதலே நான் மரக்கறி உணவுகளும், பாலும் மட்டுமே உட்கொண்டு வந்துளேன். ஒரு கட்டத்தில் முட்டை சாப்பிட பழகினேன். அதற்கு அப்பால் போனதில்லை. நான் மெலிவாக இருப்பதாக சுட்டிய பலர், உப்பிடியே மெலிஞ்சு போய் இருக்கிறதுக்கு, ஏன் இறைச்சி மீன் என்பவற்றை சாப்பிட்டு உடலை தேற்ற சொல்லியும் ஆலோசனை சொல்லுவார்கள். அப்படி கேட்பவர்கள் அளவுக்கு அதிகமாக உண்டு, உடல் கொழுத்து, உடல் கொலஸ்திரோல் அளவு கூடி அதற்கு மருந்து உட்கொள்வர் அல்லது சலரோகம்/ நீரிழிவு நோய்க்கு மருந்து உட்கொள்வர். இந்நோய்கள் எல்லாம் கணக்கு வழக்கின்றி உண்டதன் விளைவு என்பதை ஏனோ சிந்திப்பதில்லை என்று சொல்வதிலும், அவர்களுக்கு எந்த உணவுகள் உடலுக்கு நல்லவை, எவை பாதகமானவை எனும் போதிய அறிவின்மை தான் காரணம் என நினைக்கிறேன்.

அதற்காக இறைச்சி, மீன் என்பவை உடல் நலனுக்கு உகந்ததல்ல என்று சொல்லவில்லை. ஆனால் இறைச்சி, மீன் முட்டை என்பவற்றை எவ்வளவு உண்கிறோம் என்பதில் தான் பிரச்சனையே உள்ளது.

இணையத்தில்/வலைப்பதிவில் எழுதும் பலரும் ஆங்காங்கு எழுதியதில் இருந்தும், நேரடியாக நண்பர்கள், உறவினர்களுடன் உரையாடும் போதும் கேட்டவற்றில் இருந்து

இறைச்சி, மீன் கறி இருந்தால் சந்தோசமாக சாப்பிடுவோம், அதிகம் சாப்பிடுவோம்.
இறைச்சி/ மீன் கறி இருந்தால் வேற கறி ஒண்டும் தேவையில்லை.
மரகறிச் சாப்படு கண்ணிலையும் காட்ட கூடா
மரக்கறி சமையல் எண்டா 2-3 கறி வைக்க வேணும். அதாற்கு நிறைய நேரம் எடுக்கும். ஆனால் இறைச்சி/ மீன் எண்டா ஒரு கறியோட வேலை முடிஞ்சுது.
மரக்கறி சாப்பிட்டா வயிறு முட்டா கிடக்கும்.
...

.....

இப்படி பல கருத்துக்கள்.

உடல் நல ரீதியாக பார்த்தால் தனியே இறைச்சியும் சோறும் உண்பது உடல் நலனுக்கு உகந்ததல்ல.

ஊரில் இருக்கும் போது எனக்கு மிக நெருக்கமான உறவினர்கள், கொஞ்சம் வசதியானவர்களும் கூட. வாரத்தில் 5 நாட்கள் அவர்கள் வீட்டில் மீன் இறைச்சி போன்ற உடனவுகள் இருக்கும். கொழி இறைச்சி கறி, மீன் கறி,மீன் பொரியல் இறால் பொரியல் என எல்லாம் ஒரே நாளில் இருக்கும் இப்படியே சாப்பிட்டு அந்த வீட்டின் ஆண்களில் பலருக்கும் 42 + inches இல் தான் காற்சட்டை இருக்கும், சேட், அல்லது ரீ சேட் வந்த வேணும் என்றால் XXL அளவில் இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் உடல் பருமனை தாங்க மாட்டாமலும் அதி உயர் குருதி அழுத்தம் காரணமாக அவர்களாகவே உணவு பழக்கத்தில் மாற்றம் கொண்டு வந்தார்கள்.




படம் பெறப்பட்டது : http://www.tampabay.com/features/food/


இதை ஏன் சொல்கிறேன் என்றால் எந்த கவனமும் இல்லாமல், எங்களிடம் போதுமான வசதியிருக்கிறது ஆகவே மேலே சொன்னது போல் உண்பது தான் மதிப்பு என நினைத்து அளவுக்கு அதிகமாக உண்டு, பணக்கார வருத்தங்கள் என்று சொல்கிற உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு/சலரோகம் போன்றவற்ரை வாங்கி, அதன் காரணமாக பல உணவுகள் உண்ன முடியாது போய் வாயை கட்டி வைத்திருப்பதிலும் நாளாந்தம் என்ன உண்கிறோம், எவ்வளவு உண்கிறோம் என்பதை கவனித்து செயற்படுவது வாழ் நாள் பூராகவும் அனைத்து உணவுகளையும் எந்தவித பிரச்சனையும் இன்றி உண்ண வழிசமைக்கும்.


எவ்வாறு உணவு பழக்கத்தை மறு சீரமைக்க வேண்டும் என்பதை பார்க்க முதல்

எமது உடல் நிறை சரியான அளவில் இருக்கிறதா? அல்லது குறைவாக இருக்கிறதா? அல்லது சற்று அதிகமாக இருக்கிறதா? மிக அதிகமாக இருக்கிறதா? இதை எவ்வாறு கணக்கிடுவது?

எமது உடல் நிறை சரியாக இருக்கிறதா இல்லையா என்பதை கணிக்க உடல் திணிவு சுட்டி பயன்படுகிறது (Body Mass Index -BMI)

உடல் திணிவு சுட்டியை எவ்வாறு கணிப்பது?

மிக சுலபம்.

உடல் திணிவு சுட்டி = உடல் நிறை (கிலோ கிராமில்)/ {உடல் உயரம் * உடல் உயரம் (மீற்றரில்)}

அதாவது உங்கள் உடல் நிறையை (கிலோ கிராமில்) உங்கள் உயரத்தின் (மீற்றரில்) வர்க்கத்தினால் பிரிக்கும் போது வரும் இலக்கம் தான் உடல் திணிவுச்சுட்டி.


உங்களுக்கு கணிக்க சிரமமாக உள்ளதா இந்த இணையத்தில் உங்கள் உயரத்தையும், நிறையையும் கொடுத்து உங்கள் உடல் திணிவு சுட்டியை பெற்றுக்கொள்ளுங்கள்.

இந்த உடல் திணிவு சுட்டியின் அளவை கொண்டு உடல் நிறை பிரிவுகளை வகுத்துள்ளனர்.

மிக குறைவான உடல் நிறை = <16.5

குறைவான உடல் நிறை = 16.5 - 18.5

சாதாரணம் = 18.5- 25

கூடிய உடல் நிறை = 25- 30

அதி கூடிய உடல் நிறை வகுப்பு I(Obese Class I) = 30-35

அதி கூடிய உடல் நிறை வகுப்பு II (Obese Class II)= 35 - 40

அதி கூடிய உடல் நிறை வகுப்பு III (Obese Class III)= > 40

உங்கள் உடல் திணிவு சுட்டி 25 க்கு அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது என்றால் நீங்கள் வேண்டா விருந்தாளிகளான உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை இலகுவில் பெற்று கொள்ளும் திசை நோக்கி போய்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உணவு பழக்கத்தை மறுசீரமைப்பது சற்று சிரமானது போல் தோன்றினாலும் உடல் நலனை, உணவை அளவுக்கதிகமாக உண்டு அதன் காரணமாக வரும் நோய்களின் பின் சில உணவுகளை முழுமையாக உண்ணாது நிறுத்துவதிலும் அளவோடு உண்ண முயல்வது மேல்.

பொதுவாக உணவு பழக்கத்தை மறுசீரமைக்க ஒரு அடிப்படை உதாரணமாக உணவு கூம்பகம்/ Food Pyramid ஐ உதாரணமாக காட்டுவர். உணவு பிரமிட் எந்த உணவுகள் அதிகம் உண்ண வேண்டும் எவற்றை குறைவாக உள்ளெடுக்க வேண்டும் என்பதை பருமட்டாக விளக்கும் ஒரு அமைப்பாகும். இந்த உணவு பிரமிடில் உள்ளடக்கப்படும் உணவுகளில், மற்றும் அவற்றை எந்த அளவுக்கு உண்ண வேண்டும் அட்டவணைபடுத்துவதில் நாடுகளுக்கு நாடு வேறுபாடுகள் உண்டு.

உதாரணமாக ஒரு உணவு கூம்பகம்/ Food Pyramid:






படம் பெறபட்ட இணையம் : http://www.ndlabs.com/weight_management

இதிலே சொல்லப்பட்ட பரிமாறல்(Serving) எனும் அளவு எவ்வளவு என்பதையும், குறிப்பிட்ட உணவுகளில் நாளாந்தம் எவ்வளவு உண்ண வேண்டும் என்பதையும் மேலும் தெளிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம்



Saturday, 4 July 2009

இறம்புட்டான்

Sunday, 28 September 2008

முட்டையில்லா வனிலா மைலோ கேக்





Egg less Vanilla-Milo Marble Cake

தேவையான பொருட்கள்

பொதுப்பாவனை கோதுமை மா ----- 1 கப் (250 மில்லி லீட்டர்)
ரவை ---- 1 கப்
300 மில்லி லீட்டர் கட்டி பால் ----- 1
சீனி ---- 1 கப்
பட்டர் ---- 250 கிராம்
மென் சூடான நீர் ---- 150 மில்லி லீட்டர்
மைலோ ---- 2 மேசைக்கரண்டி
வனிலா ---- 1 தே-கரண்டி

பேக்கிங் பவுடர் ---- 1 1/2 தேகரண்டி


செய்முறை

- பொதுப்பாவனை கோதுமை மா, ரவை, பேக்கிங் பவுடர் மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து 3- 4 முறை அரிதட்டில் போட்டு அரித்து எடுத்து வைக்கவும்

- கட்டி பால் தகரத்தை திறந்து வாய் அகன்ற, கொத்தன் பாத்திரத்தில் இடவும்
- தகரத்தில் ஒட்டியிருக்கும் பாலை மென் சுடு நீர் கொண்டு கழுவி அதனையும் பாத்திரத்தில் விடவும்
- கலவையை 10-15 நிமிடம் நடுத்தரமான வேகத்தில் அடிக்கவும்






- பட்டர், சீனி இரண்டையும் இன்னொரு பாத்திரத்தில் இட்டு 15 நிமிடம் நன்கு அடிக்கவும்.


- பதம் சரியா என்பதை இரண்டு விரல்களுக்கிடையே பட்டர்- சீனி கலவையை உரோஞ்சி பார்க்கும் போது சீனி துகள்கள் இல்லாதிருக்க வேண்டும் அல்லது மிக குறைவாக இருக்க வேண்டும்



- நன்கு அடித்த பட்டர்-சீனி கலவையினுள், அடித்து வைத்திருக்கும் கட்டிபால் கலவையை சேர்த்து ஒரு 3-5 நிமிடம் அடிக்கவும்.


