Thursday 28 June 2007

Chamomilla தேனீர் குடிச்சிருக்கீங்களா?

புலம் பெயர்ந்த புதிதில் உணவகங்களில் தேனீர் அருந்துவதே பெரும் சிக்கலான விடயமாக இருக்கும். பல சுவைகள், எலுமிச்சை, ஸ்ரோபரி, ..... இப்படி பல. அதிலும் நாமே எல்லத்டையும் தெரிவு செய்யும் வகையில் இருக்கும் உணவகங்களில் எந்த தேயிலையை தெரிவு செய்வது என தெரியாமல் கிடைக்கும் ஒன்றை தூக்கி கொண்டு போய் சுடுதண்ணிக்க போட்டா தேத்தண்ணியிம் நிறமும் வராது குணமும் வராது... குடுத்த காசை நினைச்சு மிண்டி விழுங்கி போட்டு எழும்பிவாறது. பால் தேத்தண்ணிக்கு கறுவா போட்ட தேயிலையை தூக்கி கொண்டு போய் அதொட பட்ட அவஸ்தை இன்னும் மறக்கேல்லை.

ஒருமுறை உறவினர் வீட்டுக்கு போய் இருந்த போது குழந்தையின் வயிற்று உபாதையோ? அல்லது வேறு என்னவோ ஒரு சிறிய உடற் பிரச்சனைக்கு Chamomila தேனீர் நல்லாது என கொடுத்தார்கள். ஆனால் நான் அதை சுவைத்து பார்க்கவில்லை. அன்று அந்த தேயிலை பொதியில் பார்த்த பெயரும், பூவின் படமும் மனதில் பதிந்துவிட்டது.

கமராவும் கையுமாக தெருவோரம் திரியும் போது மீண்டும் Chamomile தாவரத்தை தெருவோரம் கண்ட போது தான் மருத்துவ குணமுள்ள தாவரம், தேனீரில் கலக்கப்படுவது என்பதும் ஞாபகம் வந்தது.
சரி என படமும் பிடித்து இணையத்தில் தேடியதில் கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.











Chamomilla, சூரிய காந்தி, மூக்குத்தி பூண்டு, செவ்வந்தி.... ஆகியவை தாவரவியலில் Asteraceae ( பழைய பெயர்: Compositae)எனும் பெயரை கொண்ட குடும்பத்து தாவரங்களாகும். பூக்கும் தாவரங்களிலேயே மிக அதிக எண்ணிக்கையான இனங்களை (Genera) (அண்ணளவாக 1100 இனங்கள்)மற்றும் ஒவ்வொரு இனமும் பல சாதிகள் (species) என மொத்தமாக 20, 000 மேற்பட்ட தாவர சாதிகளை கொண்ட ஒரு குடும்பமாகும்.

இந்த குடும்பத்து தாவரங்களில் சூரிய காந்தி சமையல் எண்ணெய்க்கு பயன்படுகிறது. இன்னும் சில மருத்துவ குணம் நிறைந்தவை. ஏனையவை பயிர் நிலங்களில் களைகளாக காணப்படுபவை.

Chamomilla recutita எனும் தாவரவியற் பெயரை கொண்ட இந்த தாவரம் பயிர்ச் செய்கை நிலங்களில் களையாக கருதப்பட்டாலும் பல மருத்துவ குணங்களை கொண்டது.

இதனுடைய பூ, மற்றும் முதிர்ந்த பூவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணேய் என்பன மருத்துவ தேவைக்கு பயன்படுத்தபடுகிறன.

பிரித்தெடுக்கப்படும் எண்ணெயின் தொழிற்பாடுகளாக

anti-inflammatory
spasmolytic
vulnerary
antimicrobial
mild sedative
carminative
antiseptic
anticatarrhal

இதன் மருத்துவ பயன்பாடுகளாக

1. Insomnia, anxiety and nervous tension ஆகியவற்றிற்கு மருந்தாக

2. சமிபாட்டு குழப்பங்களை போக்கும் நிவாரணியாக பயன்படுகிறது. எண்ணேயில் இருக்கும் வெவ்வேறு கூறுகள் வெவேறு வகையில் சமிபாட்டு தொகுதியின் நலனில் பங்களிக்கிறன. குறிப்பாக இரைப்பை, குடல் போன்றவற்றில் காணப்படும் தசைகளை தளர்வடைய செய்தல் (relaxes), குடற்சுவர் எரிவை போக்குதல் (flatulence and irritation of the gut wall), பசியை தூண்டுதல், குடலில் ஏற்படும் அழற்சியை (inflammation)போக்குதல் ஆகியன.

3. நோயெதிர்ப்பு சக்தியை கூட்டல், குறிப்பக பக்ரீரியாக்களை கொல்லுதல்
4. eczema க்கு பூச்சாக, கண், மற்றும் வாய் சுத்தபடுத்தும் பொருளாக ( mouthwash or eyewash) பயன்படுத்த கூடியது.

ஆகியவை சொல்லப்படுவதோடு

5. பாரம்பரியமாக asthma and hayfever போன்றவற்றுக்கு மருந்தாக பயன்படுத்தபடுவதாகவும் சொல்கிறார்கள்.



ஆனால் மனிதரிற்கு ஏற்படகூடிய சாதக, பாதகங்கள் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சிகள் இன்னும் போதுமான அளவில் நடைபெறவில்லை என சொல்லப்படுகிறது.

4 comments:

said...

இதுவரை குடிச்சது இல்லை. ஆனால் மருத்துவ குணம் உள்ளது என்று துக்ளக் சோ அடிக்கடி சொல்வார்.

said...

ippa thaan kelvi padoran, nalla thakaval

said...

நல்ல தகவல்!
தேடிக் குடிப்போம்.

said...

உண்மை தமிழன்
கானாபிரபா, யோகன் அண்ணா நன்றி