Showing posts with label Canada. Show all posts
Showing posts with label Canada. Show all posts

Wednesday, 12 August 2009

Folklorama 2009

கனடா நாட்டின் மனிட்டோபா மாநில தலை நகரான வின்னிபெக் நகரில் 1970 ஆம் ஆண்டில் ஆரம்பித்து, இந்த வருடத்துடன் 40 ஆவது வருடத்தை பூர்த்டிசெய்யும் ஒரு பல் கலாச்சார அரங்காடல் நிகழ்வு தான் Folklorama. 1970 ஆம் ஆண்டில் 21 வகையான கலாச்சார குழுமங்களின் அரங்காடல் நிகழ்வுகளை கொண்டு ஒரு வாரம் மட்டுமே நடைபெற்ற இந்த நிகழ்வு, இப்போது 40 இற்கு மேற்பட்ட கலாச்சார/ இன குழும மக்களது அரங்காடல் நிகழ்வுகளை கொண்டு இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் நிகழ்வாக மாறியுள்ளது.

இந்த பல் கலாச்சார அரங்காடல் கொண்டாட்டத்தை ஒழுங்கு செய்யும் அமைப்பு தனது குறிக்கோள் பற்றி இவ்வாறு கூறுகிறது.

Mission

Celebrating diversity and promoting cultural understanding.

Vision

Folklorama promotes the ethno-cultural diversity of Manitoba through entertainment, public celebrations of culture and education. Folklorama provides the opportunity for ethno-cultural communities to promote and celebrate their intangible culture. We will understand and respond to the expectations of our members, stakeholders and the public and will be leaders in the festival community, the special events industry and the tourism industry of Manitoba. We will respect and recognize the contributions of our staff and volunteers and will create an environment that inspires fun, innovation and a sense of belonging.

Values

Our basic foundation values, the values upon which all we do is based:

  • Respect for people
  • Integrity
  • Appreciation for diversity
  • Respect for culture

இங்கு கிட்டதட்ட 300 வரையான தமிழ் மக்களே இருந்தாலும், பத்திரிகையாளர்களாலும், பார்வையாளர்களாலும் சிறந்ததொரு அரங்காடல் நிகழ்வாக தமிழ் அரங்கம் விததுரைக்கப்பட்டு வந்துள்ளதை அறிய முடிந்தது. கடந்த 11 வருடங்களாக எந்த இடையூறும் இல்லாது நடைபெற்று வந்த தமிழ் அரங்கம் இந்த வருடம் நாட்டில் ஏற்பட்ட அவல நிகழ்வுகளால் இடை நிறுத்தப்பட்ட்டுவீட்டது. அடுத்த வருடம் மீண்டும் மனிரொபா தமிழ் கலாச்சார கழகம் தமிழ் அரங்கத்தை இக்கொண்டாட்டத்தில் இணைத்துக் கொள்ளும் என நம்புகிறேன். கடந்த வருடம் தமிழ் அரங்கத்தை பற்றி இட்ட பதிவு இது.


இக்கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டுள்ள கலாச்சார அரங்கங்கள் பட்டியலிட்டால் இந்த பதிவு மிக நீளமாகும்.

உதாரணமாக சில

1. Africa Pavilion

2. Belgian Pavilion

3. Caribbean Pavilion

மிகுதியை இங்கே காணலாம்



Saturday, 4 July 2009

இறம்புட்டான்

Tuesday, 16 June 2009

அரும்பு

Thursday, 11 June 2009

மீள்வருகை

Wednesday, 10 June 2009

அந்திவானம்







































English Bay/ Sunset beach
, Vancouver, BC, Canada.

Wednesday, 24 September 2008

ஊதாப்பூ

அசினிபோனி பூங்கா, வின்னிப்பெக், மனிரோபா.