- அடித்த கலவையுடன், அரித்து வைத்த கோதுமை மா-ரவை-பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்து 2 நிமிடம் அடிக்கவும்


- கலவையை இரண்டாக பிரித்து ஒரு பகுதியுடன் வனிலாவை சேர்த்து 1 நிமிடம் அடிக்கவும்


- மிகுதி பகுதிக்கு மைலோவை சேர்த்து அடிக்கவும்






- பட்டர் தடவிய கேக் தட்டில் முதலில் வனிலா சேர்த்து அடித்த கலவையை கொட்டி பரவவும்


- அதன் மீது மைலோ சேர்த்து அடித்த கலவையை கொட்டி பரவவும்


- பரவிய கலவை மீது முள்ளு கரண்டி யை உட் செலுத்தி ஒழுங்கற்ற விதத்தில் மெதுவாக ஒரு பக்கம் இருந்து மறுபக்கம் வரை மெல்லிதாக கலக்கவும்


- மீண்டும் மேற்பரப்பை மட்டப்படுத்தவும்





- 180 பாகை செல்சியசில் சூடாக்கிய இல் 25- 30 நிமிடம் சுட்டு எடுக்கவும்




Tuesday, 22 July 2008

சுட்ட கத்தரிக்காய்ச் சம்பல்

சுட்ட கத்தரிக்காய்ச்சம்பல்

தேவையான பொருட்கள்

ஒன்று/ இரண்டு பேருக்கு

4 - மேசைக்கரண்டி தயிர்

1 - பெரிய கத்தரிக்காய்







* சுட்ட சம்பலின் நிறம் வெளிர்ப்பாக இருக்க வேண்டும் என விரும்பினால் வேள்ளை கத்தரிக்காய் தான் நன்றாக இருக்கும்.

* வெள்ளை கிடைக்கவில்லை என்றால் ஊதா கத்தரிக்காய் பாவிக்கலாம். நீண்ட கத்தரிக்காயை தான் பெரிய கத்தரிக்காய் என சொல்லியுள்ளேன்.





நீண்ட கத்தரிக்காய் கிடைக்கவில்லையென்றால் சிறிய வெள்ளை/ ஊதா கத்தரிக்காயும் பாவிக்கலாம். நான் சிறிய கத்தரிக்காயை தான் பாவித்து செய்தேன்.

5-6 - சிறிய வெங்காயம்
2 - பச்சை மிளகாய்
1/2- தே. கரண்டி மிளகு
சுவைக்கு- உப்பு
அலுமினியத் தாள்


செய்முறை


1. போறணை/ Oven ஐ 230 பாகை செல்சியல்லில் சூடாக்கவும்

2. கத்தரிக்காய் மூழை நீக்கி அலுமினியத தாளினால் முழுமையாக மூடி சுற்றவும். சுற்றியபின் முள்ளுகரண்டி (Fork) மூலம் இரண்டு மூன்று இடங்களில் குற்றி தூளை செய்யவும் (இது நீராவி வெளியேற உதவும்)





3. கத்தரிக்காயை சூடான Oven இல் 25- 30 நிமிடம் சுடவும்



4. கத்தரிக்காய் சுடும் நேரத்தில் வெங்காயம், பச்சை மிளகாயை மிகச்சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்



5. 25-30 நிமிடங்களின் பின் கத்தரிக்காயை வெளியே எடுத்து சிறிது குளிர்ந்ததும் அலுமினியம் தாளை அகற்றவும்.




( கீழே உள்ள படத்தில் உள்ளது போல் தோல் சுருங்கி வரும். நான் வெள்ளை நிற பெரிய கத்தரிக்காய் இங்கு கிடைக்காதாதால் ஊதா நிற சிறிய கத்தரிக்காயை பாவித்தேன். இப்படி கபில நிறமாக வருவதை விரும்பாதவர்கள் வெள்ளை கத்தரிக்காயை பாவிக்கலாம்.)






6. மேலும் கையால் தோலை உரிக்கக்கூடிய சூடு வரும் வரை குளிர விட்டு தோலை உரித்து கொள்ளவும்

7. சிறிய கத்தரிக்காய் என்றால் 4 ஆக, பெரிது என்றால் 8 ஆக பிளந்து சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.

8. அரிந்த கத்தரிக்காயுடன், அரிந்து வைத்த வெங்காயம், மிளகாய், உப்பு, மிளகுத்தூள் என்பனவற்றை சேர்த்து கலக்கவும்





9 இறுதியில் தயிரை சேர்த்து நன்கு கலந்தால் சுவையான சுட்ட கத்தரிக்காய்ச் சம்பல் தயார்

இதனை சோற்றுடன் உண்ணல்லாம்.






குறிப்பு.

1. ஊரில் தயிரிற்கு பதிலாக இதற்கு தேங்காய்ப்பால் (முதற்பால்) சேர்த்து செய்வார்கள்
2. தயிரிற்குபதிலாக sour cream உம் பாவிக்க முடியும்



நீங்களும் தயிரிற்கு பதிலாக தேங்காய்ப்பால்/ sour cream பாவித்து செய்து பார்த்து எது சுவையானதோ அதை தொடருங்கள்.


3. கத்தரிகாய் சுடுவதற்கு தேவையான நேரம், கத்தரிக்காயின் பருமன், Oven இன் வகை என்பவற்றுக்கு ஏற்ப மாறுபடும். 20 நிமிடத்தின் பின் வெளியே எடுத்து திறந்து பார்த்து படத்தில் காட்டியுள்ளது போல் தோல் சுருங்கி வந்திருந்தால் வெளியே எடுக்கலாம். இல்லாது விடின் மீண்டும் மூடி 5- 10 நிமிடம் சுடவும்.






Wednesday, 9 July 2008

சோயா இறைச்சி பொரியல்

  • சோயா இறைச்சி பொரியல்


    தேவையான பொருட்கள்


    2 பேருக்கு

    50 கிராம் - சோயா மீற்/ chunks/இறைச்சி
    2- பெரிய சிவப்பு வெங்காயம்
    3 தே.கரண்டி - யாழ்ப்பாண கறி தூள் (கனடாவிலை நிறைய வகை கறி தூள் இருக்கிறதாலை நம்ம ஊர் கறி தூளுக்கு யாழ்ப்பாண கறி தூள் எண்டு பெயர் போட்டிருக்கும்)
    சுவைக்கேற்ப - உப்பு
    1/4 தே. கரண்டி - மஞ்சள் தூள்
    5 மேசை கரண்டி - நல்லெண்ணேய்/ சூரிய காந்தி எண்ணேய்
    3 கப் - சுடு நீர்
    2 நெட்டு - கறி வேப்பிலை
  • 1- தேசிக்காய்




    செய்முறை

  • நன்கு கொதித்த சுடு நீரை மூடக்கூடிய ஒரு பாத்திரத்தில் இட்டு சுவைக்கு உப்பு சேர்த்து அதனுள் சோயா இறைச்சியை கொட்டி 10 நிமிடம் மூடி ஊற வைக்கவும்
  • வெங்காயத்தை தோல் உரித்து, நீளம் நீளமாக வெட்டி கொள்ளவும்
  • வெங்காயத்துக்கு சுவைக்கேற்ப உப்பு, 2 தேக்கரண்டி கறித்தூளை சேர்த்து கிளறி 2 நிமிடம் வைக்கவும்
  • ஊறிய சோயா சோயா இறைச்சியை வடிகட்டி எடுத்து குளிர் நீரில் களுவி கொள்ளவும், பெரிய துண்டுகளாக இருந்தால் சிந்தாமணி கடலை அளவு துண்டுகளாக வெட்டவும், (சந்தையில் சிறிய துண்டுகாள உள்ள சோய இறைச்சியும் கிடைக்கும், அதை வெட்டி துண்டாக்க தேவையில்லை)
  • வெட்டிய/ வடி கட்டி எடுத்த சோயா துண்டுகளுக்கு 1 தே கரண்டி கறித்தூள், மஞ்சள், உப்பு என்பவற்றை போட்டு பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்கவும்
  • பொரிக்கும் (அடிப்பிடிக்காத/ ஒட்டாத/ non stick) சட்டியில் 3 மேசகரண்டி எண்ணேய் விட்டு மென்சூட்டில் சூடக்கி அதில் கறித்தூள், உப்பில் பிரட்டி வைத்த வெங்காயத்தை போட்டு வெங்காயம் மெதுமையாக வரும் வரை வதக்கவும்/ பொரிக்கவும்
  • வெங்காயம் வதங்கி வந்ததும் ஊற வைத்த சோயா இறைச்சியை கொட்டி, மிகுதியாக இருக்கும் எண்ணேயை சேர்த்து மேலும் ஒரு 2-3 நிமிடம் கிளறி, கறிவேப்பிலையை சேர்த்து இறக்கவும்
  • பொரியல் சாப்பிடக்கூடிய சூட்டை அடைந்ததும் புளிப்பு சுவையை விரும்புபவர்கள் பாதி தேசிக்காயை பிளிந்து, நன்கு கிளறவும்
  • இப்போ சுவையான சோயா இறைச்சி பொரியல் தயார்.
  • இதனை சோறு, புட்டு ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.


Friday, 28 September 2007

Salmonella - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 7

1. உணவு மூலம் பரவும் நோயாக்கிகள்- 1 : அறிமுகம்
3.Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 3

4. Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4

5. Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5

6. Campylobacter: உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 6



7. Salmonella - உணவு மூலம் பரவும் நோயாகிகள் -7




படம் பெறப்பட்டது: www.fehd.gov.hk/.../library/salmonella/1.html

அண்மையில் கனடா நாட்டின் உணவு கட்டுப்பாட்டு நிறுவனம் மல்லி தூளில் Salmonella தொற்று/ மாசாக்கம் இருக்கலாம் என அறிவித்துள்ளதுடன், குறிப்பிட்ட மல்லி தூளை உற்பத்தி/ இறக்குமதி செய்யும் நிறுவனம் தொற்று/மாசாகம் அடைந்த தொகுதிகளை சந்தையில் இருந்து மீள பெறுவதாகவும் அறிவித்துள்ளது.



எனவே இந்த பக்றீரியா பற்றி சிறிது பார்ப்போம்.


இந்த பக்றீரியாவின் பெயரானது இதனை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி Salmon என்பவரின் பெயரை கோண்டு உருவாக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் வருடாந்தம் 40, 000 க்கு மேற்பட்டோரும், கனடாவில் 6000- 12000 பேரும் வருடாந்தம் இதன் தாக்கத்துக்கு உள்ளாவதாக அறியப்பட்டுள்ளது.

பல Salmonella வகைகள் இருந்ததலும் கீழே கொடுக்கப்பட்ட இரண்டும் உணவு மூலம் பரவுதலில் முக்கியமானவை.

1. Salmonella serotype Typhimurium
2. Salmonella serotype Enteritidis


எனைய இரண்டுவகை Salmonella க்கள்

Salmonella typhi
Salmonella paratyphi A, B, and C


மனிதரில் நெருப்பு காய்ச்சல் அல்லது தைபோயிட் (typhoid) காய்ச்சலை உருவாக்குபவை. இவை நீரின் மூல பரவுகிறன.


