Tuesday 29 July 2008

No Peace, No War

போஸ்டன் ரிவியு இல் வந்த நீண்ட இந்த கட்டுரை ஈழப்பிரச்சனையின் சாராம்சத்தை என் அறிவுக்கு எட்டியவகையில் ஓரளவு சரியாக சொல்கிறது போல் தெரிகிறது.

No Peace, No War
Have international donors failed Sri Lanka’s most vulnerable?

Alan Keenan

8 When I arrived last summer at the burial ceremony the ten crude wooden coffins were lined up on the concrete floor. A bare-chested Hindu priest was chanting Sanskrit verses and preparing the offerings, an assortment of freshly chopped coconuts, leaves and flowers, oil, water, and brightly colored pastes for family members to place on the coffins bearing the remains of their loved ones. As the rain gently beat on the roof of the small open-sided structure, oil lanterns of chopped coconut shells were set in front of each casket. Families began circling the coffins, sometimes joining in on the prayers, mostly remaining silent. The tears were few, though one mother broke down every time it was her turn to anoint the coffin of her son.

A hundred yards away workers had just finished digging the graves. The families followed the coffins as the sarong-clad workers carted them unceremoniously across the muddy grounds. After the burial the families boarded two white vans provided by the International Committee of the Red Cross and began their journey home to the Tamil areas in the north and east of Sri Lanka.

Colombo’s Borella Public Cemetery is filled with ornate tombstones, Christian, Buddhist, and Hindu, some inlaid with photographs of the deceased. The newly dug graves, however, are likely to remain unmarked. They contain the badly decomposed remains of ten young Tamil men, victims of Sri Lanka’s long civil war between the Sinhalese-dominated government and the separatist Tamil Tigers. The men were murdered almost four years earlier in one of Sri Lanka’s most celebrated—if now largely forgotten—massacres.

On the morning of October 25, 2000, in the quiet central hill-country village of Bindunuwewa, a mob of Sinhalese villagers and residents from the nearby town of Bandarawela stormed the government “rehabilitation” center. The minimum-security center housed 41 young Tamil men who had either surrendered to the army after being involved with the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) or been arrested on suspicion of involvement with the Tigers. While none detained at the Bindunuwewa camp were considered serious security risks, the stigma alone of being associated with the Tigers can inflame tensions in Sinhalese areas of Sri Lanka. An altercation in the camp one evening between some inmates and Sinhalese officers launched a rumor that spread quickly with help from local police: “The Tigers are attacking.” Early the next morning a crowd of hundreds, perhaps thousands, had assembled. Armed with knives and poles and gasoline, the mob hacked and burned to death 27 of the Tamil inmates. Some 60 police officers sent the previous evening and earlier that morning to guard the camp made no effort to stop the attack. Instead, some fired on inmates trying to escape, killing one and injuring two others. No one was arrested.

;
;
இது நீண்ட கட்டுரை மிகுதியை இந்த இணைப்பில் சென்று படிக்கலாம்

Sunday 27 July 2008

Prairie dog

ஏன் அணில், எலி போன்றவற்றின் வகுப்பை சேர்ந்த அணிலுக்கு மிக அண்மைய இனமான இந்த விலங்குகளுக்கு பிரயரி நாய் என பெயர் வைத்தார்கள் தெரியவில்லை??? இவை கத்துவது நாயின் குரல் போல இருப்பதால் பிரயரி நாய் என பெயர் வைத்தார்களாம்.
விக்கிபீடிய சொல்வது போல் இவை முத்தமிடும் காட்சியை காண முடிந்தாலும் புகைப்படக்கருவியை தயாராய் வைத்திருக்காமையால் அதை புகைப்படமாக்க முடியவுல்லை :(( .

கதிர்காமத்தில் குரங்குகள் பழங்களுக்கும் உணவுக்கும் அங்கு போபவர்களை துரத்துவதும், கொடுத்தால் வெகு அருகில் வந்து வாங்கி உண்பது போலவே பிரயரி நாய் எனப்படும் அணில்களும் விலங்கு காட்சியகத்துக்கு செல்பவர்கள் உணவு கொடுத்து பழக்கியதால் போபவர்களுடன் வெகு நட்பு பாராட்டி கையில் உணவு வாங்கி உண்பதையும் புகைப்படக்கருவிக்கு அழகாக "போஸ்" கொடுப்பதையும் காணலாம்.

