யாழ்க்குடா நாட்டில் இருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய விஸ்ணு கோயில் களில் வல்லிபுரக்கோயில் முக்கியமானது. (ஏனையவை யாழ்ப்பாணம் பெருமாள் கோயில், பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில்) யாழ்குடா நாட்டில் இருக்கும் கோயில்களில் மிகபெரிய இராஜ கோபுரம் உடைய கோயில்.

முதன் முதலாய் கோயிலுக்கு போனது கடல் தீர்த்ததுக்கு.அதுக்கு பிறகு ஒரு நாளும் கடல் தீர்த்ததுக்கோ, அல்லது திருவிழாக்களுக்கோ போனதில்லை. ஈழத்தில் சைக்கிள் தான் பிரதான போக்குவரத்து சாதனம். அது எங்களுக்கும் விதி விலக்கல்ல. அந்த நேரம் தான் இந்திய ஆமி வந்து இருந்த நேரம், சண்டை ஏதும் தோடங்கேல்லை. நானும் சின்ன பொடியன். அக்காவும், அக்கவுடைய சினேகிதிகள், சகோதரர்கள் என ஒரு பட்டாளமே போச்சுது நானும் அவையோட சேர்ந்து போய் வந்தன்.
அதுக்கு பிறகு இந்திய இராணுவந்த்துடனான சண்டை தொடங்கி, இராணுவம் வெளியேறும் மட்டும் கோயிலுக்கு போனதில்லை.
இந்திய இராணுவம் போன பிறகு யாழ்குடா நாடு முழுக்க முழுக்க புலிகளின் கட்டுபாட்டுக்குள் வந்த பின் பல முறை போய் இருக்கிறேன்.
விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் அப்பப்போ நடக்கும் விமான குண்டு வீச்சு, ஹெலி மூலமான தாக்குதல் என்பவற்றை தவிர்த்து எந்த நேரத்திலையும், எங்கையும் போய் வரலாம் எண்டு இருந்தது.
92/ 93 ஆண்டுகளிலை, ரீயுசனிலை படிச்ச பொடியள் கொன்ச பேரச்சேந்து சைக்கிளிலை மார்கழி ஞாயிறு க்கு வெளிக்கிடுவம். காலமை 6.30 /7 மணிக்கு எல்லாருமா செந்து வெளிக்கிட்டமெண்டா கண்டி வீதி (ஏ9) , கொடிகாமம் பருத்திதுறை வீதி வழியே பயணம் இருக்கும் ( பயண பாதையை வரைபடதிலை பச்சை கோட்டாலை போட்டு காட்டி இருக்கிறன். படத்திலை அழுத்தி பெரிசாக்கலாம்).

(வரைபடம்:
www.eelamweb.com இணையம்)
வழிலை சுட்டிபுரம் (சிட்டிபுரம்) அம்மன் கோயிலிலை நிண்டு கும்பிடுவம். அப்பிடியே பொன முள்ளி வெளி வரும், அதாலை தான் உப்பாறு பாயிறது.
காத்து எதிர் காத்தா இருக்கும். சைக்கிள் உழக்கிறது கஸ்டம். வெளிமுடிய கோயில் கோபுரம் தெரியும். எப்பிடியும் ஒரு எழேமுக்கால்/ எட்டு மணிக்கு கோயிலுக்கு போய் செந்திடுவம்.
கொயிலடிக்கு போனா முதல் போறது வல்லிபுர கோயிலுக்கு பின் பக்கமா உள்ள பிள்ளையார் கோயிலுக்கு. அங்க உள்ள கேணிலை குளிச்சு போட்டு பிள்ளையார கும்பிட்டு, அங்க வாற பிள்ளையளையும் கும்பிட்டு கொண்டு வல்லிபுர கோயிலுக்கு போவம்.
அங்க போய் ஆழுக்கொரு அரிச்சனை ரிக்கற் எடுத்து அரிச்சனைனை எவ்வளவு கெதியா முடிக்கேலுமோ முடிச்சு கொண்டு கடற்கரைக்கு போறதிலை தான் எங்கட தவனம் இருக்கும். அரிச்சனை முடிச்சு, கச்சான் வாங்கி கொண்டு, கடற்கரைக்கு போவம்.

