Showing posts with label பாடல்கள். Show all posts
Showing posts with label பாடல்கள். Show all posts

Saturday, 26 May 2007

படம், பாட்டு, கண்ணொளி.... ஒரு புதிர்

கலவை

வழமை போல சில படங்களின் இயல்பை சிதைத்து வைத்துள்ளேன்.














பாடல்கள்: இந்த பாடல்கள் அனைத்திலும் உள்ள ஒற்றுமை பரத் அனைத்து படங்களிலும் கதாநாயகன் என்பது.
புதிர் கேள்வி என்னவென்றால்

இணைத்துள்ள பாடல்களில் இரண்டின் காட்சியமைப்பில் ஒரு ஒற்றுமை இருக்கும். அவை எந்த பாடல்கள்? என்ன ஒற்றுமை ?



Powered by eSnips.com





கண்ணொளி:
இங்குள்ள இடைநிலைப்பாடசாலையில் தரம் 6, 7 , 8 ஐ சேர்ந்த மாணவர்களின் இசை நிகழ்வில், தரம் 8 ஐ சேர்ந்த மாணவர்கள் வழங்கிய ஒரு இசைகோப்பு.




Movie



மீண்டும் ஒரு சிறிய இடைவெளியின் பின் சந்திப்போம்.................

Wednesday, 16 May 2007

"பச்சை நிறமே பச்சை நிறமே"

அலைபாயுதே படம் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும், அப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே இதமானவை. அதிலும் பச்சை நிறமே பச்சை நிறமே பாடல், அதன் காட்சியமைப்பு, பாடல் வரிகள் அனைத்தும் மனதுக்கு பிடித்தவையாக இருக்கிறன. வெண்பனி போர்த்திருந்த சுற்று சூழல் , மீண்டும் பச்சை, மஞ்சள், சிவப்பு என பல வண்ணக் கோலங் காட்டும் இந்த வசந்த காலத்தில் இப்பாடல்.......

Wednesday, 2 May 2007

ஆக்காண்டி ஆக்காண்டி......

"ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய்" இப்படி தொடங்கும் ஒரு பாடலின் சில வரிகள் மட்டும் முதல் முதலாக எமது "பள்ளிகூடத்தில்" நடித்த நாடகத்தில் பயன் படுத்தும் போது தற்செயலாக தெரிய வந்தது. அப்போதும் முழுமையான பாடலை கேட்கவோ அல்லது அதன் வரிகளை அறியும் ஆர்வமோ அதிகம் இருக்கவில்லை. அப்போதைய நாட்டு நடப்புடன் சம்பந்தப்பட்டதாக அதாவது அப்போது நடந்த பண்டாரவளை பிந்துனுவேவா சிறை கைதிகளின் படுகொலையை சுட்டுவதாக அமைந்த குறியீட்டு நாடகத்தில் திரை விலகும் போது இந்த பாடலை பயன்படுத்தியிருந்தோம்.


















அதன் பிற்பாடு ஒரு சந்தர்பத்தில் இப்பாடலின் முதல் வரிகள் ஞாபகம் வந்து நான் உச்சரித்த போது என்னுடன் இருந்த நண்பன் அப்பாடலின் மேலும் சில வரிகளை பாடி காட்டினான்
அந்த வரிகளில்


" நான் அழுத கண்ணீரும் என் குஞ்சழுத கண்ணீரும் வாய்க்கால் வழியோடி வழிபோக்கர் கால் நனைக்க"
எனும் வசனமும் சேர்ந்து வந்தது.