Assiniboine Park Zoo, Winnipeg, Manitoba
27/07/08









Tuesday 22 July 2008

பட விளையாட்டு

12/07/08
Kenora, ON, Canada

இது சும்மா விளையாடி பார்த்தது.









Posted by Picasa








சுட்ட கத்தரிக்காய்ச் சம்பல்

சுட்ட கத்தரிக்காய்ச்சம்பல்

தேவையான பொருட்கள்

ஒன்று/ இரண்டு பேருக்கு

4 - மேசைக்கரண்டி தயிர்

1 - பெரிய கத்தரிக்காய்







* சுட்ட சம்பலின் நிறம் வெளிர்ப்பாக இருக்க வேண்டும் என விரும்பினால் வேள்ளை கத்தரிக்காய் தான் நன்றாக இருக்கும்.

* வெள்ளை கிடைக்கவில்லை என்றால் ஊதா கத்தரிக்காய் பாவிக்கலாம். நீண்ட கத்தரிக்காயை தான் பெரிய கத்தரிக்காய் என சொல்லியுள்ளேன்.





நீண்ட கத்தரிக்காய் கிடைக்கவில்லையென்றால் சிறிய வெள்ளை/ ஊதா கத்தரிக்காயும் பாவிக்கலாம். நான் சிறிய கத்தரிக்காயை தான் பாவித்து செய்தேன்.

5-6 - சிறிய வெங்காயம்
2 - பச்சை மிளகாய்
1/2- தே. கரண்டி மிளகு
சுவைக்கு- உப்பு
அலுமினியத் தாள்


செய்முறை


1. போறணை/ Oven ஐ 230 பாகை செல்சியல்லில் சூடாக்கவும்

2. கத்தரிக்காய் மூழை நீக்கி அலுமினியத தாளினால் முழுமையாக மூடி சுற்றவும். சுற்றியபின் முள்ளுகரண்டி (Fork) மூலம் இரண்டு மூன்று இடங்களில் குற்றி தூளை செய்யவும் (இது நீராவி வெளியேற உதவும்)





3. கத்தரிக்காயை சூடான Oven இல் 25- 30 நிமிடம் சுடவும்



4. கத்தரிக்காய் சுடும் நேரத்தில் வெங்காயம், பச்சை மிளகாயை மிகச்சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்



5. 25-30 நிமிடங்களின் பின் கத்தரிக்காயை வெளியே எடுத்து சிறிது குளிர்ந்ததும் அலுமினியம் தாளை அகற்றவும்.




( கீழே உள்ள படத்தில் உள்ளது போல் தோல் சுருங்கி வரும். நான் வெள்ளை நிற பெரிய கத்தரிக்காய் இங்கு கிடைக்காதாதால் ஊதா நிற சிறிய கத்தரிக்காயை பாவித்தேன். இப்படி கபில நிறமாக வருவதை விரும்பாதவர்கள் வெள்ளை கத்தரிக்காயை பாவிக்கலாம்.)






6. மேலும் கையால் தோலை உரிக்கக்கூடிய சூடு வரும் வரை குளிர விட்டு தோலை உரித்து கொள்ளவும்

7. சிறிய கத்தரிக்காய் என்றால் 4 ஆக, பெரிது என்றால் 8 ஆக பிளந்து சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.

8. அரிந்த கத்தரிக்காயுடன், அரிந்து வைத்த வெங்காயம், மிளகாய், உப்பு, மிளகுத்தூள் என்பனவற்றை சேர்த்து கலக்கவும்





9 இறுதியில் தயிரை சேர்த்து நன்கு கலந்தால் சுவையான சுட்ட கத்தரிக்காய்ச் சம்பல் தயார்

இதனை சோற்றுடன் உண்ணல்லாம்.






குறிப்பு.

1. ஊரில் தயிரிற்கு பதிலாக இதற்கு தேங்காய்ப்பால் (முதற்பால்) சேர்த்து செய்வார்கள்
2. தயிரிற்குபதிலாக sour cream உம் பாவிக்க முடியும்



நீங்களும் தயிரிற்கு பதிலாக தேங்காய்ப்பால்/ sour cream பாவித்து செய்து பார்த்து எது சுவையானதோ அதை தொடருங்கள்.