Salmonella பக்றீரியா கோழி,பன்றி பொன்றவற்றின் குடலில் இயற்கையாக காணப்படக்கூடிய ஒரு நுண்ணங்கியாகும். அத்துடன் இந்த பக்ற்ரீரியாக்கள் விலங்குகள் வளர்க்கும் சூழலிலும்
காணப்பட முடியும்.

பொதுவாக Salmonella அதிக அளவில் கோழி இறைச்சி, கோழி முட்டை போன்றவற்றின் மூலமே பரவுவதாக அறியப்பட்டு இருந்தாலும், ஏதாவது வகையில் ஏனைய உணவுகள் தொற்று ஏற்பட்ட கோழி/ மனிதருடன் தொடுகை அடைவதால் ஏனைய உணவு பொருட்களும் இந்த பக்ற்ரீயாவை காவ முடியும். தொற்று ஏற்பட்ட உணவு மூலம் மனிதருக்கும், தொற்று ஏற்பட்ட மனிதரில் இருந்து ஏனைய மனிதர்களுக்கும் பரவ முடியும். எனவே சமையலிடங்களில் தொற்று ஏற்பட்டவர்கள் அனுமதிக்கப்படக்கூடாது.


Salmonella பக்றீரியா தொற்றினால் ஏற்படும் நோய் சல்மொனெலோசிஸ் (Salmonellosis) என அழைக்கப்படும்.

நோய் அரும்பு காலம்: தொற்று ஏற்பட்டு 7- 72 மணி நேரங்கள்

இந்த நோயின் அறி குறிகள்: காய்ச்சல், வயிற்றோட்டம், வயிற்று நோ

நோய் நீடித்திருக்க கூடிய காலம்: 4-7 நாட்கள். பொதுவாக இந்த தொற்று எந்தவிதமான மருந்து சிகிச்சையும் இல்லாது குணமாககூடியது. ஆனால் சிறுவர்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு தொற்று ஏற்படும் போது அவதானமாக இருக்க வேண்டும். இவர்களால் இந்த தொற்றை எதிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இந்த பக்றீரியா சமிபாட்டு தொகுதி/ உணவு கால்வாயில் இருந்து குருதி சுற்றோட்டத்தொகுதியை அடைந்து உடல் முழுவதும் பரவலடைந்து கட்டுபடுத்த முடியாத நிலையை அடையலாம். எனவே தீவிரமான வயிற்று போக்கு/ குருதியுடன் கூடிய வயிற்றுபோக்கு ஏற்படும் போது நுண்ணுயிர்க்கொல்லி மூலம் சிகிச்சை அளிப்பது அத்தியாவசியமானது.


அதிக அளவில் பாதிக்கப்பட கூடியவர்கள்: சிறுவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், நிர்பீடன குறைபாடு/ நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் (உதாரணம்- எயிட்ஸ் நோயளிகள்).



எவ்வாறு மனிதரில் தொற்று ஏற்படுகிறது:

ஏற்கனவே சொன்னது போல தொற்றுதலுக்கு உள்ளான கோழி, பன்றி, மற்றும் ஏனைய விலங்குக்களின் மலத்துடன் தொடுகையுற்ற உணவு பொருட்கள் குறிப்பாக கொழி இறைச்சி, முட்டை, பன்றி இறைச்சி என்பவற்றின் மூலம் பரவ முடியும். தொற்று ஏற்பட்ட உணவுகள் பொதுவாக வேறுபட்ட மணம், நிறம் ஆகியவற்றை கொண்டிருக்காது. பொதுவாக மரக்கறிகளும் விலங்கு கழிவுகள் உரமாக இடப்படும் சந்தர்ப்பங்களில், சரியாக சுத்தம் செய்யாதவிடத்து தொற்றுக்கு காரணமாக அமையலாம்.

தொற்றை தவிர்ப்பதுஎப்படி?

இது உயர் வெப்பதில் இறந்துவிடக்கூடிய பக்றீரியா ஆக இருப்பதால் உணவுகளை நன் கு சமைத்து உண்ணும் போது தொற்று ஏற்படும் சாத்தியம் மிக குறைவாகும்.

இறைச்சி சமைக்கும் போது இறைச்சியின் மைய பகுதி வெப்ப நிலை 72- 85 பாகை செல்சியசிலும் அதிகமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

சமைக்காது உண்ணும் மரக்கறிகைளை நன்கு கழுவி சுத்தம் செய்த பின்னரே உண்ண வேண்டும்.

சமைக்கப்படாத இறைச்சி, சுத்தமாக்க படாத உணவுகளை கையாண்ட பின் சவர்காரம் இட்டு கையலம்பாது சமைத்த உணவுகளை கையாளுவதை தவிர்த்தால்.

தொற்றுக்கு உள்ளானவர்கள் சமையலறையில் நடமாடுவதை, சமையலில் ஈடுபடுவதை தவிர்த்தால்.

முட்டையினை நன்கு சமைத்து உண்ணல். பாதி அவிந்த நிலையில் உண்ணுவதை கர்ப்பிணி பெண்கள், சிறுவர், வயது முதிர்ந்தோர் தவித்தல் நல்லது.
முட்டை உருவாகும் சூலக பகுதியில் இந்த பக்றீரியா தொற்றியிருந்தால் முட்டையின் உட்பகுதியிலியே இந்த பக்றீரியா தொற்றுதல் அடைய கூடியது. இதனால் முட்டையினை வெளிப்புறம் கழுவுவதன் மூலம் மட்டும் இந்த பக்றீரியா நீக்கப்பட மாட்டாது.

உசாத்துணை
http://www.cfsan.fda.gov/~mow/chap1.html
http://www.cdc.gov/ncidod/dbmd/diseaseinfo/salmonellosis_g.htm
http://www.inspection.gc.ca/english/fssa/concen/cause/salmonellae.shtml
http://www.hc-sc.gc.ca/iyh-vsv/food-aliment/salmonella_e.html

Sunday, 9 September 2007

கானா பிரபாவுக்கு colourful ஆகா

கானா பிரபா எப்பாவோ என்னுடைய பதிவை பார்த்து இது எப்படி சாத்தியம்..... என்ன பாயாசம் பச்சை பச்சையா இருக்கு எண்டு கேட்டிருந்தார். அப்போ சொல்லியிருந்தேன் பச்சை மட்டுமில்லை இன்னும் நிறைய நிறத்திலை இருக்கேண்டு.

அதுக்கு தான் இந்த பதிவு.







தேவையான பொருட்கள்

1. சவ்வரிசி - 100 கிராம்
(பச்சை, சிவப்பு, வெள்ளை நிறங்கள் கொண்ட கலவையாக தாய்லாந்து/ சீன கடைகளில் தேடி வாங்கிகொள்ளவும்)
2. சீனி/சர்க்கரை- சுவைக்கு ஏற்ப
3. பால் 1 லீற்றர்
4. திராட்சை வற்றல் - உங்கள் சுவை, விருப்பத்துக்கேற்ப அளவு
5. முந்திரிகை மருப்பு - உங்கள் சுவை விருப்பத்திற்கேற்ப அளவு
6. ஏலக்காய் 2-3
6. நெய்/ பட்டர்- 2 மேசைகரண்டி


செய்முறை

1. வாணலி/ தாய்ச்சி யில் சவ்வரிசியை மிதமான சூட்டில் வறுத்து எடுத்து கொள்ளவும்
2. வாணலியில் நேய்/ பட்டரை இட்டு உருகி கொதிக்க ஆரம்பித்ததும் திராட்சை வற்றல் முந்திரிகை பருப்பு எற்பவற்றை போட்டு பொரித்து எடுக்கவும். அத்துடன் ஏலக்காயையும் பொடித்து போட்டு வைத்து கொள்ளவும்.

3. அளவானா பாத்திரத்தில் பாலை இட்டு நன்கு கொதிக்க விடவும்
4. வறுத்து வைத்த சவ்வரிசியை கலந்து சவ்வரிசி அவிந்து நல்ல பெரிய உருண்டைகளாக (ஒளியை ஊடுபுகவிடும் நிலை வரை)வரும் வரை சமைக்கவும்

5. சுவைக்கேற்ப சீனி/ வெல்லம்/ சர்க்கரை சேர்த்து, நெய்யில் பொரித்து வைத்த திராட்சை வற்றல், முந்திரி பருப்பு, ஏலக்காய் என்பவற்றை இட்டு கலக்கிய பின் முடி அடுப்பை அணைத்துவிடவும்.

6.மென்சூடன நிலைக்கு வந்ததும் அளவான பத்திரத்தில் விட்டு குடிக்கவும்.

Saturday, 14 July 2007

கோடைகால சுற்றுலா செல்பவர்களுக்கு

ஏற்கனவே வட அமெரிக்க நாடுகளான கனடா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக அளவில் உணவு மூலம் பரம்ப்பலடைந்து நோயை ஏற்படுத்தும் Escherichia coli O:157: H7 பற்றி எழுதியிருந்தேன்.

இது பொதுவாக சரியாக சமைக்கபடாத இறைச்சி, பால், நீச்சல் தடாகம், உணவை சுத்தமாக கையாளாமை போன்றன முக்கிய காரணங்களாகும்.

அண்மையில் கனடாவில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்ட கீரைமூலம் இந்த நோயாக்கி பரவியமை அறியப்பட்டுள்ளது.

கோடைகால விடுமுறை, மற்றும் வார இறுதியில் சுற்றுலா செல்பவர்கள் இந்த விடயத்தில் மிகவும் கவனாமாகா இருக்க வேண்டும்.

அண்மையில் கனடா தினத்துக்கு கனடாவின் ஸ்காபுரோ பகுதியில் நடைபெற்ற ஈழத்து மாணவர்களது ஒன்றுகூடலில் கலந்து கொண்டவர்களில் சிலர் Escherichia coli O:157: H7 பாதிப்புக்கு உட்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை சிபிசி இணையம் மூலம் அறிய முடிந்தது. பாதிக்கப்பட்டவ்ர்களில் ஒருவர் கடுமையான சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த நோய்க்கு காரணமான உணவு எது என இதுவரை கண்டறியப்படவில்லை.

கோடையில் சுற்றுலா செல்பவர்கள் உணவு விடயத்தில் மிக கவனமாக இருத்தல் அத்தியாவசியமானது.

Friday, 13 July 2007

Campylobacter: உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 6

உணவு மூலம் பரவும் நோயாக்கிகள்- 1 : அறிமுகம்
Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கிகள் - 3

Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4


Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5

Campylobacter - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் -6






Campylobacter உணவு மூலம் பரம்பலடையும் ஒரு முக்கிய நோயாக்கியாகும். உலகில் Campylobacter ஏற்படும் நோயில் 75-95% ஆன நோய் பரம்பலுக்கு உணவே பிரதான காரணியாக அறியப்பட்டுள்ளது. பிரதான நோயை காவும் உணவு பொருளாக கோழி இறைச்சி விளங்குகிறது, இதன் மூலம் 50-70% நோய் பரம்பலடையவதாக அறியப்பட்டுள்ளது.
கோழி இறைச்சிக்கு அடுத்த படியாக சூடாக்கப்படாத பால், குளோரின் ஊட்டப்படாத நீர் போன்றனவும் முக்கிய காரணிகளாக இருந்துள்ளன.