அண்மையில் புலரும் வேளை இறுவட்டில் இப்பாடலை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்த போது அதில் நான் மேலே சொன்ன வரிகளை காணவில்லை.







http://www.esnips.com/displayimage.php?pid=33979630

பாடியவர்கள்: ஞான ஆனந்தன் (சங்கீத் வர்மன், பிரகீத் வர்மன், டிலீப்குமார்)



சரி கூகுல் தேடலில் தட்டுபடுகிறதா என தேடிய போது

இப்பாடலை இயற்றியவர் சண்முகம் சிவலிங்கம் எனும் ஈழத்து கவிஞர் என்றும் அவர் மட்டகளப்பை சேர்ந்தவர் எனும் தகவலோடு



சசி??


சந்திரவதனா

இரா முருகன்

ஆகியோருடைய பதிவுகளில் பாடலில் வரிவடிவத்தை பெற முடிந்தது. ஆனால் அந்த மூன்று வரிவடிவத்திலும் நான் கேட்ட வசனம் இல்லை.

சண்முகம் சிவலிங்கம் அவர்கள் எந்த வருடத்தில், எச்சூழ்நிலையில் இப்பாடலை இயற்றினார் என தெரியவில்லை. ஆனால் ஈழத்தின் போர்க்கால வாழ்நிலையை இப்பாடலுன் பொருத்தி பார்க்க முடியும்
.




அப்பால் தமிழில் ஒரு கட்டுரையில் இப்பாடல் மட்டகளப்பில் வழங்கும் நாட்டார் பாடல் என்றும் அதை அடியொற்றியே சண்முகம் சிவலிங்கம் அவர்கள் இக்கவிதையை எழுதியதாகவும் ஒரு குறிப்பு கிடைத்தது.

சரி என இணையத்தில் சந்தித்த நண்பர்களிடம் விசாரித்த போது, ஒரு நண்பர் தமிழக கவிஞார் அறிவுமதி எழுதி, சின்னபொண்ணு என்பவர் பாடியதாக அன்னை தமிழ் இறுவட்டில் இடம்பெற்ற ஆக்காண்டி என தொடங்கும் வேறொரு வடிவத்தை எனக்கு தந்திருந்தார். அப்பாடலை கீழே இணைத்துள்ளேன்.




http://www.esnips.com/displayimage.php?pid=33979630





இவை இரண்டையும் விட தமிழ்.நெட் இணையத்தின் முன்றாவது ஒரு வடிவமும் கிடைத்தது. அதன் வரிவடிவை கீழே இணைத்துள்ளேன்.


ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைச்சாய்?

ஆறு போன இடமெல்லாம்
புற் படுக்கை முட்டை வைச்சேன்.

முட்டையெல்லாம் குஞ்சானா,
முழு வுலகும் குருவிச்சத்தம்.

குருவிச்சத்தம் கேக்கத்தானே
குழி பறிச்சு முட்டை வைச்சேன்.
சத்தம் மட்டும் போட்டு விட்டா,
உன் பிறப்பு முற்றா குமா?

சத்தம் போடத் தெரியா விட்டால்
பின்னே என்ன கருங் குருகு?

கூட்டை வேடன் கலைக்குறானா?
குருவி பிடிச்சுத் தின்னுறானா?

ஐயோ ஐயோ என்ன செய்வேன்!!
ஆகாதய்யா இவ் வேடர் கூட்டம்!!
வாயைக் கொஞ்சம் பொத்திக்கொண்டு
பாழ் வயிற்றைக் குருவி பார்க்கலாமே?

ஓஹோ! நீரும் (கொல்) வேடர்தாமோ?
எம் அலறல் கேட்டும் தின்போர்தாமோ?

ஐயோ குருவி! (முழுப்)பொய்யோ சொல்வாய்?
வையம் காணும் கவிமெய்யை அறிவாய்.

இல்லை இல்லை! கொல் வேடர் நீரே.
என் குஞ்சு இரண்டு கொன்றோன் நீயே.

கொஞ்ச வந்தேன்; கொல்வோன் என்றாய்
(கொல்)நஞ்சும் (நல்)நெஞ்சும் கிஞ்சித்து மறியாய்.