3. கத்தரிகாய் சுடுவதற்கு தேவையான நேரம், கத்தரிக்காயின் பருமன், Oven இன் வகை என்பவற்றுக்கு ஏற்ப மாறுபடும். 20 நிமிடத்தின் பின் வெளியே எடுத்து திறந்து பார்த்து படத்தில் காட்டியுள்ளது போல் தோல் சுருங்கி வந்திருந்தால் வெளியே எடுக்கலாம். இல்லாது விடின் மீண்டும் மூடி 5- 10 நிமிடம் சுடவும்.






Sunday 20 July 2008

அந்தி வானம்

Lakes of Woods, Kenora, ON, Canada
கெனொர, ஒன்ராறியோ, கனடாவில் உள்ள ஏரிக்கரையோரத்து அந்திப்பொழுது. படத்தை மெருகூட்டினேனா? அசிங்கப்படுத்தினேனா? என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.















Tuesday 15 July 2008

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை :(

இது ஒரு மீள் பதிவுடன் புதிதாக ஒரு சிறு குறிப்பும் :).






ஆடி பிறப்புக்கு நாளை விடுதலை என்று நவாலியூர் சோமசுந்தரப்புலவர் என்னவோ பாடி விட்டார். என்னக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து சனி, ஞாயிறு தினங்களில் வந்த ஆடிப்பிறப்பை தவிர ஏனைய ஆடிப்பிறப்புக்களுக்கு எமக்கு விடுமுறை எல்லாம் இல்லை. அப்பா, அம்மா இருவரும் வேலை செய்பவர்கள் ஆகையால் அதிகாலையில் எழுந்து உரலில் மா இடித்து கூழ் வைத்து, கொழுக்கட்டை அவித்து சாப்பிட்டு விட்டு பள்ளிகூடம் போய் தான் பழக்கம்.


ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

-நவாலி சோமசுந்தரப்புலவர்




பாடல்: VSK கானா பிரபா ஆகியோரின் பதிவில் இருந்து.


ஆடி பிறப்பை நினைவுபடுத்திய கானா பிரபாவுக்கு நன்றி.

Monday 14 July 2008

PIT போட்டிக்கான காலம் முடிவடைந்துவிட்டாலும் இரவு நேர புகைப்படங்கள் சில














கனடா நாட்டு நேரம் இன்னும் இருக்கு. ஆனால் போட்டி முடிவு திகதி இந்திய நேரம் :((

Thursday 10 July 2008

வாத்து









Wednesday 9 July 2008

கறி வேம்பும், செவ்வரத்தையும்

எங்கட வீட்டிலை நட்டிருக்கிற செவ்வரத்தை முதல் பூ பூத்திருக்கு.








பக்கத்திலை ஒரு கறிவேப்பிலை செடியும் நட்டிருக்கு.

சோயா இறைச்சி பொரியல்

  • சோயா இறைச்சி பொரியல்


    தேவையான பொருட்கள்


    2 பேருக்கு

    50 கிராம் - சோயா மீற்/ chunks/இறைச்சி
    2- பெரிய சிவப்பு வெங்காயம்
    3 தே.கரண்டி - யாழ்ப்பாண கறி தூள் (கனடாவிலை நிறைய வகை கறி தூள் இருக்கிறதாலை நம்ம ஊர் கறி தூளுக்கு யாழ்ப்பாண கறி தூள் எண்டு பெயர் போட்டிருக்கும்)
    சுவைக்கேற்ப - உப்பு
    1/4 தே. கரண்டி - மஞ்சள் தூள்
    5 மேசை கரண்டி - நல்லெண்ணேய்/ சூரிய காந்தி எண்ணேய்
    3 கப் - சுடு நீர்
    2 நெட்டு - கறி வேப்பிலை
  • 1- தேசிக்காய்