படம் பெறப்பட்ட மூலம்: http://res2.agr.ca/lethbridge/emia/SEMproj/campSEM_e.htm


இப் பக்ரீரியா ஆனது 11 இனங்களை உள்ளடக்கியிருந்தாலும்

1. Campylobacter jejuni
2. Campylobacter coli

ஆகிய இரண்டு இனங்களுமே மனிதனுக்கு நோய் ஏற்படுத்த வல்லவை ஆகும்.மனிதனில் இந்த பக்ரீரியாகளால் ஏற்படுத்தப்படும் நோய்களில் 80-90 % Campylobacter jejuni இனாலும், 10-2-% Campylobacter coli இனாலும் ஏற்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

கணக்கீட்டு அடிப்படையில் வருடாந்தம்

1. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் - 2453926
2. ஐக்கிய இராச்சியத்தில் - 277000
3. அவுஸ்திரேலியாவில் - 337655
பேர் பாதிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் மருத்துவ சிகிச்சை பெற்றோரின் எண்ணிக்கை மேலே சொன்ன எண்ணிக்கையிலும் குறைவாகும். அத்துடன் இதன் நோய்த்தக்கம் ஆங்காங்கு ஓரிருவருக்கு ஏற்பட்டாலும், மருத்துவ சிகிச்சை இன்றியே குணமடைய கூடியதாக இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை அறிவது சிரமம் ஆகும்.

இந்த இரண்டு பக்ரிரீயாக்களும் வளர உகந்த சூழலாக
37-45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்த போதும் குளிரூட்டியில் உயிர்வாழக்கூடியவை.
அமில கார இயல்பு 4.9 (pH)
ஆகியவற்றை சொல்ல முடியும்.





இதனால் ஏற்படும் பாதிப்புக்கள்

1. வயிற்று போக்கு: தொடக்கத்தில் நீர்த்தன்மையான வயிற்று போக்கு ஒரு நாளுக்கு 8 க்கு மேற்பட்ட தடவைகள் ஏற்படமுடியும். நாட்கள் செல்ல குருதியினுடனான வயிற்று போக்காக மாற்றமடையும்.

2. பொதுவாக நீர்த்தன்மையான வயிற்று போக்கு ஒருவாரம் வரை நீடிக்க கூடும். பொதுவாக நுண்ணூயிர்கொல்லி மருந்துகளை பாவிக்காமலே நோயாளி குணமாகிவிடுவார்.

3. பொதுவாக இப் பக்ரீரியாவால் கடுமையான பாதிப்புக்கள் ஏற்படுவதில்லை. ஆனால் அருமையாக
Gullain-Barre syndrom,
Meningitis
endocarditis,
septic arthritis
osteomylitis
neonatal sepsis

3. அண்மைய ஆய்வுகளில் இருந்து நீண்ட கால பக்க விளைவுகளாக உயர் அழுத்தம், சிறுநீரக செயற்பாடு பாதிக்கப்படல் ஆகியவை ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.



இதன் நோயரும்பு காலம் 1-3 நாட்கள் ஆகும்.


நோய் பரம்புவதை தடுக்கும் முறைகள்

1. கோழி, மற்றும் இறைச்சிவகைகளை நன்கு சமைத்து உண்ணல்
2. சமைக்கப்படாத இறைச்சிவகைகளை சமைத்த உணவுடன் தொடுக்கையுற வைத்தல், அல்லது இரண்டையும் ஒரே நேரம் கையாழுதல்
3. சூடாக்கப்படாத/ பாஸ்ரராக்கம் செய்யப்படாத பாலை அருந்துவதை தவிர்த்தல்
4. குளோரினேற்றப்படாத நீர் அருந்துவதை தவிர்த்தல்.

Thursday, 28 June 2007

Chamomilla தேனீர் குடிச்சிருக்கீங்களா?

புலம் பெயர்ந்த புதிதில் உணவகங்களில் தேனீர் அருந்துவதே பெரும் சிக்கலான விடயமாக இருக்கும். பல சுவைகள், எலுமிச்சை, ஸ்ரோபரி, ..... இப்படி பல. அதிலும் நாமே எல்லத்டையும் தெரிவு செய்யும் வகையில் இருக்கும் உணவகங்களில் எந்த தேயிலையை தெரிவு செய்வது என தெரியாமல் கிடைக்கும் ஒன்றை தூக்கி கொண்டு போய் சுடுதண்ணிக்க போட்டா தேத்தண்ணியிம் நிறமும் வராது குணமும் வராது... குடுத்த காசை நினைச்சு மிண்டி விழுங்கி போட்டு எழும்பிவாறது. பால் தேத்தண்ணிக்கு கறுவா போட்ட தேயிலையை தூக்கி கொண்டு போய் அதொட பட்ட அவஸ்தை இன்னும் மறக்கேல்லை.

ஒருமுறை உறவினர் வீட்டுக்கு போய் இருந்த போது குழந்தையின் வயிற்று உபாதையோ? அல்லது வேறு என்னவோ ஒரு சிறிய உடற் பிரச்சனைக்கு Chamomila தேனீர் நல்லாது என கொடுத்தார்கள். ஆனால் நான் அதை சுவைத்து பார்க்கவில்லை. அன்று அந்த தேயிலை பொதியில் பார்த்த பெயரும், பூவின் படமும் மனதில் பதிந்துவிட்டது.

கமராவும் கையுமாக தெருவோரம் திரியும் போது மீண்டும் Chamomile தாவரத்தை தெருவோரம் கண்ட போது தான் மருத்துவ குணமுள்ள தாவரம், தேனீரில் கலக்கப்படுவது என்பதும் ஞாபகம் வந்தது.
சரி என படமும் பிடித்து இணையத்தில் தேடியதில் கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.











Chamomilla, சூரிய காந்தி, மூக்குத்தி பூண்டு, செவ்வந்தி.... ஆகியவை தாவரவியலில் Asteraceae ( பழைய பெயர்: Compositae)எனும் பெயரை கொண்ட குடும்பத்து தாவரங்களாகும். பூக்கும் தாவரங்களிலேயே மிக அதிக எண்ணிக்கையான இனங்களை (Genera) (அண்ணளவாக 1100 இனங்கள்)மற்றும் ஒவ்வொரு இனமும் பல சாதிகள் (species) என மொத்தமாக 20, 000 மேற்பட்ட தாவர சாதிகளை கொண்ட ஒரு குடும்பமாகும்.

இந்த குடும்பத்து தாவரங்களில் சூரிய காந்தி சமையல் எண்ணெய்க்கு பயன்படுகிறது. இன்னும் சில மருத்துவ குணம் நிறைந்தவை. ஏனையவை பயிர் நிலங்களில் களைகளாக காணப்படுபவை.

Chamomilla recutita எனும் தாவரவியற் பெயரை கொண்ட இந்த தாவரம் பயிர்ச் செய்கை நிலங்களில் களையாக கருதப்பட்டாலும் பல மருத்துவ குணங்களை கொண்டது.

இதனுடைய பூ, மற்றும் முதிர்ந்த பூவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணேய் என்பன மருத்துவ தேவைக்கு பயன்படுத்தபடுகிறன.

பிரித்தெடுக்கப்படும் எண்ணெயின் தொழிற்பாடுகளாக

anti-inflammatory
spasmolytic
vulnerary
antimicrobial
mild sedative
carminative
antiseptic
anticatarrhal

இதன் மருத்துவ பயன்பாடுகளாக

1. Insomnia, anxiety and nervous tension ஆகியவற்றிற்கு மருந்தாக

2. சமிபாட்டு குழப்பங்களை போக்கும் நிவாரணியாக பயன்படுகிறது. எண்ணேயில் இருக்கும் வெவ்வேறு கூறுகள் வெவேறு வகையில் சமிபாட்டு தொகுதியின் நலனில் பங்களிக்கிறன. குறிப்பாக இரைப்பை, குடல் போன்றவற்றில் காணப்படும் தசைகளை தளர்வடைய செய்தல் (relaxes), குடற்சுவர் எரிவை போக்குதல் (flatulence and irritation of the gut wall), பசியை தூண்டுதல், குடலில் ஏற்படும் அழற்சியை (inflammation)போக்குதல் ஆகியன.

3. நோயெதிர்ப்பு சக்தியை கூட்டல், குறிப்பக பக்ரீரியாக்களை கொல்லுதல்
4. eczema க்கு பூச்சாக, கண், மற்றும் வாய் சுத்தபடுத்தும் பொருளாக ( mouthwash or eyewash) பயன்படுத்த கூடியது.

ஆகியவை சொல்லப்படுவதோடு

5. பாரம்பரியமாக asthma and hayfever போன்றவற்றுக்கு மருந்தாக பயன்படுத்தபடுவதாகவும் சொல்கிறார்கள்.



ஆனால் மனிதரிற்கு ஏற்படகூடிய சாதக, பாதகங்கள் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சிகள் இன்னும் போதுமான அளவில் நடைபெறவில்லை என சொல்லப்படுகிறது.

Wednesday, 27 June 2007

ஆடிக்கூழ்







ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

-நவாலி சோமசுந்தரப்புலவர்




பாடல்: VSK கானா பிரபா ஆகியோரின் பதிவில் இருந்து.

பிற்குறிப்பு:
1. இது பாட்டுடனான மீள் பதிவு
2. வீட்டுக்கு போய் கொழுகட்டையுடைய படமும் சேர்த்து விடுகிறேன் :)

Friday, 25 May 2007

Yersinia enterocolitica

உணவு மூலம் பரவும் நோயாக்கிகள்- 1 : அறிமுகம்
Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கிகள் - 3

Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4


Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5

Yersinia உணவு மூலம் குறிப்பாக பன்றி இறைச்சி மூலம் அதிக அளவில் பரம்பலடையக்கூடிய ஒரு நோயாக்கியாகும். தற்போதைய நிலையில் அதிக முக்கியத்துவமற்ற ஒரு நோயாக்கியாக காணப்படும் போதும் இதன் இயல்புகள் காரணமாக எதிர்காலத்தில் முக்கியமான ஒரு நோயாக்கியக மாற்றமடையக்கூடியதாகும்.


பொதுவாக இடைவெப்ப வலய/ குளிர் நாடுகளான, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், அவுஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளிலேயே இந்த நோயாக்கி பொதுவாக பரவலடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் சிறப்பாக இந்த நோயாக்கி, வட ஐரோப்பிய நாடுகளான, நோர்வே, சுவீடன், டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளில் முக்கியமான ஒரு நோயாக்கியாக அறியப்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணமாக அவர்களது பாரம்பரிய உணவு பழக்கத்தில் பன்றி இறைச்சியை சரியாக சமைத்து உண்ணமை என அறியப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இதன் நோய்த்தாக்கம் காரணமாக ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 96368 பேர் வருடாந்தம் பாதிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டாலும், வைத்திய குறிப்புக்களின் பிரகாரம், வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறுபவர்கள் வருடாந்தம் 2536 பேராகும். கனடாவில் 1 இலட்சம் பெர்களில் ஒருவர் வருடாந்தம் பாதிக்கப்படுவதாக கனடாவின் சுகாதார அமைப்பின் இணையத்தளம் சொல்கிறது.