பூச்சியும் பூவும்

அசினிபோனி பூங்கா, வின்னிபெக் மனிரோபா,

Monday, 4 August 2008

Folklorama, Tamil Pavilion 2008

கனடாவில் உள்ள மனிரோபா மனிலத்தில் வருடாந்தம் Folklorama எனும் ஒரு அரங்காடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து இப்போது 39 ஆண்டுகள் ஆகிவிட்டன. Winnipeg Folkloramaகொண்டாட்டமே உலகில் நடைபெறும் இந்த வகையை சேர்ந்ததவற்றில் மிகப்பெரியது என யுனெஸ்கோ அமைப்பின் ஆலோசகராக இருக்கும் International Council of Organiztion for folklore festival அமைப்பு கூறியுள்ளது. இந்த நிகழ்வை வின்னிபெக் பாரம்பரிய கலை கழகம் (Winnipeg Folk Arts Council நடாத்துகிறது. ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை வருடாந்தம் நடைபெறும் கலாச்சார நிகழ்வுகளில் மொத்தமாக 44 வெவ்வேறு வகை இனக்குழுமத்தை சேர்ந்த மக்கள் தமக்கென அமைக்கப்பட்ட தனியான அரங்கத்தில் நடத்துவார்கள். அதிக எண்ணிக்கையான இனகுழுமங்களின் அரங்காடல் நிகழ்வுகள் இருப்பதால் முதல் வாரத்தில் 22 இனக்குழுமங்களின் அரங்காடல் நிகழ்வுகளும், மிகுதி 22 குழுமங்களின் அரங்காடல் நிகழ்வுகள் இரண்டாவது வாரத்திலும் நடைபெறுகிறது.

Tamil Pavilion 2008
Folklorama,
Winnipeg, Manitoba, Canada
August 3-9



தமிழ் அரங்கம் 2008


இந்த பாரம்பரிய அரங்காடல் நிகழ்வுகளில் தமிழ் கலாச்சார நிகழ்வுகளை உள்ளடக்கிய அரங்காடல் நிகழ்வு முதல் வாரத்தில் அதாவது ஆகஸ்ட் 3- 9 ஆம் திகதி வரை வருடாந்தம் நடைபெறுவது வழக்கமாகும். தமிழ் அரங்காடல் நிகழ்வு இந்த வருடத்துடன் தனது 11 ஆவது வருடத்தை நிறைவு செய்கிறது.

தமிழ் அரங்கம் பிரதானமாக 2 பகுதிகளை கொண்டது.

1. தமிழ் மக்களின் கலாச்சார பின்னணியை எடுத்துக்கூறும் கண்காட்சி

இப்பகுதியில் தமிழ் மொழியின் தொன்மை, மக்களின் வாழ்கை அமைப்பு, வரலாறு இசை போன்ற விடயங்களை பற்றிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்

2. அரங்க நிகழ்வுகள்

பரத நாட்டியம், கிராமிய நடனம், தபேலா, மிருந்தங்கம், பாடல் போன்ற அரங்க நிகழ்வுகளை வின்னிபெக் தமிழ் இளையவர்கள் ஆர்வத்துடன் வழங்குவார்கள்

மேலதிகமாக
தமிழ் மக்களின் உணவுகள், சிற்றூண்டி வகை பொன்றவைக்கான சிறிய விற்பனை அங்காடிகளும் இருக்கும்

முதல் நாழ் நிகழ்வின் காணொளி காட்சிகள் சில
















Sunday, 27 July 2008

Prairie dog

ஏன் அணில், எலி போன்றவற்றின் வகுப்பை சேர்ந்த அணிலுக்கு மிக அண்மைய இனமான இந்த விலங்குகளுக்கு பிரயரி நாய் என பெயர் வைத்தார்கள் தெரியவில்லை??? இவை கத்துவது நாயின் குரல் போல இருப்பதால் பிரயரி நாய் என பெயர் வைத்தார்களாம்.
விக்கிபீடிய சொல்வது போல் இவை முத்தமிடும் காட்சியை காண முடிந்தாலும் புகைப்படக்கருவியை தயாராய் வைத்திருக்காமையால் அதை புகைப்படமாக்க முடியவுல்லை :(( .

கதிர்காமத்தில் குரங்குகள் பழங்களுக்கும் உணவுக்கும் அங்கு போபவர்களை துரத்துவதும், கொடுத்தால் வெகு அருகில் வந்து வாங்கி உண்பது போலவே பிரயரி நாய் எனப்படும் அணில்களும் விலங்கு காட்சியகத்துக்கு செல்பவர்கள் உணவு கொடுத்து பழக்கியதால் போபவர்களுடன் வெகு நட்பு பாராட்டி கையில் உணவு வாங்கி உண்பதையும் புகைப்படக்கருவிக்கு அழகாக "போஸ்" கொடுப்பதையும் காணலாம்.

Assiniboine Park Zoo, Winnipeg, Manitoba
27/07/08









Tuesday, 22 July 2008

பட விளையாட்டு

12/07/08
Kenora, ON, Canada

இது சும்மா விளையாடி பார்த்தது.