    செய்முறை

  • நன்கு கொதித்த சுடு நீரை மூடக்கூடிய ஒரு பாத்திரத்தில் இட்டு சுவைக்கு உப்பு சேர்த்து அதனுள் சோயா இறைச்சியை கொட்டி 10 நிமிடம் மூடி ஊற வைக்கவும்
  • வெங்காயத்தை தோல் உரித்து, நீளம் நீளமாக வெட்டி கொள்ளவும்
  • வெங்காயத்துக்கு சுவைக்கேற்ப உப்பு, 2 தேக்கரண்டி கறித்தூளை சேர்த்து கிளறி 2 நிமிடம் வைக்கவும்
  • ஊறிய சோயா சோயா இறைச்சியை வடிகட்டி எடுத்து குளிர் நீரில் களுவி கொள்ளவும், பெரிய துண்டுகளாக இருந்தால் சிந்தாமணி கடலை அளவு துண்டுகளாக வெட்டவும், (சந்தையில் சிறிய துண்டுகாள உள்ள சோய இறைச்சியும் கிடைக்கும், அதை வெட்டி துண்டாக்க தேவையில்லை)
  • வெட்டிய/ வடி கட்டி எடுத்த சோயா துண்டுகளுக்கு 1 தே கரண்டி கறித்தூள், மஞ்சள், உப்பு என்பவற்றை போட்டு பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்கவும்
  • பொரிக்கும் (அடிப்பிடிக்காத/ ஒட்டாத/ non stick) சட்டியில் 3 மேசகரண்டி எண்ணேய் விட்டு மென்சூட்டில் சூடக்கி அதில் கறித்தூள், உப்பில் பிரட்டி வைத்த வெங்காயத்தை போட்டு வெங்காயம் மெதுமையாக வரும் வரை வதக்கவும்/ பொரிக்கவும்
  • வெங்காயம் வதங்கி வந்ததும் ஊற வைத்த சோயா இறைச்சியை கொட்டி, மிகுதியாக இருக்கும் எண்ணேயை சேர்த்து மேலும் ஒரு 2-3 நிமிடம் கிளறி, கறிவேப்பிலையை சேர்த்து இறக்கவும்
  • பொரியல் சாப்பிடக்கூடிய சூட்டை அடைந்ததும் புளிப்பு சுவையை விரும்புபவர்கள் பாதி தேசிக்காயை பிளிந்து, நன்கு கிளறவும்
  • இப்போ சுவையான சோயா இறைச்சி பொரியல் தயார்.
  • இதனை சோறு, புட்டு ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.


Wednesday 2 July 2008

யாழில் இருந்து லங்கா முடித்தவில் திருமலைக்கு - 1

யாழ் குடா நாடு 95 இல் இராணுவக்கட்டுப்பாட்டில் வந்த பின் யாழ் குடா மக்களுக்கான பாதையாக இருந்து வந்த, அதே நேரம் பல பேரை பலி கொண்டதுமான கிளாலி பாதையூடான பயணம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் யாழ் மக்களுக்கான போக்கு வரத்துக்கு காங்கேசன் துறையில் இருந்து திருகோணமலைவரையான கப்பல் மார்க்கமும், பலாலியில் இருந்தான விமான பயணமுமே அமைந்திருந்தது. முதலில் கப்பலிலும், பின்னர் விமானத்திலும் பயணம் செய்திருக்கிறேன். அந்த பயணங்களை மேற்கொள்ள முன்னர் நாம் பட்ட அலைச்சல்கள் கொஞ்ச நஞமல்ல. இந்த பதிவில் கப்பல் பயணத்தின் அனுமதி, பயணசீட்டு பெறல், கப்பலில் பயணித்து திருகோணமலையை சென்று சேரும்வரை பட்ட அவஸ்தைகளை பார்க்கலாம். கப்பல் என்றால் அது பயணிகள் கப்பல் அல்ல, சரக்குகளை ஏற்றி செல்லும் சரக்கு கப்பலில் எந்த அடிப்படை வசதியும் இன்றி பயணிக்க வேண்டும்.
அந்த கப்பல் கீழே உள்ள கப்பலின் தரத்தில் அல்லது அதை விட சிறிது நல்ல நிலையில் இருக்கும்.






**********


இப்போதும் யாழ் குடா நாட்டு மக்கள் வெளியே பயணிப்பதற்கான பாதைகளாக விமான பயணமும், கப்பல் பயணமுமே அமைந்திருக்கிறது. முன்னரை விட இப்போது பயண அனுமதியை பெறுவதற்கு இன்னும் சிரமப்பட வேண்டியிருப்பதாக அறிய முடிந்தது.


**************


யாழ் குடாநாடு இராணுவக்கட்டுப்பாட்டில் வந்த பின் திறந்த வெளிச்சிறைசாலையான யாழில் இருந்து மக்கள் வெளியே மக்கள் செல்வதற்கு நிறைய கட்டுப்படுகள் இருந்தன. யாரும் தமக்கு தேவையான நேரத்தில் யாழ் குடா நாட்டுக்கு வெளியே சென்றுவிட முடியாது. பயணத்துக்கான அனுமதியை பெறுவதற்கு குறைந்தது ஒரு மாதங்களாவது காத்திருக்க வேண்டும். அலுவலக, கல்வி நிமித்தம் செல்பவர்களுக்கு வேறு நடைமுறையும், சாதாரண பொதுமக்களுக்கு/ தனிப்பட்ட காரணமாக பயணிப்பவர்களுக்கு வேறு நடைமுறையும் இருந்தன.