இந்த பக்ரீரியாவை பற்றிய சிறிய வரலாற்று குறிப்பு

Yersinia எனும் சாதி (Genus) மனிதருக்கு நோயை ஏற்படுத்தக்கூடிய 3 இனங்களை (Species) ஐ கொண்டது. இதன் சாதிப்பெயரானாது (Genus)
பிளேக் எனும் கொள்ளை நோயின் (Plague) நோயாக்கி எது என அறிவதற்கு பாடுபட்டு அந்த நோயாக்கியை கண்டுபிடித்த Alexendre Yersin எனும் மருத்துவரை கௌரவிக்க வைக்கப்பட்டதாகும்.

1. Yersinia pestis

இது பிளேக் (Plague) நொய்க்கு காரணமான நோயாக்கியாகும். இது உணவு மூலம் பரவுவதில்லை.




2. Yersinia entrocolitica
3. Yersinia pseudotuberculosis



இவை இரண்டும் உணவு மூலம் பரவும் நோயாக்கிகளாகும்.

இவை வளர உகந்த நிபந்தனைகள்

வெப்பநிலை: 0-44 பகை டிகிரி செல்சியஸ், மிக உகந்த வெப்பநிலை- 28-29
அமில/ காரத்தன்மை (pH) : 4.2-10.0, மிக உகந்த அளவு - 7.2-7.4


சூழலில் தப்பிவாழும் இயல்பு

நீரில்: 64 கிழமைகள் வெப்பநிலை 4 பாகை டிகிரி செல்சியஸ் ஆக இருந்தால்
மண்: உலரும் மண்ணில் 10 நாட்கள்
பன்றி கழிவு: 73 நாட்கள்
கரட் சுத்தம் செய்து, கழுவும் இயந்திரபகுதியில் - 2 மாதங்களுக்கு மேலாக

காவிகளாக தொழிற்படும் விலங்குகள்

பன்றி, எலி, மான், நாய், பூனை, ஓநாய்......

ஏற்றுமதி செய்யப்படும் பன்றி, மற்றும் எனைய இறைச்சிவகை மூலமும், ஏற்கனவே பரம்பலடையாத/ இந்த நோயாக்கி காணப்படாத நாடுகளிற்கு இந்த நோயாக்கி பரம்பலடைய முடியும் என ஜப்பானில் இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிகளில் செய்யப்பட்ட ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது.



இதுவரை மனிதனில் நோய்த்தாக்கம் ஏற்பட்ட சந்தர்பங்களில் இந்த நோயாக்கி பரவ காரணமாக இருந்த உணவுகள்

பன்றி இறைச்சி, பால், சொக்கிலேட் சுவையூட்டப்பட்ட பால், சீவப்பட்ட கரட், குளோரினூட்டப்படாத குடி நீர்

உணவு மூலம் மட்டுமல்லாது
நேரடியாக விலங்குகளில் இருந்து மனிதருக்கும்,
மனிதரில் இருந்து மனிதருக்கும்
குருதி மாற்றீட்டுக்காக பயன்படுத்தப்பட்ட குருதி மூலமும் பரம்பலடைந்தது அறியப்பட்டுள்ளது.



நோயின் வெளிப்பட்டுகள்


1- வயிற்று உபாதைகள்: Gastroentrocolitis, abdominal pain,

2. நிர்பீடன குறைபாடு உள்ளவர்களில்/ நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களில் sepsis, bacteremia போன்ற நோய்கள் ஏற்பட முடியும்


நோய் அரும்பு காலம்: 3- 7 நாட்கள்
நோய் நீடித்திருக்கும் நாட்கள்: 2- 3 கிழமைகள்

பொதுவான அறிகுறிகள்


காய்ச்சல், வயிறோட்டத்துடன் கூடிய வயிற்று உபாதை
வயிற்றின் வலதுபக்க கீழ் பகுதியில்ல் ஏற்படும் நோ சில நேரம் குடல் வளரி அழற்சியை (Appedicitis) போலியாக பிரதிபலிக்ககூடும்.

நீட்ட கால பக்க விளைவுகளாக சில பேரில்

Reactive arthritis, erythema nodosom, rash போன்றவை ஏற்படகூடும்.


மருத்துவம்

பொதுவாக எந்தவித நுண்ணுயிர் கொல்லிகளும் () உள்ளெடுக்கமலே குணமாக கூடியது.

ஆனால் வயதானவர்கள், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் (நீரிழிவு,புற்று நோய் போன்ற வற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு) நுண்ணுயிர் கொல்லிமூலம் குணமாக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.


நோய் ஏற்படுவதை தவிர்க்க

இறைச்சிகளை முழுமையாக சமைத்தல்
சமைத்த உணவையும், சமைக்காத உணவையும் ஒருங்கே கையாழுவதை தவிர்த்தல்

Escherichia coli O157: H7

உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் 1: அறிமுகம்

Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கிகள் - 3 ( Food-borne pathogen):



Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4





Escherichia coli O157: H7 (E. coli O157:H7) எனும் உணவு மூலம் பரவும் நோயாக்கி பக்ரீரியா பிரதானமாக மாட்டிறைச்சியுடன் பரவுவக்கூடியதாகும். E. coli O157:H7 சாதாரணமாக மாடு, ஆடு, செம்மறி ஆடு, மான் என்பவற்றின் குடல் பகுதியில் அந்த விலங்குகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் வாழும் ஒரு பக்ரீரியா ஆகும். ஆனால் இது உணவு மூலம் மனிதனின் குடல்/ சமிபாட்டு தொகுதியை அடையும் போது மனிதரில் நோயை ஏற்படுத்துகிறது.







ஒளிப்படம் பெறப்பட்டது: http://anthropik.com/wp-uploads/e-coli.jpg



இந்த பக்ரீரியா ஏற்படுத்தும் நோய்களாக

இதன் தாக்கத்தால் வருடாந்தம் 73 000 பேர் ஐக்கியா அமெரிக்க நாடுகளில் மட்டும் பாதிக்கப்படுகிறனர். அவர்களில் 61 இறப்பை சந்திக்கிறனர்.

1. குருதியுடன் கூடிய வயிற்று போக்கு.

E. coli O157:H7 உணவுடன் சென்றடைந்து 3- 4 நாட்களில் நோய் ஏற்படுகிறது. குருதியுடானான வயிற்று போக்கு, வயிற்று குழப்பம் என்பவற்றை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் குருதி போக்கற்ற வயிற்று போக்கோ அல்லது எந்த அறிகுறிகளுமோ தோன்றாமல் இருக்க கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. சிறிதளவு காய்ச்சல் ஏற்படலாம். நொய் ஏற்பட்டு 5- 10 நாட்களில் பொதுவாக குணமாகிவிடும்.

2. Hemolytic uremic syndrome (HUS)

சில வளர்ந்தவர்கள், மற்றும் 5 வயதுக்கு குறைந்த சிறுவர்கள், முதியவர்கள் ஆகியோரில் குருதி கலங்கள் சிதைவு, சிறு நீரகங்கள் செயலிழப்பு என்பன ஏற்படுகிறது. பொதுவாக வயிற்று போக்கு ஏற்படுபவர்களில் 8% ஆனோர் இப்படியான தீவிர நோய் தாக்கதுக்கு உள்ளாகிறார்கள்.

3. நீண்ட கால தாக்கங்கள்


E. coli O157:H7 நோய் தாக்கம் ஏற்பட்ட ஒரு சிலரில் நீண்ட கால பக்க விளைவுகளாக அவயவங்கள் செயல் இழப்பு (paralysis), சிறு நீரக செயல் இழப்பு (persistent kidney failure), உயர் குருதி அழுத்தம் என்பவை சொல்லப்படுகிறன.




எவ்வாறு E. coli O157:H7 பரவலடைகிறது

இது பொதுவாக மாட்டின் குடல் பகுதியில் காணப்படுவதால்
முறையாக சமைக்கப்படாத hamburger, அரைத்த இறைச்சி என்பவற்றுடன் பரவ முடியும்.

அடுத்து, முளை அரும்புகள் (sprouts), லெற்றியுஸ் (lettuce), கீரை (spinach), சலாமி (salami), பாஸ்ரராக்கம் செய்யப்படாத பால் (unpasteurized milk), பழச் சாறு (juice)
மற்றும் மல கழிவுகள் தொற்றுதலடைந்த குடி நீர்/ நீச்சல் குளம்.

இவற்றுக்கு மேலதிகமாக தோற்று ஏற்பட்ட மனிதர்களில் இருந்து சரியான சுகாதார பழக்கவழக்கம் இன்மையால் இலகுவில் பரவலடைய முடியும்.




எவ்வாறு தொற்று ஏற்படாமல் தவிர்ப்பது


1. வீடுகளில் hamburger அல்லது அரைத்த மாட்டிறைச்சியையோ சமைக்கும் போது இறைச்சி முழுமையக நன்கு சமைக்கப்பட்டிருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் விவசாய துறை (FDA) அரைத்த இறைச்சி, hamburger என்பவற்றை சமைக்கும் போது அவற்றின் வெப்ப நிலை 71.1 பாகை டிகிரி செல்சியஸ் (160 டிகிரி பரனைட்) வெப்ப நிலையை அடையும் வரை நன்கு சமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறது.
மேலும் சமைக்கப்பட்ட இறைச்சி, hamburger என்பவற்றை 40 - 140 பாகை பரனைட் வெப்ப நிலையில் 3- 4 மணி நேரத்துக்கு மேல் வைத்திருக்க கூடாது எனவும் அறிவுறுதுகிறது.

2. உணவகங்களில் சரியாக சமைக்கப்படாத hamburger அல்லது அரைத்த மாட்டிறைச்சி வழங்கப்பட்டால் அவற்றை சரியான முறையில் சமைத்து தருமாறு கேட்பதுடன், புதிதாக பண், சாப்பாடு பாத்திரம் என்பவற்றை கேட்பது முக்கியமானது.

3. சமைத்த உணவுகளை சமைக்காத இறைச்சி, hamburger என்பவற்றுடன் கலந்து வைப்பது, அல்லது இரண்டு வகை உணவுகளையும் ஒரே பாத்திரங்களில் சரியாக சுத்தம் செய்யாத பாத்திரங்களில் வைப்பது, கைகளை சரியாக சுத்தம் செய்யமை என்பன தவிர்க்கப்பட வேண்டும்

4. பால், பழச்சாறு, அப்பிள் சிடர் என்பவை பாஸ்ரராக்கம் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.

5. குளோரின் பரிகரிப்பு அல்லது வேறு வகை தொற்று நீக்கம் செய்யப்பட்ட நீரை மட்டும் அருந்த வேண்டும்.

6. சமைக்காது உண்ணும் மரக்கறி, இலை வகை, பழ வகைகளை ஓடும் நீரில் நன்கு கழுவிய பின் உண்ணுதல்.

7. நீச்சல் குளத்து நீரை அருந்துவதை தவிர்த்தல்.