நீயே வேடன்! நின் நினைவோ கொல்லல்.
நாயே போடா! குறுநரி நினைவோனே!

ஓஹோ அறிவேன் உன் குலத்தழிவு
ஓரோர் நினைவும் உலகொவ்வா நிலையுலவு.

போ போ மூடா! உயிர்கொல் வேடா!
குருகும் புள்ளுமே உலகினி லுயர்வு
புவியே சுழல்வது புட்கட்குத் தாமே!
துயர்பட்டாலும் குருகே உயர்ந்தோன்.

முறையோ குருவி முறைதலை மறத்தல்
குருகும் அருகும் அர்த்தமில் கருத்தில்
பெருகிட வேண்டில் (வாழ்) வழிதனிற் கூர்க்க.
வரும் வளமும் பலமும் குருவிகள் வசமே.
கவி உட்பொருள்தனை உணர்க;
வெறும் கறைப்புலம்பலை ஒழிக்க.
வருவேன்குருவி, வணக்கமும் வாழ்த்தும்.

ஆனால் இப்போதும் விடை கிடைக்காத கேள்வி என்னிடம் இருப்பது நான் கேட்ட வரிவடிவத்துடனு இப்படியான பாடல் ஒன்று உண்டா என்பதே?

Saturday, 21 April 2007

தாவணியில் மாட்டிய Boney-M

இந்த இரண்டு கண்ணொளிகளையும் பார்த்து ரசியுங்கள். முதல் கண்ணொளி போல இரண்டாவது இல்லை.









கண்ணொளி உபயம்: பள்ளி தோழன்.

தலைப்பு உபயம்: கானாபிரபா

Monday, 9 April 2007

இரு வெவ்வேறு இசைகளில் சிறு நண்டு மணல்..

மஹாகவியின் சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் எனும் பாடல் ஒலி வடிவம், மற்றும் வரி வடிவங்களை இணைத்திருந்தேன். இன்று அந்த பாடல் இடம் பெற்ற புலரும் வேளையில் இசை தட்டில் உள்ள அனைத்து பாடல்களையும் கேட்ட போது அந்த பாடலிற்கு இன்னுமொரு இசைவடிவம் இருப்பதை அறிந்து கொண்டேன். இப்பாடல் மண்சுமந்த மேனியரில் பயன் படுத்தப்பட்டதாகவும், அதற்கு இசைவாணர் கண்ணன் இசை அமைத்திருக்க வேண்டும் எனவும் வசந்தன், கானாபிரபா, மலை நாடான் ஆகியோரின் பின்னூட்டங்களில் இருந்து அறிய முடிந்தாலும், இந்த இசைத்தட்டில் உள்ள இரு பாடல்களுக்கும் இசை அமைத்தவர் யார் என்பது தெளிவாக தெரியவில்லை.

முதல் பாடல் ஆண்,பெண் இருவரால் பாடப்பட்டது. (ஏற்கனவே முன்னைய பதிவில் இணைத்திருந்தேன்.

பாடியவர்கள்: வீ.திவ்வியராஜன், சங்கீதா திவ்வியராஜன்

Track 03.mp3




இரண்டாவது பாடல் ஆண்குரல் மட்டும் கொண்டது.


பாடியவர் : மோகன் திருச்செல்வம்


விஜெசந்திரன் சிறுந...

Sunday, 1 April 2007

நான் பாடும் மௌனராகம்

பாடல் கேட்பதில் ஒரு தனி சுகம். சிறு வயதிலிருந்தே சோகப்பாடல்கள் தான் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களாக இருந்து வருகிறது. அதற்காக மற்றைய பாடல்கள் பிடிக்காதென்பதல்ல அர்த்தம். இந்த பாடல் வெளிவந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. சிறு வயதில் கேட்ட, இன்றும் மிகவும் பிடிக்கின்ற ஒரு பாடல் இது.