சாதாரண பொதுமக்களாக/ தனிப்பட்ட தேவைகளுக்கு பயணிப்பவர்களாக இருந்தால்

இராணுவத்திடம் இருந்து பாதுக்கப்பு பயண அனுமதி பெறும் விண்ணப்பப்படிவத்தை பெற்று அதை பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவம், 2 அல்லது 3 (சரியாக நினைவில் இல்லை) புகைப்படங்களுடன் கிராம அதிகாரியிடம் சான்று படுத்தவேண்டும், பின்னர் உதவி அரசாங்க அதிபர் (இந்தியாவில் சப்-கலக்டர்) அலுவலகத்தில் சான்றுபடுத்தி, குறிப்பிட்ட கிராமத்துக்கு பொறுப்பான இராணுவ முகாம் அதிகாரியிடம் உறுதிபடுத்தல் கையொப்பம் வாங்க வேண்டும். இவர்கள் அனைவரது உறுதிப்படுத்தலும் குறிப்பிட்ட நபர் பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர் என்ற சாரப்பட இருக்க வேண்டும். சிவில் அரச அலுவலர்களின் கையொப்பத்தை 2 நாட்களில் பெற்றுவிட முடியும். ஆனால் குறிப்பிட்ட கிராமத்துக்கு பொறுப்பான இராணுவ அதிகாரியின் கையொப்பம் பெற பல முறை அலைந்து கையொப்பத்தை பெற ஒரு வாரம் ஆகிலும் தேவைப்படும். அத்துடன் குறிப்பிட்ட நபர் நேரடியாக இராணுவ முகாமுக்கு செல்ல வேண்டியிருக்கும். இந்த மூன்று பேரிடமும் கையொப்பம் பெற்ற பின் அந்த பிராந்தியத்திற்கு பொறுப்பான இராணுவ முகாமில் விண்ணப்பத்தை கையளிக்க வேண்டும். அவர்கள் அதை உறுதிப்படுத்தி பலாலியில் உள்ள இராணுவ சிவில் (இராணுவம் அதில் என்ன பின் சிவில் என்று ஆச்சரிய படுகிறீர்களா? பொதுமக்களின் பயண ஒழுங்கு அனுமதியை வழங்கும் அலுவலகம் அப்படி தான் அழைக்கப்படும்) அலுவலக்கம் எல்லா தகவல்கள், ஆவணங்களையும் சரி பார்த்து நிராகரிக்கும் அல்லது அனுமதிக்கும். அந்த அனுமதி கிடைக்க குறைந்தது 2 வாரங்களாவது செல்லும். ஆனால் இரண்டு வாரத்தில் கிடைக்கும் என்று வீட்டில் இருந்தால் 2 மாதம் ஆனாலும் கிடைக்காது. இரண்டு வாரம் முடியும் தறுவாயில் குறிப்பிட்ட பிரதேசத்துக்கு பொறுப்பான இராணுவ முகாமுக்கு போனால் இன்று வா, நாளை வா என இழுத்தடித்து பயணத்துக்கான அனுமதி முன்று அல்லது நான் கு வார முடிவில் கையில் கிடைக்கும். கிடைத்த அனுமதி கூட 1 அல்லது 2 மாதம் மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் கப்பலில் அல்லது விமானத்தில் இடம் கிடைக்காவிட்டால் மீண்டும் பாதுகாப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதுவே அலுவலக காரியமாக/ அல்லது கல்வி காரணங்களுக்காக செல்வோருக்கு பதுகாப்பு அனுமதி முறை வேறானது, சற்று இலகுவானது. எனது பயணம் கல்வி பயணமாக இருந்ததால் இந்த முறையிலேயே நானும் எனது பள்ளி தோழர்கள், மற்றும் எம்முடன் துணை வந்த ஆசிரியர்களும் அனுமதி பெற்றோம். அதைப்பற்றியும், கப்பல் பயண சீட்டு பெறுவது பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.





தொடரும்...............