Posted by Picasa








சுட்ட கத்தரிக்காய்ச் சம்பல்

சுட்ட கத்தரிக்காய்ச்சம்பல்

தேவையான பொருட்கள்

ஒன்று/ இரண்டு பேருக்கு

4 - மேசைக்கரண்டி தயிர்

1 - பெரிய கத்தரிக்காய்







* சுட்ட சம்பலின் நிறம் வெளிர்ப்பாக இருக்க வேண்டும் என விரும்பினால் வேள்ளை கத்தரிக்காய் தான் நன்றாக இருக்கும்.

* வெள்ளை கிடைக்கவில்லை என்றால் ஊதா கத்தரிக்காய் பாவிக்கலாம். நீண்ட கத்தரிக்காயை தான் பெரிய கத்தரிக்காய் என சொல்லியுள்ளேன்.





நீண்ட கத்தரிக்காய் கிடைக்கவில்லையென்றால் சிறிய வெள்ளை/ ஊதா கத்தரிக்காயும் பாவிக்கலாம். நான் சிறிய கத்தரிக்காயை தான் பாவித்து செய்தேன்.

5-6 - சிறிய வெங்காயம்
2 - பச்சை மிளகாய்
1/2- தே. கரண்டி மிளகு
சுவைக்கு- உப்பு
அலுமினியத் தாள்


செய்முறை


1. போறணை/ Oven ஐ 230 பாகை செல்சியல்லில் சூடாக்கவும்

2. கத்தரிக்காய் மூழை நீக்கி அலுமினியத தாளினால் முழுமையாக மூடி சுற்றவும். சுற்றியபின் முள்ளுகரண்டி (Fork) மூலம் இரண்டு மூன்று இடங்களில் குற்றி தூளை செய்யவும் (இது நீராவி வெளியேற உதவும்)





3. கத்தரிக்காயை சூடான Oven இல் 25- 30 நிமிடம் சுடவும்



4. கத்தரிக்காய் சுடும் நேரத்தில் வெங்காயம், பச்சை மிளகாயை மிகச்சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்



5. 25-30 நிமிடங்களின் பின் கத்தரிக்காயை வெளியே எடுத்து சிறிது குளிர்ந்ததும் அலுமினியம் தாளை அகற்றவும்.




( கீழே உள்ள படத்தில் உள்ளது போல் தோல் சுருங்கி வரும். நான் வெள்ளை நிற பெரிய கத்தரிக்காய் இங்கு கிடைக்காதாதால் ஊதா நிற சிறிய கத்தரிக்காயை பாவித்தேன். இப்படி கபில நிறமாக வருவதை விரும்பாதவர்கள் வெள்ளை கத்தரிக்காயை பாவிக்கலாம்.)






6. மேலும் கையால் தோலை உரிக்கக்கூடிய சூடு வரும் வரை குளிர விட்டு தோலை உரித்து கொள்ளவும்

7. சிறிய கத்தரிக்காய் என்றால் 4 ஆக, பெரிது என்றால் 8 ஆக பிளந்து சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.

8. அரிந்த கத்தரிக்காயுடன், அரிந்து வைத்த வெங்காயம், மிளகாய், உப்பு, மிளகுத்தூள் என்பனவற்றை சேர்த்து கலக்கவும்





9 இறுதியில் தயிரை சேர்த்து நன்கு கலந்தால் சுவையான சுட்ட கத்தரிக்காய்ச் சம்பல் தயார்

இதனை சோற்றுடன் உண்ணல்லாம்.






குறிப்பு.

1. ஊரில் தயிரிற்கு பதிலாக இதற்கு தேங்காய்ப்பால் (முதற்பால்) சேர்த்து செய்வார்கள்
2. தயிரிற்குபதிலாக sour cream உம் பாவிக்க முடியும்



நீங்களும் தயிரிற்கு பதிலாக தேங்காய்ப்பால்/ sour cream பாவித்து செய்து பார்த்து எது சுவையானதோ அதை தொடருங்கள்.


3. கத்தரிகாய் சுடுவதற்கு தேவையான நேரம், கத்தரிக்காயின் பருமன், Oven இன் வகை என்பவற்றுக்கு ஏற்ப மாறுபடும். 20 நிமிடத்தின் பின் வெளியே எடுத்து திறந்து பார்த்து படத்தில் காட்டியுள்ளது போல் தோல் சுருங்கி வந்திருந்தால் வெளியே எடுக்கலாம். இல்லாது விடின் மீண்டும் மூடி 5- 10 நிமிடம் சுடவும்.