8. நோய்த்தாக்கத்துக்கு உட்பட்டவர்கள் கைகளை சவர்காரம் கொண்டு சரியாக சுத்தம் செய்தல், நோய் ஏற்பட்டவர்கள் பொதுவான நீச்சல் தடாகங்களில் நீந்துவதை தவிர்த்தல்.



என்ன நண்பர்களே இனி கவனமாக இருப்பீர்களா?

Listeria monocytogenes


உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் அறிமுகம் -1


Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கிகள் - 3



படம் பெறப்பட்டது : http://wishart.biology.ualberta.ca/BacMap/includes/species/Listeria_monocytogenes.png

Listeria monocytogenes ஆனது உணவு பொருட்களோடு மனிதனை அடைந்து மனிதனுக்கு நோய் ஏற்படுத்தக்கூடிய பக்ரீரியா (Bacteria) ஆகும். இது 2 பாகை டிகிரி செல்சியசில் இருந்து 45 பாகை டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடிய பக்ரீரியா ஆக இருந்த போதும், இது வளர்வதற்கு மிகவும் உவப்பன வெப்பநிலை 30-37 பாகை டிகிரி செல்சியஸ் ஆகும். Listeria monocytogenes மனிதனில் ஏற்படுத்தும் நோயை (லிஸ்ரிரியோசிஸ்) listeriosis என அழைப்பர்.
இது பிரதானமாக


1. நிர்பீடன குறைபாடு உள்ளவர்கள் (immunocompromised): உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்
2. பிறந்த குழந்தைகள்
3. வயது வந்தோர்
4. கர்ப்பிணி பெண்கள்

ஆகிய மக்கள் குழுமத்தை அதிகம் தாக்குவதனால் இதை opportunistic pathogen என அழைப்பர். இது பொதுவாக சுக தேகிகளை பாதிப்பதில்லை.


இதனால் ஏற்படும் நோயின் விளைவுகளாக

1. மூளைகாய்ச்சல் ? / மூளை அழற்சி (meningitis): மூளை, முண்ணான் மென்சவ்வுகளில் (membrane) ஏற்படும் அழற்சி (inflammation).
2. Septicaemia : குருதியில் அதிக அளவில் பக்ரீரியா காணப்படல்/ பெருக்கம்/ குருதி நஞ்சாக்கம்
3. கருச்சிதைவு (abortion)

ஆகியவை குறிப்பிடப்படுகிறன.



உலக அளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள்



80 ஆண்டுகளுக்கு முன்னர் Listeria monocytogenes ஆய்வுகூட விலங்குகளில் Septicaemia நோயை ஏற்படுத்துவதாக அறியப்பட்டது. 1929 ஆம் ஆண்டில் மனிதனில் முதன் முதலாக இதன் நோய்த்தாக்கம் அறியப்பட்டாலும் மிக நீண்ட காலமாக மனிதனில் இதன் தாக்கம் இருப்பதாக அறியப்பட்டிருக்கவில்லை.

1981 ஆம் ஆண்டில் முதலாவாது மிகவும் அதிக அளவிலான நோய்த்தாக்கம் கனடாவில் அறியப்பட்டது. இதன் போது 41 மக்கள் பாதிக்கப்பட்டார்கள், அவர்களில் 34 பேர் கர்ப்பிணி பெண்களாவர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் முட்டை கோசு (கோவா/cabbage) மூலம் பரவியது அறியப்பட்டது. பின்னர் 1985 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எட்டு மாத காலப்பகுதியில் மெக்சிக்கன் வகை சீஸ் (Mexican style cheese) ஐ உட்கொண்ட 142 பேர் பாதிக்கப்பட்டார்கள். அவர்களில் முன்றில் ஒரு பங்கினர் நோய் காரணமாக உயிர் இழந்தனார். 1987- 1989 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இங்கிலாந்தில் pâté (spreadable paste made from meat) எனும் உணவை உட்கொண்ட 350 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். பிரான்ஸ் நாட்டில் 1992 ஆம் ஆண்டில் பன்றி இறைச்சியில் (Pork tongue in aspic) செய்யப்பட்ட உணவை உட்கொண்ட 279 பேர் பாதிக்கப்பட்டனர்.

இவற்றை விட இன்னும் பல நாடுகளில் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் இதன் நோய்த்தாக்கம் சரியானமுறையில் மருத்துவ பதிவேடுகளில் குறிப்பிட படாமை, ஆங்காங்கு சிதறலாக நடை பெறும் ஓரிரு சம்பவங்கள் போதுமான கவனத்தை பெறாமை போன்ற காரணங்களால் இதன் தாக்கம் குறைவாக மதிப்பிடப்படுவதாகவும் இருக்க முடியும்.




Listeria monocytogenes தாக்கம் தற்போது அதிகரித்து செல்வதற்கான காரணங்கள்



இது சூழலின் அனைத்து பகுதிகளிலும் அதாவது மண், நீர், கழிவுகள், மனித விலங்கு கழிவுகள் ஆகியவற்றில் காணப்படுகிறது. அத்துடன் மண்ணில் இது அழுகலடையும் அல்லது பிரிந்தழியும் (decaying) தாவர கழிவுகளில் வாழக்கூடியது. மேலும் பாதமான சூழ்நிலைகளிலும் (அதிகரித்த உப்பு செறிவு, அமில தன்மை, குளிரூட்டப்பட்ட இடங்கள்) வாழக்கூடியதாக இருப்பதால் உணவு தயாரிக்கும் இடங்களில் இருந்து இதை அப்புறப்படுத்துவது மிக கடினமானது.

1. உணவு பொருட்களில் இயற்கையாக அவற்றை பழுதடைய (Spoilage) செய்யும் நுண்ணங்கிகள் குறிப்பாக பக்ரீரியாக்கள் காணப்படுகிறன. இவற்றுடன் Listeria monocytogenes போட்டி போட்டு உணவில் பெருகும் வல்லமை அற்றது. ஆனால் தற்போதைய உணவு பாதுகாப்பு முறைகளால் உணவை பழுதடைய செய்யும் நுண்ணங்கிகள் (Food spoilage microorganisms) உணவு பொருட்களில் இருந்து அகற்றப்படுகிறன அல்லது எண்ணிக்கையில் குறைக்கப்படுகிறன. இதனால் Listeria monocytogenes உடன் போட்டிக்கு நுண்ணங்கிகள் இல்லாது போவதால் இலகுவில் உணவுப்பொருட்களில் பெருகி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

2. தற்போதைய அதிகரித்த சுகாதார வசதிகளால், வயது வந்தோர்களின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகரித்து செல்கிறது. வயது வந்தோர் Listeria monocytogenes இன் தாக்கத்துக்கு இலகுவில் உள்ளாக கூடியவர்கள்.

3. தற்போது உணவு பொருட்கள் பெரும் நிறுவனங்களில் தயாரிக்கப்படுவதுடன், திடீர் உணவு வகைகளை தயாரிப்பதற்காக மிகப்பெரிய சமையலிடங்கள் பயன்படுத்தப்படுகிறன. இதன் போது துப்பரவு பேணுவதில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக இதன் தொற்று உணவில் இலகுவில் ஏற்பட முடியும்.

4. தற்போது மக்கள் அதிக அளவில் குளிரூட்டியை (Refrigerator) பாவித்து வருகிறார்கள். Listeria monocytogenes குளிரூட்டல் நிபந்தனைகளில் வாழ்ந்து பெருகக்கூடியது. தற்செயலாக குளிரூட்டியில் ஒரு முறை தொற்று ஏற்பட்டால், அது தொடர்ச்சியாக குளிரூட்டியில் நிலைத்திருந்து அடுத்து அங்கு பேணப்படும் உணவுகளில் தொற்றை ஏற்படுத்தி அதை உண்ணுவோரை பாதிக்க முடியும்.

5. உலக அளவில் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வரும் இயற்கை உணவுகள், மற்றும் அதிக உணவு பாதுகாப்பு செயன்முறைகளுக்கு உட்படாத உணவு வகைகள்.

6. தற்போதைய நவீன கணினி வலைப்பின்னல் உலகின் மூலை முடுக்குகளில் நடைபெறும் இதன் தாக்கம் பற்றிய தரவுகளை ஒன்றிணைக்க உதவி செய்கிறது. இதனால் முன்னர் கணிப்புக்கு வராத சம்பவங்கள் அனைத்தும் தற்போது கணிப்பில் சேர்த்துகொள்ளப்படுகிறது.




Listeria monocytogenes இன் தொற்றும் நோய் உருவாக்கமும்



அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வருடாந்தம் மில்லியன் மக்களில் 2- 14 பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

மனிதரில் உணவு உள்ளேடுக்கப்படும் போது தொற்று ஏற்பட்ட உணவின் மூலம் இது குடல் பகுதியை அடைகிறது. குடல் பகுதியில் இருக்கும் Peyer's patches ஐ அடைந்து பெருக்கமடைவதுடன், குருதி (Blood), நிண நீர் (Lymph) மூலம், ஈரல் (Liver) , சதையி (Spleen) போன்றவற்றை அடைந்து அங்கு பெருக்கமடைகிறது. ஆனால் மைய நரம்பு தொகுதியை எப்படி சென்றடைகிறது என்பது இதுவரை தெளிவாக அறியப்படவில்லை.

இது ஒரு கலத்தினுள் பெருக்கமடையும் நோயாக்கி (Intracellular pathogen). ஒரு கலத்தினுள் உள் நுளைந்து அங்கு பெருக்கமடைந்து, பின்னர் ஜெட் போன்ற ஒரு அசைவின் மூலம் பெறும் உந்து சக்தியால் அடுத்த கலத்தை துளைத்து உள் நுளைகிறது. இதனால் சாதாரணமான நுண்ணுயிர் கொல்லிகளினால் (antibiotic) இதனை கட்டுபடுத்த முடிவதில்லை.




படம் பெறப்படது:http://mcb.berkeley.edu/labs/portnoy/Listeria%20Cycle%20(original).gif

Listeria monocytogenes பிரதானமாக மைய நரம்பு தொகுதி (Central nervous system - CNS) பகுதியிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் இதன் பாதிப்புக்கு உட்பட்ட 20 - 30% மக்கள் இறப்பை சந்திக்கிறனர்.

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்கள் அவர்களின் கர்ப்ப காலத்தில் எந்த நேரமும் நோய் தாக்கத்துக்கு உட்பட முடியும் ஆயினும் கர்ப்ப காலத்தின் மூன்றாம் ( இறுதி 3 மாதகாலம்) பகுதியிலேயே இது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் தொற்று கர்ப்பிணி பெண்ணில் எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது இருக்க முடியும், அல்லது

குளிருடன் சேர்ந்த காய்ச்சல் (Flu-like syndrome with chills)
தலையிடி
தசை, மூட்டு நோக்கள்
வயிற்று உபாதைகள்

என்பவற்றையும்

கருப்பையில் ஏற்படும் தொற்று

கருச்சிதைவை,
இறந்த குழந்தை பிறப்பை
அல்லது நோய் தாக்கத்துக்கு உட்பட்ட குழந்தைப் பிறப்பையும்

விளைவாக தரமுடியும்.