கடற்கரை கோயில்லை இருந்து 3 கிமீ இருக்கும். கோயில்லை இருந்து சைக்கிளிலை போகேலாது,நடை தான். நடக்கிறதிலையும் ஒரு சுகமிருக்கும். கடற்கரையை அடையிறதுக்கிடையிலை எப்பிடியும் இரெண்டு மூண்டு மண் புட்டியளை ஏறி கடக்க வேண்டி இருக்கும். ஒவ்வொண்டும் சரியான உயரமானவை (பனையளவு உயரம் வருமோ??)
யார் அந்த புட்டியளை முதல் ஏறிகடகிறது எண்டதிலை போட்டி வரும். எனக்கும் ஓட்டத்துக்கும் வெகுதூரம் எண்டதாலை நான் தான் கடைசியாளா இருப்பன். கடந்தா வாறது வங்க க்டல்.
கொண்டு போன கச்சானை எடுத்து கொறிச்சு போட்டு, கடறரையிலை ஓடி திரியிற நண்டை திரத்துறது, பிடிக்க போறது. ஆனா ஒரு நண்டும் ஆப்பிடாது.
பொற ஆக்கள் ஒருதருக்கும் நீச்சல் தெரியாது, ஆருக்குமேதும் நடந்தா கூப்பிட்ட குரலுக்கு வாறதுக்கு ஆக்களும் இல்லை. குடிமனையும் இல்லை. எல்லாரும் அரையளவு தழுமட்டும் தான் இறங்கி அடிக்கிற அலையிலை குளியல் போடுவம். ஒருதரும் குளிக்க எண்டு உடுப்பெல்லம் கொண்டு போறதிலை. போட்டு கோண்டு போன உடுப்புகளோட அப்பிடியே தான் குளியல். திரும்பி கோயிலுக்கு 3கிமீ நடக்கிறதுக்கிடையிலை எல்லா உடுப்பும் கடல் காத்துக்கு கய்ந்திடும், பிரச்சனை இல்லை.

கொயிலடிக்கு திரும்ப 1/2 மணி ஆகும். அந்த நேரங்களிலை எப்பிடியும் மடங்களிலை பொங்கிற ஆக்கள் அன்னதானம் குடுக்கிற ஆக்கள் எண்டு கன பேர் இருப்பினம். அதிலை சாப்பிட்டு சைக்கிளை எடுத்து பிடிச்சா அடுத்து போய் நிக்கிறது வெளிச்ச வீட்டா அல்லது பருத்தி துறை துறைமுகமா இருக்கும். வெளிச்ச வீட்டிலை ஒரு முறை ஏறி பாத்திருகிறம்.ஏறும் போது எந்த சிக்கலும் இருக்காது , ஆனா இறங்கும் போது தான் பயமா இருக்கும்.
அப்ப சில வீடுகளிலை எள்ளுபாகு/ புண்ணாகோ? செய்து சுட்டச்சுட செய்து வாசலிலை வச்சிருப்பினம். எனக்கு நல்ல விருப்பமான ஒரு சிற்றுண்டி. அதை வேண்டி சாப்பிட்டு கொண்டு பருத்திதுறை யாழ்ப்பாணம் வீதியால வீட்ட திரும்புவம்.வழிலை 1 ம் கட்டை எண்டு நினைக்கிறன் ஒரு பூங்கா இருந்தது அதோட ஒரு சின்ன வாசிக சாலையும் இருந்தது. அந்த பூங்கவிலை போய் கொன்ச நேரம் இருப்பம், சிலர் ஏதும் புத்தகம் வாசிப்பாங்கள். அங்கயிருந்து வெளிக்கிட எப்பிடியும் 4.30 / 5 மணியாவது ஆகும். அதுக்கு பிறகு தான் வீட்டை வெளிக்கிடுவம் பயணம் பருத்திதுறை-சாவச்சேரி வீதியாலை கனகம் புளியடி புத்தூர் சந்தி போய் வீட்ட போக இரவு 7 மணியாகும்.
மிக மிக இனிமையான நாட்கள். பல முறை இவ்வாறு போய் இருக்கிறம் எத்தனை முறை போனாலும் எங்கடை பயண பாதையும், செய்யிற வேலையளும் ஒண்டு தான். எத்தனை முறை சென்றாலும், சலிக்காத பயணங்கள் அவை.
எனறைக்கு யாழ்குடா நாடு இலங்கை அரச கட்டுபாட்டுக்குள் வந்ததோ அன்றைக்கு துலைந்தது எங்கட சந்தோசங்களும், சுததிரமான பயணங்களும்.