Sunday, 20 July 2008

அந்தி வானம்

Lakes of Woods, Kenora, ON, Canada
கெனொர, ஒன்ராறியோ, கனடாவில் உள்ள ஏரிக்கரையோரத்து அந்திப்பொழுது. படத்தை மெருகூட்டினேனா? அசிங்கப்படுத்தினேனா? என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.















Monday, 14 July 2008

PIT போட்டிக்கான காலம் முடிவடைந்துவிட்டாலும் இரவு நேர புகைப்படங்கள் சில














கனடா நாட்டு நேரம் இன்னும் இருக்கு. ஆனால் போட்டி முடிவு திகதி இந்திய நேரம் :((

Thursday, 10 July 2008

வாத்து









Wednesday, 9 July 2008

கறி வேம்பும், செவ்வரத்தையும்

எங்கட வீட்டிலை நட்டிருக்கிற செவ்வரத்தை முதல் பூ பூத்திருக்கு.








பக்கத்திலை ஒரு கறிவேப்பிலை செடியும் நட்டிருக்கு.

Monday, 30 June 2008

Our lady of Lourdes church, Cook's creek

Our lady of Lourdes church, Cook's creek, Manitoba, Canada
22/06/08

மனிரோபா மானிலத்தில் இருக்கும் கூக்ஸ் கிறீக் எனும் இடத்தில் உக்கிரேனிய சமூகத்தவர்களால் அமைக்கப்பட்ட தேவாலயம். இது பொதுவாக யாத்திரை தலமாகவும் விளங்கிவருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் பொதுவாக பல இடத்திலிருந்தும் இங்கு யாத்திரையாக வந்து மக்கள் கூடுவார்கள். மனிரோபா மானிலத்தின் தலைநகரான வின்னிபெக்கில் கூட இப்படி பெரிய தேவாலயங்களை காண முடியாது.













Sunday, 29 June 2008

வின்னிபெக் முருகன் வருடாந்த உற்சவம்

Winnipeg Murugan annual festival 20/06/08


கனடாவின் ஏனைய நகரங்களான ரொறான்ரோ, மொன்றியால், எட்மன்ரன், வன்கூவர் போன்ற நகரங்கள் போன்று அல்லாது வின்னிபெக் நகரில் தமிழ் மக்களின் எண்ணிக்கை மிக குறைவு. இதனால் தென்னிந்திய பாணியிலான கோயில்கள் எதுவும் இல்லை. அதிக அளவில் வட இந்திய மக்கள் இருப்பதால் இங்கு இருக்கும் கோயில்கள் வட இந்திய முறையில் அமைந்திருப்பதுடன், பூசைகளும் வட இந்திய முறையிலேயே நடப்பது வழக்கம். இங்கிருக்கும் தமிழர்களால் வட இந்திய முறையில் அமைந்த கோயிலில் முருகன் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டு, அவ்வாறு பிரதிஸ்டை செய்ததன் மூன்றாம் ஆண்டு நிறைவு நிகழ்விற்கு போகும் சந்தர்பம் கிடைத்தது.



நீண்ட நாட்களுக்கு பின்னர் தவில் நாதஸ்வர இசையை நேரடியாக ரசிக்க முடிந்தது. அத்துடன் ஊரில் சுவாமி வீதி வலம் வருவதுபோல இங்கும் செய்திருந்தார்கள்.























கோயிலை பற்றியும் குழறுபடிகள் பற்றியும் சில குறிப்புக்கள்.

சில நல்ல விடயங்கள்

1. கோயிலில் ஒவ்வொரு வெள்ளி கிழமை மாலையும் தமிழர்களது பூசை நடைபெறுமாறும் ஒழுங்கு செய்துள்ளார்கள்.

2. கோயில் பூசகர் வட இந்திய பூசகராக இருப்பதால் பூசையில் பெரும்பாலான நேரம் தேவாரம், திருவாசகம், திருப்புகள், மற்றும் தமிழ் பஜனை பாடல்களாகவே இருக்கும். இதை ரோரன்ரோவிலோ ஏனைய தமிழ் மக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் உரிய கோயில்களிலோ எதிர்பார்க்க முடியாது. ஆகம வழி பூசை என்று முழுவதும் சமஸ்கிருததிலேயே முடிந்து விடும். இதனாக் இங்குள்ள சிறுவர்கள் தமிழ் பேசுகிறார்களோ இல்லையோ தேவாரம் பாட தெரிந்து வைத்திருக்கிறார்கள். பாடல்களுக்கு தபேலா, மிருதங்கம் போன்ற இசை கருவிகளை இசைக்க தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஊரில் பாடசாலைகளில் தேவாரம் பாடி முடிய சொல்வது போல, இங்கும் பூசை முடிய இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க, தென் நாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பவை சொல்லி பூசையை முடிக்கிறார்கள். இதை எந்த ஒரு தமிழர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் தென் இந்திய கட்டிட அமைப்பில் அமைந்த கோயில்களில் எதிர் பார்க்க முடியாது.