பிறந்த குழந்தையில்



படம் பெறப்பட்டது: www.leighday.co.uk/cat.asp?cat=997

பிறந்து சில நாட்கள் ஆன குழந்தையில்


இந்த தொற்று தாயில் இருந்து ஏற்பட்டதாக இருக்கும்
பிரதானமாக
Sepsis
மற்றும்
Granulomatosis infantiseptica எனும் அறிகுறிக்குரிய இயல்புகளாக உடல் முழுமையும் பரவலடைந்த pyogranulomatous microabscesses உடன் அதிகரித்த இறப்பும் காணப்படும்.

பிறந்து பல நாட்கள்/ வாரங்கள் ஆன குழந்தையில்

மூளைகாய்ச்சல் / மூளை அழற்சி (meningitis)யை ஏற்படுத்துவ்தாக அறியப்பட்டுள்ளது.


வயது வந்தவர்களில்

பிரதானமாக நிர்பீடன தொகுதி பாதிக்கபட்ட முதியவர்கள், எயிட்ஸ் நோயாளிகள், நிர்பீடன தொகுதியை கட்டுப்படுத்தும் மருந்துகளை உள்ளெடுக்கும் புற்று நோயளிகளை இலகுவில் தாக்குகிறது.
50-70% சந்தர்ப்பங்களில் மைய நரம்பு தொகுதியை தாக்குகிறது.


நோய் அறிகுறி இரண்டு பகுதிகளை கொண்டது

முதல் பகுதியில்

தலைவலி, வாந்தி, பார்வை குறைபாடு, தலைச்சுற்று போன்றவையும்,

இரண்டாம் பகுதியில்
மைய நரம்பு தாக்கத்தால் உடல் அவையவங்கள் செயற்பாடுஇழத்தல், இறப்பையும் ஏற்படுத்துகிறது.



இதனை கட்டுபடுத்த உலக நாடுகளில் உள்ள கட்டுபாடுகள்.

பொதுவாக Listeria monocytogenes காணப்படும் உணவுகளாக சூடக்கப்படத/ பாஸ்ரராக்கம் (Pasteurization) செய்யப்படாத பால், புகையூட்டப்பட்ட மீன், பன்றி இறைச்சி சொசெச், உப்பிடப்பட்ட காளான், ஹொட் டொக்ஸ், சிக்கின் நகட்ஸ், அரைத்த இறைச்சி, சீஸ், மரக்கறி சலாட் என்பவற்றை குறிப்பிடலாம்.

உலகின் பல அபிவிருத்தி அடைந்த நாடுகள் Listeria monocytogenes முற்றாக இல்லாத உணவுகளை சந்தை படுத்த வேண்டும் என்பதையே விரும்புகிறன. பொதுவாக 25 கிராம் உணவில் எந்த ஒரு Listeria monocytogenes காணப்படாத இடத்து அந்த உணவு பாதுகாப்பானதாக அங்கிகரிக்கப்படுகிறது.

மக்கள் நன்கு சூடாக்கிய பாலை அருந்துவதும், இறைச்சியை முழுமையாக சமைத்து உண்பதும், மரக்கறிகளை முழுமையாக, நன்றாக கழுவிய பின் பாவிப்பதும் அத்தியாவசியமானது என அறிவுறுத்தப்படுகிறது. அத்துடன் சமைத்த உணவை சமைக்கத உணவுடன் தொடர்புறுமாறோ அல்லது கைகளை சுத்தம் செய்யாது மாறி மாறி உணவுகளை கையாழுவதோ தவிர்க்கப்பட வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்படுகிறது.




குறிப்பு: உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் பதிவின் தொடர்ச்சிக்காக இப்பதிவு மீள்பதிவு செய்யப்படுகிறது.

Friday, 18 May 2007

சுடச் சுட கீரை புட்டு சாப்பிடலாம்.....

மதியுடைய கீரை வாங்கலையோ பதிவை பாத்த போது இத போட வேணும் எண்டு நினைச்சது. பிறகு அத மறந்து போய் விட்டிட்டன். இப்ப சயந்தன் சோமி யோட கூட்டு பதிவு மீளவும் அத ஞாபகப்படுத்தினதாலை இப்ப உங்களை சாப்பிட கூப்பிடுறன்.







தேவையான பொருட்கள்

1. நீராவியில் அவித்து அரித்த கோதுமை மா/ ஆட்டா மா 250 கிராம்
2. கீரை 250- 350 கிராம் - கீரை (spinach) கிடைக்காட்டி, மீகுளிரூட்டின கீரை (frozen spinach)
3. வெங்காயம் - பெரிய வெங்காயம் பாதி/ சிறிய சிவப்பு வெங்காயம் 4
4. பச்சை மிளகாய் - 1, காரம் சாப்பிட கூடிய ஆக்கள் 2 போடலாம்
5. உடன் திருவிய தேங்காய் பூ/ காய்ஞ்ச தேங்காய் பூ
6. அளவுக்கு உப்பு
7. நீர்

செய்முறை

1. கீரையை பொடி பொடியா வெட்டி கொள்ளவும். மீகுளிரூட்டின கீரை எண்டால் அதை எடுத்து குளிர் நீங்க சிறிது நெரம் வைக்கவும். பொதுவா மீகுளிரூட்டின கீரை வெட்டியபடி இருக்கும்.

2. வெங்காயம், மிளாகாய் என்பவற்றை சிறிது சிறிதாக அரிந்து கொள்ளவும்.
3. வாய் அகன்ற பாத்திரத்தில் வெட்டிய கீரை, வெங்காயம் என்பவற்றை போட்டு அளவுக்கு உப்பையும் தூவி கோள்ளவும்

4. கோதுமை மாவை சிறிது சிறிதாக தூவி கலக்கவும், பொதுவாக கீரை, வெங்காயம் என்பவற்றில் இருக்கும் நீர் தன்மை மா புட்டு பததுக்கு வர போதும், மா நங்கு கீரையுடன் சேரவில்லை எனில் சிறிது நீர் தூவி கலக்கலாம். ஆனால் மிகையாக நீர் தூவ கூடாது. இதை மற்ற புட்டுகள் கொத்தி பெரிய மா கட்டிகளை சிறிதாக்குவது போல செய்ய முடியாது. அதானால் கவனமாக சிறிய சிறிய கட்டிகளாக வருமாறு குழைத்து எடுக்க வேண்டும்.

5. நீத்து பெட்டி/ புட்டு குழாயில் போட்டு அவித்து எடுக்கவும்.

6. இறக்கிடயதும் சுடச்சுட உடன் துருவிய தேங்காய் பூவை கலந்து சாப்பிடவும்.



காய்ந்த தேங்காய் பூ தான் கிடைக்கும் என்றால் புட்டு அவிக்க முதல் குழைத்த மாவுடன் கலந்து அவிக்கலாம். அல்லது காய்ந்த தேங்காய் பூவுக்கு சிறிது நீர் கலந்து 10/15 செக்கன் மைக்கிரோ வெவில் சூடக்கி எடுத்து அவித்த புட்டில் கலந்து சாப்பிடலாம்.

நான் அவித்த புட்டுக்கு கீரை போதுமான் அளவில் கலக்கவில்லை. குளுருட்டிலை போதுமான அளவு இருக்கும் எண்டு நினைச்சு போனா கொஞம் தான் இருந்திச்சு :(

Sunday, 13 May 2007

"மஞ்சள் மகத்துவம்"

மஞ்சள் (Turmeric - Cucuma longa) பாரம்பரியமாக உணவு வாசனை/சுவையூட்டி, நிறமூட்டி, மூலிகை என பல தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஆயுள் வேத/ சித்த மருத்துவ மூலிகையாக பல காலமாக பயன்படுத்தப்பட்டுவந்தாலும் அதன் பயன்கள் அறிவியல் ரீதியாக ஆய்வுகள் மூலம் அண்மைக்காலமாக நிரூபிக்கப்பட்டுவந்துள்ளன. இதன் ஒருகட்டத்தில் அமெரிக்க நிறுவனங்கள் மஞ்சளுக்கு காப்புரிமை பெற்ற சம்பவமும் அறிந்ததே.





உணவு சுவையூட்டி, அழகு சாதன பயன்பாடு என்பவற்றுக்கு அப்பால் அதன் உடல் நலன் சார் பங்களிப்பை பற்றி பார்த்தோமானால்.

1. புற்று நொய் எதிர்ப்பு (Anti-cancer)
2. நுண்ணுயிர் கொல்லி (Anti-microbial)
3. அழற்சியை எதிர்த்தல் (Anti-inflamatory)
4. ஒட்சியேற்ற எதிரி (Anti-oxidant)



மஞ்சளில் இருக்கும் முக்கிய இரசயான சேர்வைகள்

1. Turmerin
2. Essential oils
3. Curcumanoids
a. Phenolic compounds
c. Curcumin- (diferuloylmethane)



இந்த இரசாயன சேர்வைகளில், Curcumin- (diferuloylmethane) புற்று நோய் எதிர்ப்பில் முக்கிய பங்களிப்பை செய்கிறது.


Curcumin- (diferuloylmethane) இன் புற்று நோய் எதிர்ப்பு செயன்முறை

1. புற்று நோய் கலங்கள் பெருக்கமடைவதை தடுத்தல்
2. புற்று நோய் விருத்தியின் படி I, II, ஆகியவற்றின் நொதிய (Enzyme) செயற்பாட்டை கட்டுபடுத்தல்
3. புற்று நோய்கலங்கள் ஏனைய இடங்களில் சென்று இணைவதை தடுத்தல்
4. ஒட்சியேற்ற எதிரியாக செயற்படல்

சமிபாட்டு தொகுதியில் புற்று நோய் ஏற்படுவதில் COX-2 எனும் நொதியம் செயற்படுவதாக அறியப்பட்டுள்ளது. Curcumin- (diferuloylmethane) இதன் செயற்பாட்டை தடுப்பதாக அறியப்பட்டுள்ளது.

எலிகளில் செய்யப்பட்ட ஆய்வில்
மரபணுக்களுக்கு நச்சுதன்மையான காரணிகளை நிரோதிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

மனிதரில் புற்று நோய்க்கு எதிராக 1.6 கிராம் Curcumin- (diferuloylmethane) ஒரு நாளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என சொல்லப்பட்டாலும் மேலதிக ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். ஏன் எனில் அண்மையில் செய்யப்பட்ட சில ஆய்வுகளில் Curcumin-(diferuloylmethane) புற்று நோய்க்கு வழங்கப்படும் ஏனைய மருந்துகளின் செயற்பாட்டை பாதிப்பது அறியப்பட்டுள்ளது.

புற்று நோய் எதிர்ப்புக்கு மேலதிகமாக இதய நோய்களில் இருந்து காப்பதிலும், கொலஸ்திரோலின் பாதகமான விளைவுகளை குறைப்பதிலும் பங்காற்றுவதாகவும் அறியப்பட்டுள்ளது.முக்கியமாக ஓட்சியேற்ற எதிரியாக செயற்படும் இதன் இயல்பு LDL கொலஸ்திரோல் ஒட்சியேற்றத்தை தடுப்பதன் மூலமே கொலஸ்திரோலின் பதிப்பை தடுப்பதாக சொல்லப்படுகிறது.

Saturday, 5 May 2007

உள்ளி நாத்தம் தாங்கலை.....