படம் : இதய கோயில்
பாடியது. எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசை இளையராஜா

சரி நீங்களும் கேட்டு ரசியுங்க
Nan Paadum.mp3

Saturday, 24 March 2007

சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்


"சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்"


இந்த 2 வரிகளையும், இதை இயற்றியவர் மகா கவி எனும் கவிஞர் என்பதையும் 1999 ஆண்டில் அறிந்து கொண்டேன். அதை அறிவதற்கு காரணமான சம்பவம் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வுடன் இணைந்தது என்பதால் இரு வசனங்களும் அடிக்கடி நினைவில் வந்து வந்து போகும்.
அதனாலேயே இந்த இரு வரிகளையும் எனது வலைப்பதிவின் மகுட வாக்கியமாக இணைத்து கொண்டேன்.

எனது வலைப்பதிவை ஆரம்பிக்கும் போது இப்பாடலை பற்றி வினாவிய போது
இப்பாடலை எனக்கு தந்தவர் திரு. இராஜன் முருகவேள் அவர்கள். அவருக்கு எனது நன்றிகள்.


பாடலை கேடக:

Track 03.mp3



படியவர்: திருச்செல்வம்

பாடல் வரிகள்: மஹாகவி
மஹாகவி பற்றிய விபரம் தமிழ் விக்கிபிடியாவில் இருக்கிறது.
http://ta.wikipedia.org/


பாடல் வரிகள்.

ஏலேலம் ஏலேலம் ஏல வலை ஏலேலம்
ஏலோ ஏல ஏலோ தத்தெய்தாம் ஏல ஏலோ ததேய் தாம் ஏல ஏலோய் ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா....

ஆண்:
சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சிலவேளை அதை வந்து கடல் கொண்டு போகும்
(சிறு நண்டு)


பெண்:
கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட பயமொன்று காணும்
கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட பயமொன்று காணும்

ஏலோ ஏல ஏலோ தத்தெய்தாம் ஏல ஏலோய் ததேய் தாம் ஏல ஏலோய்

ஆண்:
வெறுவான வெளி மீது மழை வந்து சேரும்
வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்

வெறுவான வெளி மீது மழை வந்து சேரும்
வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்

பெண்:
நெறி மாறு கடலூடு சுழி வந்து சூழும்
நிலையானா தரை நீரில் இலைபோலியாடும்???
நெறி மாறு கடலூடு சுழி வந்து சூழும்
நிலையானா தரை நீரில் இலைபோலியாடும்???

ஏலோ ஏல ஏலோ தத்தெய்தாம் ஏல ஏலோ ததேய் தாம் ஏல ஏலோய்
ஆண்:
சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சிலவேளை அதை வந்து கடல் கொண்டு போகும்
(சிறு நண்டு)

பெண்:
கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட பயமொன்று காணும்


ஏலோ ஏல ஏலோ தத்தெய்தாம் ஏல ஏலோ ததேய் தாம் ஏல ஏலோய்.......

Thursday, 22 February 2007

மொன்றியால் செல்வகுமாரின் பாடல்கள்...

மொன்றியலில் செல்வகுமார் என்பவரின் இரண்டு பாடல்களை இணைத்துள்ளேன்.
இப்பாடலுக்கான இணைப்பு யாழ்.கொம் இணையத்தள்ளதில் பொன்னியின் செல்வன் என்பவரால் இணைக்கப்பட்டிருந்தது. இவர் காதல் வலை எனும் ஒரு இசை அல்பத்தை வெளிடிட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவரை பற்றி மேலதிக விபரம் ஏதும் தெரியவில்லை.

முதலாவது பாடல்: இந்த நிலாமுகம்
பாடியது: உன்னிகிருஸ்ணன், நிலுக்ஸி ஜெயவீரசிங்கம்



Intha Nila Mugam -...



2. உயிரான காதல் ஒன்று
பாடியது: கிருஸ்ணராஜா

UyiranaKathal - Kr...