3. விசேட பூசை தினங்களில் இலவச உணவு நிச்சயம்.

4. கோயில் மண்டபத்தில் தமிழ் வகுப்புக்கள் நடை பெறுவது வழக்கம்.

குழறுபடிகள்

தமிழன் என்றோர் இனமுண்டு, அவனுக்கு தனியே ஒரு குணம் உண்டு. அது ஒருவரையும் முன்னுக்கு வர விடமையும், எதாவது காரியங்கள் நல்லபடி நடந்தால் அதை குழப்புவது எப்படி என்று சந்தர்ப்பம் பார்த்து காத்திருப்பது.


1. முன்னர் வட அமெரிக்க தமிழ் சங்கங்களையும், கோயில் நிர்வாகத்தையும் கைப்பற்றுவது எப்படி என யாரோ வலைப்பதிவில் எழுதியிருந்தார்கள். வின்னிபெக்கில் இருப்பதோ 30-50 தமிழ் குடும்பங்கள். அவர்களுக்குள் கோயில் நிர்வாகத்தை கூட அல்ல வட இந்திய மக்களுடைய கொயிலில் தமிழ் மக்கள் சிறப்பாக கொண்டாடும் தினங்களில் பூசைகளை ஒழுங்கு செய்யும் குழு நிர்வாகத்தை கைப்பற்றுவதில் போட்டி சண்டை, கைகலப்பு என போய் சிலர் தமிழர்களால் ஒழுங்கு செய்யப்படும் பூசைகளுக்கு வருவதில்லை.

2. முருகன் சிலையை வைப்பதற்கு கோயில் நிர்வாகதில் பேசி அவர்களை உடன்பட வைத்த பிற்பாடு யார் முருகன் சிலையை இந்தியாவில் இருந்து செய்து வரவளைப்பது என்பதில் நீயா நானா போட்டி. முதலில் செய்யப்பட்ட முருகன் சிலை போட்டியால் களஞ்சிய அறையில் இருக்க புதிதாக சிலை செய்வித்து வைத்திருக்கிறார்கள்.

3. கோயில் வருடாந்த உற்சவத்தில் ஊரில் சாமி காவும் போது சில உள்ளுர் மைனர் மார் முன் வரிசையில் இடம் பிடிக்க அலைவது போலவும், சாமில் இருப்பில் இருந்து புறப்படும் போதும், சுவாமி இருப்புக்கு திரும்பும் போதும் தங்களே காவ வேண்டும் என்று அலைவது போலவும் இங்கும் சில பேர்.

4. பூசகர் வட இந்தியராக இருப்பதால் வட இந்தியர்கள் சுவாமி விக்கிரகங்களை தொட்டு வணங்கவும், அவர்களே பாலால், அல்லது ஏனைய அபிசேகங்களை செய்யவும் அனுமதிப்பது போல தமிழர்களின் பூசை நேரமும் பூசகர் செய்ய முற்பட்ட போது இங்குள்ள சிலர் எமதூரில் இப்படி அனைவரும் தொட்டு வணங்கக அனுமதிப்பதில்லை. இதன் அடி நாதமே சாதி என்பதில் இருந்து தான் வருகிறது. எனவே தமிழர்களின் பூசை நேரம் அவ்வாறு அனுமதிக்க கூடாது என சண்டை பிடிததாகவும் அறிய முடிந்தது. கடவுள் வழி கொடுத்தாலும் பூசாரி வழி கொடுக்க மாடார் என பழ மொழி சொல்வார்கள். ஆனால் இங்கு பூசைக்கு இருக்கும் பிராமணர் அனைவரையும் அனுமதிக்க தயார். ஆனால் எம்மவர்கள் அதுக்கு குறுக்கே தலைகிழாக நிற்கிறார்கள்.

5. முருகன் என அழகான தமிழ் பெயர் இருக்கிறது. வலைதளத்தையும் வின்னிபெக் முருகன் என வைத்திருக்கிறார்கள். ஆனால் வலைதளத்தில்/ கோயில் விழா நிகழ்ச்சி நிரல்களில் முருகனை வட மொழி பெயரில் கார்த்திக் என எழுதுவதில் ஒரு பெருமை :(.
ஆரிடம் சொல்லியழ.