உள்ளி, வெங்காயம், லீக்ஸ் (leeks)போன்ற மரக்கறிகளிள் சாதாரண மரக்கறி வகைகளிலும் பார்க்க உடல் நலனுக்கு நன்மை பயக்க கூடியவை என சொல்லப்படுகிறன. உள்ளி, வெங்காயத்தின் வாசனை நீடித்து இருப்பதால் அதை விரும்பாதவர்கள் பலர்.






உள்ளி, வெங்காயம் போன்ற வற்றில் இருக்கும் கந்தத்தை கொண்ட சேதன (Organosulfur) சேர்வைகள் உடல் நலனுக்கு உகந்தவை என சொல்லப்படுகிறன.

முக்கியமான பயன்களாக

1. புற்று நோயை எதிர்த்தல்

இத்தாலி, மற்றும் சுவிஸ்லாந்து நாடுகளில் வெங்காயம், உள்ளி உண்பவர்கள், உண்ணாதவர்கள், உண்பவர்களின் உள்ளி, வெங்காயம் உண்ணும் அளவு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகளில் வாய் (mouth), களம் (esophagus) குதம் (colon) மார்பகம் (breast), சூலகம் (ovary) சிறுநீரகம் (Kidneys)போன்ற வற்றில் புற்று நோய் ஏற்படும் சாத்தியம் வெங்காயம், உள்ளி போன்றவற்றை உண்பவர்களில் குறைவு என அறியப்பட்டுள்ளது.

2. இதய நோய்களை குறைத்தல்

மனிதரில் இதய சம்பந்தமான நோய்களை குறைப்பதில் உள்ளியின் பங்களிப்பு குறித்த ஆய்வுகள் முதலில் 1926 இலேயே ஆரம்பிக்கப்பட்டாலும், 1960 ஆம் ஆண்டுகளிலிருந்து அதிகளவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உள்ளி உண்பதன் மூலம், குருதியில் கொலஸ்திரோல் அளவு, மற்றும் கொழுப்பின் அளவு குறைவடையும் என அறியப்பட்டுள்ளது.

விலங்குகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில்
உள்ளி, வெங்காயம் என்பன உயர் குருதி அழுத்தத்தை குறைத்தல், குருதி கொலஸ்திரோல் அளவை குறைத்தல், விரைவில் குருதி உறைதலை தடுத்தல், குருதியில் வெல்ல அளவு உயர்தலை குறைத்தல் ஆகிய நன்மையான விளைவுகள் ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

3. உணவு மூலம் பரவும் நோயாக்கிகளை கொல்லும்/ வளர்ச்சியை தடுக்கும் இயல்பு பற்றி செய்யப்பட்ட ஆய்வுகளிலும், குறிப்பிடத்தக்க சாதகமான விளைவுகள் பெறப்பட்டுள்ளன.

வெங்காயம், உள்ளி மணம் பிடிக்காதவர்களும் இனி இவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

Saturday, 28 April 2007

உருந்த இடியப்பமும் பிரியாணியும்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சமையல் குறிப்பு :)

தேவையான பொருட்கள்

இடியப்பம்
பெரிய வெங்காயம் 1
செத்தல் மிளகாய் (காய்ந்த சிவப்பு மிளாகாய்) 2
மீகுளிரூட்டிய மரக்கறி கலவை (frozen vegetable mix)
கடுகு
சீரகம்
உப்பு
சமையல் எண்ணேய்

இடியப்பம் தேவையான அளவுக்கு அவித்து எடுத்து கொள்ளவும்
இடியப்பம் நன்கு ஆறியதும் அதை சிறிய பகுதிகளாக உருத்தி/ பிய்த்து கொள்ளவும்
வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்

பெரிய சமையல் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து சூடக்கவும்
அதில் அளவுக்கு எண்ணேய் விட்டு கடுகு சீரகம் போட்டு கடுகு வெடித்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
வெங்காயம் பாதி வதங்கியதும் மரக்கறி கலவையை கொட்டி உப்பு தூவி 5-10 நிமிடம் மென்சூட்டில் மூடி வதக்கவும்
மரக்கறி நங்கு வதங்கி அவிந்து வந்ததும் உருத்தி வைத்த இடியப்பத்தை போட்டு கிளறி இறக்கவும்.



Sunday, 8 April 2007

Hamburger - பிரியர்களுக்கு

Hamburger பிரியர்கள் எல்லோரும் வீட்டிலோ அல்லது உணவகங்களிலோ சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பெரும்பாலான உணவு தரப்படுத்தும் அரச நிறுவனங்களால் அறிவுறுத்தப்படுகிறது. ஏன் இவ்வாறான அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது என நினைக்கிறீர்கள்.




முக்கிய காரணம் Escherichia coli O157: H7 (E. coli O157:H7) எனும் உணவு மூலம் பரவும் நோயாக்கி பக்ரீரியா பிரதானமாக மாட்டிறைச்சியுடன் பரவுவதே காரணமாகும். E. coli O157:H7 சாதாரணமாக மாடு, ஆடு, செம்மறி ஆடு, மான் என்பவற்றின் குடல் பகுதியில் அந்த விலங்குகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் வாழும் ஒரு பக்ரீரியா ஆகும். ஆனால் இது உணவு மூலம் மனிதனின் குடல்/ சமிபாட்டு தொகுதியை அடையும் போது மனிதரில் நோயை ஏற்படுத்துகிறது.



ஒளிப்படம் பெறப்பட்டது: http://anthropik.com/wp-uploads/e-coli.jpg



இந்த பக்ரீரியா ஏற்படுத்தும் நோய்களாக

இதன் தாக்கத்தால் வருடாந்தம் 73 000 பேர் ஐக்கியா அமெரிக்க நாடுகளில் மட்டும் பாதிக்கப்படுகிறனர். அவர்களில் 61 இறப்பை சந்திக்கிறனர்.

1. குருதியுடன் கூடிய வயிற்று போக்கு.

E. coli O157:H7 உணவுடன் சென்றடைந்து 3- 4 நாட்களில் நோய் ஏற்படுகிறது. குருதியுடானான வயிற்று போக்கு, வயிற்று குழப்பம் என்பவற்றை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் குருதி போக்கற்ற வயிற்று போக்கோ அல்லது எந்த அறிகுறிகளுமோ தோன்றாமல் இருக்க கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. சிறிதளவு காய்ச்சல் ஏற்படலாம். நொய் ஏற்பட்டு 5- 10 நாட்களில் பொதுவாக குணமாகிவிடும்.

2. Hemolytic uremic syndrome (HUS)

சில வளர்ந்தவர்கள், மற்றும் 5 வயதுக்கு குறைந்த சிறுவர்கள், முதியவர்கள் ஆகியோரில் குருதி கலங்கள் சிதைவு, சிறு நீரகங்கள் செயலிழப்பு என்பன ஏற்படுகிறது. பொதுவாக வயிற்று போக்கு ஏற்படுபவர்களில் 8% ஆனோர் இப்படியான தீவிர நோய் தாக்கதுக்கு உள்ளாகிறார்கள்.

3. நீண்ட கால தாக்கங்கள்


E. coli O157:H7 நோய் தாக்கம் ஏற்பட்ட ஒரு சிலரில் நீண்ட கால பக்க விளைவுகளாக அவயவங்கள் செயல் இழப்பு (paralysis), சிறு நீரக செயல் இழப்பு (persistent kidney failure), உயர் குருதி அழுத்தம் என்பவை சொல்லப்படுகிறன.




எவ்வாறு E. coli O157:H7 பரவலடைகிறது

இது பொதுவாக மாட்டின் குடல் பகுதியில் காணப்படுவதால்
முறையாக சமைக்கப்படாத hamburger, அரைத்த இறைச்சி என்பவற்றுடன் பரவ முடியும்.

அடுத்து, முளை அரும்புகள் (sprouts), லெற்றியுஸ் (lettuce), கீரை (spinach), சலாமி (salami), பாஸ்ரராக்கம் செய்யப்படாத பால் (unpasteurized milk), பழச் சாறு (juice)
மற்றும் மல கழிவுகள் தொற்றுதலடைந்த குடி நீர்/ நீச்சல் குளம்.

இவற்றுக்கு மேலதிகமாக தோற்று ஏற்பட்ட மனிதர்களில் இருந்து சரியான சுகாதார பழக்கவழக்கம் இன்மையால் இலகுவில் பரவலடைய முடியும்.




எவ்வாறு தொற்று ஏற்படாமல் தவிர்ப்பது


1. வீடுகளில் hamburger அல்லது அரைத்த மாட்டிறைச்சியையோ சமைக்கும் போது இறைச்சி முழுமையக நன்கு சமைக்கப்பட்டிருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் விவசாய துறை (FDA) அரைத்த இறைச்சி, hamburger என்பவற்றை சமைக்கும் போது அவற்றின் வெப்ப நிலை 71.1 பாகை டிகிரி செல்சியஸ் (160 டிகிரி பரனைட்) வெப்ப நிலையை அடையும் வரை நன்கு சமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறது.
மேலும் சமைக்கப்பட்ட இறைச்சி, hamburger என்பவற்றை 40 - 140 பாகை பரனைட் வெப்ப நிலையில் 3- 4 மணி நேரத்துக்கு மேல் வைத்திருக்க கூடாது எனவும் அறிவுறுதுகிறது.

2. உணவகங்களில் சரியாக சமைக்கப்படாத hamburger அல்லது அரைத்த மாட்டிறைச்சி வழங்கப்பட்டால் அவற்றை சரியான முறையில் சமைத்து தருமாறு கேட்பதுடன், புதிதாக பண், சாப்பாடு பாத்திரம் என்பவற்றை கேட்பது முக்கியமானது.

3. சமைத்த உணவுகளை சமைக்காத இறைச்சி, hamburger என்பவற்றுடன் கலந்து வைப்பது, அல்லது இரண்டு வகை உணவுகளையும் ஒரே பாத்திரங்களில் சரியாக சுத்தம் செய்யாத பாத்திரங்களில் வைப்பது, கைகளை சரியாக சுத்தம் செய்யமை என்பன தவிர்க்கப்பட வேண்டும்

4. பால், பழச்சாறு, அப்பிள் சிடர் என்பவை பாஸ்ரராக்கம் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.

5. குளோரின் பரிகரிப்பு அல்லது வேறு வகை தொற்று நீக்கம் செய்யப்பட்ட நீரை மட்டும் அருந்த வேண்டும்.

6. சமைக்காது உண்ணும் மரக்கறி, இலை வகை, பழ வகைகளை ஓடும் நீரில் நன்கு கழுவிய பின் உண்ணுதல்.

7. நீச்சல் குளத்து நீரை அருந்துவதை தவிர்த்தல்.


8. நோய்த்தாக்கத்துக்கு உட்பட்டவர்கள் கைகளை சவர்காரம் கொண்டு சரியாக சுத்தம் செய்தல், நோய் ஏற்பட்டவர்கள் பொதுவான நீச்சல் தடாகங்களில் நீந்துவதை தவிர்த்தல்.



என்ன நண்பர்களே இனி கவனமாக இருப்பீர்களா?